இந்த மாதம் எனது ஆன்லைன் பிசினஸ் வருவாய் இலட்சத்தினைத் தாண்டி உயர்வாகக் கிடைத்துள்ளது. இதற்கான அடிப்படை எனது கடின உழைப்பும்... முழுமையான எனது நம்பிக்கையும், தொடர்ச்சியான தேடலும்.
இன்னும் நான் தொடர்ந்து தேடலில் ஓடிக்கொண்டே தான் இருக்கிறேன், எனது கோடீஸ்வரன் என்ற டைட்டிலை நிரூபணம் செய்துக் காட்டுவதற்காக.
பெரியோர்கள் கூறிய கூற்றான, "நாம் என்ன நினைக்கிறோமோ அதுவாகவே நாம் ஆகிறோம்" என்பதன் உண்மைத் தன்மையினை நானும் கண்கூடாகப் பார்த்துக் கொண்டிருப்பதோடு இல்லா இருப்பான ஆதியின் சக்தியினையும் உணர்கிறேன்.
தன்னகத்தே கிடைப்பதனைக்காட்டிலும் பெரிதாக எதுவும் பிறரிடத்தில் கிடைக்கப் போவதில்லை என்றக் கருத்தில் எப்பொழுதும் உறுதியாக இருங்கள்.
இலட்சங்கள் சம்பாதிப்பது ஒன்றும் கடினமில்லை. நமது மனதினை திடப்படுத்தி, பிடிவாதமாக உறுதிப்படுத்திக் கொண்டால் போதும், கண்டிப்பாக இலட்சம் இலட்சமாகச் சம்பாதிக்கலாம்.
போலியான இந்த உலகத்தில், போலி என்றுச் சொல்ல கோடான கோடி இருக்க, போலி இது என்றுச் சொல்வதில் இங்கு ஒன்றும் விதிவிலக்கல்ல.
ஆன்லைன் ஜாப் என்ற வார்த்தையைக் கேட்டாலே அலறியடிக்கும் தமிழ் கூட்டத்தின் மத்தியில் தான் எனது ஆரம்பக்கட்டத்தினைத் தொடங்கியதோடு எத்தனையோ கேள்விகளைத் தாண்டி எனது ஆன்லைன் பணியினை கடந்த 9 வருடங்களாகத் தொடர்ந்து கொண்டிருப்பதோடு, வருவாயும் இலட்சத்தில் சம்பாதிக்க ஆரம்பித்துவிட்டேன்.... அடுத்து விரைவில் கோடீஸ்வரன் ஆகப்போகிறேன்.
No.1 Tamil Online Job Site என்றக் கூற்றில் எப்பொழுதும் நமது படுகை.காம் முதன்மையாக இருக்க, முதன்மையாக தமிழில் தொடங்கப்பட்டு ஆன்லைனில் வருவாய் பார்க்க அவசியமானதினை சிறப்பாக சொல்லிக் கொடுத்து வழிநடத்தியது நமது படுகை.காம்
நீங்கள் புதியவர்களாக இருந்தாலும் சரி, பழையவர்களாக இருந்தாலும் சரி, வருவாய் பார்க்க வேண்டும் என்றுச் சொன்னால் அதற்கான அடிப்படையை சரியாகப் புரிந்து கற்றுக் கொள்ளுதல் வேண்டும்.
உங்களுக்கு ஆன்லைன் ஜாப் பற்றித் தெரியவில்லை என்றுச் சொன்னால், அதனை ஒருவர் சொல்லிக் கொடுத்தால் செய்யத் தயார் என்றுச் சொன்னால் கடைபிடிக்கப்பட வேண்டியவை,
படுகையில் நிறைய ஆன்லைன் ஜாப் தகவல்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றினைப் கண்டிப்பாக படியுங்கள்.
ஒர் பதிவினைப் படித்தீர்கள் என்றுச் சொன்னால், அப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்களின் உண்மைத்தன்மையினை கொஞ்சம் சிந்தியுங்கள். அப்பதிவு யாரால் எழுதப்பட்டது என்று பாருங்கள், அவர்க்கான தகுதி என்ன என்றுப் பாருங்கள்... அதன் பின்னர், அப்பதிவில் பின்னூட்டமிட்டு தேவையான கூடுதல் தகவல்களைக் கேளுங்கள்.
ஒன்றுமே இல்லாமல் வெறும் நாலு லைன் எழுதியிருக்கிறார் என்றுச் சொன்னால், அவர் இதற்கு முன்னர் எத்தனை டாபிக் எழுதியிருக்கிறார்... அவ்வாறு எழுதிய டாபிக்கில் ஆன்லைன் ஜாப் எவ்வாறு செய்வது என்றத் தகவல்கள் கொடுத்திருக்கிறாரா என்று தேடிப்பாருங்கள்.
கொடுத்த பதிவிலும் பணி விவரம் கொடுக்கவில்லை... இதற்கு முன் பிறப் பதிவுகளிலும் ஆன்லைன் ஜாப் எவ்வாறு செய்து சம்பாதித்தேன் என்ற தகவல் விளக்கமாக இல்லை என்றுச் சொன்னால், கண்டிப்பாக அவரிடம், அந்த ஆன்லைன் ஜாப் பற்றிக் கேட்காதீர்கள்.
தனக்குத் தெரிந்த ஒன்றினைத்தான் பிறர்க்குச் சொல்லிக் கொடுக்க முடியும். அப்படியிருக்க, இப்படி வேலை செய்தல் வேண்டும் என்ற தகவல் தனக்குத் தெரியும் என்பதனையும் வெளிப்படுத்தாதவர், தான் இவ்வாறு சம்பாதித்துவிட்டேன் என்ற உண்மை ஆதாரத்தினை வெளியிடாதவர்கள் கண்டிப்பாக பிறர்க்கு பணியினைச் சொல்லிக் கொடுக்கத் தகுதியினை உடையவராக இருப்பாராகினும்... எனது கருத்து, அவர்களைப் பின் தொடராதீர்கள். அவர்கள் கற்றுக் கொள்பவராக இருப்பார்கள், அவர்களிடம் நீங்கள் கற்றுக் கொள்ள எதுவும் இருக்காது.
ஒர் டாபிக் படித்தீகள் என்றுச் சொன்னால், கண்டிப்பாக அதற்கான பின்னூட்டத்தினையும் படியுங்கள். இவற்றினைப் படிக்க உங்களுக்கு 2 நாட்கள் ஆகுமாயினும்.. அதுவே உங்களது பணி.. அதனைப் படிக்காமல் பணி வேண்டும் என்றுச் சொல்லிக் கொள்வது உங்களை நீங்களே ஏமாற்றிக் கொள்வது. இங்கு யாரும் உங்களை ஏமாற்றுவதற்காக இல்லை. ஆனால் நீங்கள் உங்களுக்கான அடிப்படையை சரியாகச் செய்யாமல் ஏமாந்து கொள்கிறீர்கள்.
ஒவ்வொரு பதிவும் ஒவ்வொரு மனிதர் என்ற ரீதியில் கையாளுங்கள்... அதாவது, எந்தப் பதிவில் என்னக் கொடுக்கப்பட்டிருக்கிறதோ, அதனைப் பற்றிய கேள்வியினை மட்டும் அப்பதிவில் கேளுங்கள்... இல்லாவிட்டால் தனியாக ஒர் சப்போர்ட் பதிவு திறந்து கொள்ளுங்கள். பிற தளத்தினைப் பற்றி எழுதப்பட்டிருக்கும் பதிவில் மற்றொரு தளத்தினைப் பற்றிக் கேட்க வேண்டாம்.
கேள்விகளைக் கேட்பதற்கு முன் ஒர்முறைக்கு இருமுறை கொடுக்கப்பட்டதனைப் படித்துக் கொள்ளுங்கள். அப்படியும் புரியவில்லை என்றுச் சொன்னால், ஒர் நாள் அதனைப் பற்றிச் சிந்திக்க நேரமெடுத்துவிட்டு பின்னர் கேளுங்கள்... ஏனெனில் பல கேள்விகளுக்கும் உங்களிடம் பதில் இருக்கும், ஆனால் அதனை சிந்தனை செய்து பயன்படுத்திக் கொள்வதில்லை. ஆகையால், கொஞ்சம் நிதானமாக யோசித்துவிட்டு கேள்விகளைக் கேளுங்கள்.
ஒரே நாளில் சம்பாதித்துவிடலாம் என்று நினைக்காதீர்கள், ஆனால் கண்டிப்பாக சம்பாதிக்க முடியும் என்ற நம்பிக்கையோடு விடாமுயற்சியோடு போராடினால்... ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அனுபவப் பாடத்தினைக் கற்றுக் கொடுத்து உங்களைச் சம்பாதிக்க வைத்துவிடும்.
ஆகையால் தானும் இலட்சம் ரூபாய் மாதம் சம்பாதிப்பேன் என்ற நம்பிக்கையோடு தினம் தினம் வரும் புதிய பதிவுகளைப் படித்து நிறையக் கற்றுக் கொள்ளுங்கள்.
உங்களுக்கு எவ்வளவு சம்பாதிக்க வேண்டும் என்று நினைக்கிறீர்களோ, அதற்குத் தகுந்தப் பணியினைத் தேர்ந்தெடுத்துச் செய்யுங்கள்.
எனக்கு இதுதான் தெரியும்.. ஆனால் இலட்சம் சம்பாதிக்க வேண்டும் என்று ஆசைப்படுவது பேராசை ஆகிவிடும்.
அதற்காக ஆசைப்பட்டது எல்லாம் கிடைக்கும் என்றுச் சொன்னீர்களே என்று நினைக்காதீர்கள். நீங்கள் ஆசைப்பட்டுச் செய்தது, தனக்குத் தெரிந்தது... எளிமையானது என்ற பத்து ரூபாய் வருவாய் கொடுக்கும் பணியாக இருந்தால்... அந்தப் பத்துக்கு மேல் கிடைக்கும் என்று நினைப்பது தவறு இல்லையா!!!
ஒவ்வொருவருக்கும் நேரம் 24 மணி நேரமே... அந்த 24 மணி நேரத்தில் தான் ஒருவர் கோடிகள் சம்பாதிக்கிறார்.. ஒருவர் ஆயிரம் சம்பாதிக்கிறார் என்ற வேறுபாடுகள். நான் 24 மணி நேரமும் டேட்டா என்ட்ரி ஜாப் கொடுத்தால் செய்வேன்.... எனக்கும் மாதம் இலட்சம் வேண்டும் என்று நினைத்தால் அது நிராசையாக மாறிவிடும்.
அதே நேரத்தில் இலட்சம் ரூபாய் சம்பாதிக்க இந்தப் பணி உகந்ததாக இருக்கும் என்று நினைத்துவிட்டால்... அது தெரியாவிட்டாலும், அதனைக் கற்றுக் கொள்ள உங்களது நேரத்தினைச் செலவிட்டால், கண்டிப்பாக அதில் நிறைவான வருவாய் பார்க்கலாம்.
படுகையில் அதிக வருவாய் கொடுக்கக்கூடிய பணிக்கான பாடங்கள் நிறையவே கொடுக்கப்பட்டுள்ளன.. அவற்றினைப் படித்துக் கற்றுக் கொள்ளலாம்.. அதில் ஏதேனும் சொல்லப்படாவிட்டாலும் கேட்டால் பதில் கிடைக்கும். ஆகையால் நல்ல வருவாய் கொடுக்கும் பணிகளைக் கற்றுக் கொள்ளுங்கள்.
மாதம் இலட்சம் சம்பாதிக்க வேண்டும், விரைவாக கோடீஸ்வரன் அல்லது கோடீஸ்வரி ஆக வேண்டும் என்று மனதில் எப்பொழுதும் நினைத்துக் கொள்ளுங்கள். கோடீஸ்வரன் ஆக பணிகள் கொடுக்கப்பட்டிருந்தால்.. அதனைப் படித்துக் கற்றுச் செய்யுங்கள். க
கஷ்டமானது எதுவுமே இங்கு கொடுக்கப்படவில்லை. படுகையில் கொடுக்கப்பட்டிருக்கும் அனைத்து ஆன்லைன் ஜாப்களும் வீட்டிலிருந்தப்படியே நாம் நினைத்த நேரத்தில் செய்யக்கூடிய பணிகளே. ஆகையால், தெரியாவிட்டாலும் முயற்சித்து கற்றுக் கொள்ளுங்கள்.. கண்டிப்பாக நிறைய நிறைய சம்பாதிக்கலாம்.
அதிர்ஷ்டத்தினை நம்புகிறீர்களோ இல்லையோ, உங்களது உள் மனதினை உறுதியாக நம்புங்கள்.
ஏனெனில் இந்த மாதத்தில் ரூ.15000 வருவாய் வரக் காரணமாக இருந்த indiancashier.com தளத்திற்கு நான் செலவிட்டத் தொகை வெறும் ரூ.1400 மட்டுமே... அதன்மூலம் வருவாய் வரும் என்ற நம்பிக்கையில் தான் இந்த வருடமும் அந்த டொமைனை புதுப்பித்து என் பெயரிலையே வைத்துக் கொண்டேன்... அவ்வாறு 16 மாதங்களுக்கும் மேலாக நம்பிக்கையோடு இருந்ததன் பலன் இந்த மாதத்தில் ஆன்லைன் மூலம் கிடைத்த ஒர் கிளையண்ட் செய்த பெரிய எக்சேஞ்ச் டீலில் ரூ.15,000 வருவாயாகக் கிடைத்தது.
படுகையில் கொடுத்துள்ள பணிகள் பல உறுதியாக வருவாய் கொடுக்கக்கூடியவை. ஆகையால், உங்களது பணியினை முழு அர்ப்பணிப்போடும், நம்பிக்கையோடு விடாமுயற்சியோடும் கொடுத்தால் அதற்கான பலனை கண்டிப்பாக அடைவீர்கள்.
அனைவரும் இன்றைய அவசிய வருவாயான மாதம் இலட்சத்தினைச் சம்பாதிக்க வாழ்த்துகள்.
(online siru tholil) - siru thozhil