மனைவி ஊருக்குச் சென்றதை அவள் வந்து சேர்ந்ததாக உறுதிபடுத்தியபிறகு தங்கமணி டயலாக்கை சத்தமாகச் சொல்லிவிட்டு நண்பர்கள் ஒவ்வொருவராக அழைத்தான் குமார்.
"இல்லை மச்சி......இன்னிக்கு மதியம் ஒரு வேலை இருக்கு......வேண்டுமென்றால் ஒண்ணு செய் மாலை 5 மணிக்கு நேராக என் வீட்டுக்கு வந்திடு......என் வீட்டிலும் நோ தங்கமணி" எடுத்த எடுப்பில் ராகவன் இவ்வாறு சொன்னதால் ஐந்து மணி வரை தனிமையில் ஓட்டியாகனுமேன்னு சற்று ஏமாற்றமாகவே இருந்தது, இருந்தாலும் ஐந்து மணிக்கு ராகவன் வீட்டில் குமார் ஆஜர்.
கண்ணாடி போல் துடைத்து வைக்கப்பட்ட தூய்மையாக இருந்தது ராகவன் வீடு,
"என்ன ராகவா..பொண்டாட்டி ஊருக்குப் போய் வாரம் ஆச்சுன்னு சொன்னே....வீடெல்லாம் பளீர்னு இருக்கு.......தற்காலிக பேச்சிலர் வீடு போலவே தெரியலையே."
"போடா டேய்........நான் ஆண் ஆதிக்கவாதி இல்லை, பொண்டாட்டி தான் எல்லாத்தையும் செய்யணுமா.....நாம செய்துவிடக் கூடாதா?"
ராகவன் ஒரு முற்போக்குவாதி, ஆணாதிக்கம் / பெண்ணாதிக்கம் பற்றி வகுப்பெடுப்பவன், வீட்டில் துணிகாயவைப்பது, வீட்டைப் பெருக்குவது, பாத்திரம் கழுவது உள்ளிட்ட அனைத்து வேலைகளையும் இழுத்துப் போட்டுச் செய்வானாம், இத்தனைக்கும் அவன் மனைவி வேலைக்குச் செல்லாமல் வீட்டு வேலைகளை கவனித்து வருபவர்தான்.
"உன்னைய மாதிரி இல்லை ராகவன்.....என்னைக்காவது குப்பையில் தடுமாறி விழுந்துட்டா மட்டும் வீட்டை பெருக்குவேன்.....இல்லாட்டி வீடு அப்படியே தான் இருக்கும்..... என்று குமார் சொல்ல"
"தெரியுமே....படுத்த படுக்கையைக்கூட சுருட்டி வைக்காமல்........நாளைக்கும் அதை திரும்பப் போட வேண்டி இருக்கும், இரண்டு வேலைன்னு அப்படியே போட்டு வைத்திருப்பவன் தானே நீ" - ராகவன்
"அதுல ஒண்ணும் தப்பாகத் தெரியல.....படுக்கை அப்படியே கிடந்தால் அதுக்கும் கீழ் தூசி அடையாது" என்கிற குமாரின் லாஜிக் "சகிக்கவில்லை.....தினமும் குளிப்பியா அதுவும் இல்லையா?" என்றான் ராகவன்.
"அவனவன் கஷ்டம் அவனவனுக்கு......."
"போடா என் திருப்திக்கு இல்லாவிட்டாலும்.........வீட்டை சுத்தமாக வைச்சிருந்தா எம் பொண்டாட்டி எப்படி மகிழ்வாங்க தெரியுமா?"
"மச்சி ஆணியம் / பெண்ணியம் பேசுகிறியே தவிர ஒனக்கு பெண்களோட லாஜிக் / செண்டிமெண்ட் சுத்தமாக தெரியல....."
"எத வச்சிடா அப்படிச் சொல்றே......"
"நான் இல்லை என்றால் வீட்டில எந்த வேலையும் நடக்காதுன்னு மனைவி நினைக்கனும்.......தன்னோட முக்கியத்துவம் தன் வீட்டில் தேவைன்னு நினைக்கிறதில் தான் பெண்களோட மனநிறைவே அடங்கி இருக்கு......"
"பிறகு........?"
"நீ பாட்டுக்கு ஆள் இல்லாத போதும்......வீட்டை ஒழுங்காக வைத்திருந்தால்......தன்னைப் பற்றிய நினைப்பே இவருக்கு வந்திருக்காது போலன்னு நினைப்பாங்க."
"அப்படியா சொல்றே......"
"ஆமாண்டா....என் புருசனுக்கு....நான் இல்லைன்னா சோறு போட்டுக்கூடத் திங்கத் தெரியாதுன்னு என் மனைவி அவங்க வீட்டில் பெருமையாகப் பேசிக்கொள்வாளாம்....நான் இல்லாட்டி தவிச்சிப் போய்டுவார்னு அடிக்கடி சொல்லுவளாம்."
"அடப்பாவி எனக்கு இதெல்லாம் தெரியாதே.........நான் ஆணும், பெண்ணும் சமம்.....வீட்டை சுத்தமாக வைத்திருப்பதில் நமக்கும் பங்கிருக்குன்னு நினைச்சேன்......இருந்தாலும் ஏமாத்துறோம்னு உறுத்தல் இருக்காதா?"
"மண்ணாங்கட்டி....இதுல யாருக்கும் பாதிப்பே இல்லை....மறைமுகமாக அவங்களோட தேவை நமக்கு எப்போதும் இருக்கணும்னு உணர்த்துவதுதான் இது"
"அப்படிங்கிறே.........?"
"தன்னோட இருப்பு அங்கு தேவை இல்லை........நான் இல்லாவிட்டாலும் குடிமுழுகிடாதுங்கிற நினைப்பு ஒரு பெண்ணுக்கு மன அளவில் பலவீனத்தை உண்டு பண்ணும்.......சில விசயத்தில சமத்துவம் சம உரிமைன்னு இருந்தாலும் அதைத் தாண்டிய செண்டிமெண்டுகளுக்குத்தான் மதிப்பு...."
"நீ சொல்றதும் சரிதான்னு தோணுது"
"சந்தேகமாக இருந்தால்........நாளைக்கு மனைவிக்கு போன் செய்யும் போது......நீ இல்லாத வீடு நிலவில்லாத வானம் போல் இருண்டு கிடக்குதுன்னு டயலாக் விட்டுப் பாரு."
மறுநாள் ராகவன் அலைபேசியில் அழைத்துச் சொன்னான்.
"குமார், நீ சொன்னது உண்மை தான்...."
"பொறுத்துக் கொள்ளுங்கள், சமாளித்துக் கொளுங்கள்....நேரத்துக்கு சாப்பிடுங்கள், சரியாத் தூங்குகள்.....என்றெல்லாம் சொன்னாள், அதில் வழக்கத்துக்கு மாறான வெறும் விசாரிப்புகள் இன்றி கொஞ்சம் சிணுங்கள், கொஞ்சம் ரொமான்ஸ் இருந்தது."
"சரிடா அதுக்குண்ணு ஓவராக சீன் போடாதே ...கஷ்டப்படுறேன்னு நினைச்சுட்டு சட்டுபுட்டுன்னு கிளம்பி வந்து நிக்கப் போறாங்க...அப்பறம் அடுத்த சனி, ஞாயிறு அன்பு வீட்டில பேச்சிலர் பார்ட்டியை மிஸ் பண்ணிட வேண்டியது தான்."
- Forex Board index Forex Online Home Business Website சிறுகதை மற்றும் தொடர்கதைகள்
-
- It is currently Mon Apr 29, 2024 12:02 pm
- All times are UTC+05:30
படித்தது -தங்கமணி இல்லை என்றால்...!
படுகை அன்பர்களின் சொந்த கதைகள் மற்றும் தொடர்கதைப் படைப்புகளைப் படித்து உங்களது கருத்துக்களையும் வாழ்த்துகளையும் கூறி உற்சாகப்படுத்துவது மட்டுமின்றி நீங்கள் எழுதிய கதைகளையும் எங்களோடு பகிர்ந்து கொள்ளுங்கள்.
-
- Posts: 1139
- Joined: Tue May 21, 2013 12:59 pm
- Cash on hand: Locked
Return to “சிறுகதை மற்றும் தொடர்கதைகள்”
Jump to
- Forex Online Home Business Website
- ↳ ONLINE JOB PAYMENT PROOFS
- ↳ இணையம் மூலம் பணம் சம்பாதிக்கலாம் வாங்க
- ↳ பணம் சம்பாதிக்கலாம் வாங்க
- ↳ FOREX Trading - கரன்சி வர்த்தகம்
- ↳ IndianCashier Currency Exchange
- ↳ இலட்சமே இலட்சியம்
- ↳ விளம்பரமும் பணமும்
- ↳ செய்தால் உடனடி பணம்
- ↳ ஆன்லைன் வேலை தகவல் மையம்
- ↳ டிஜிட்டல் மார்க்கெட்டிங்
- ↳ படுகை ஓரத்தில் இணையத் தமிழர்களின் குடில்
- ↳ படுகை உறவுப்பாலம்
- ↳ படுகை ஓரம்
- ↳ உதவிக் களம்
- ↳ குப்பைத் தொட்டி
- ↳ பழமைச் சுவடுகள்
- ↳ படுகை பரிசுப் போட்டி மையம்.
- ↳ நம் வீட்டுச் சமையலறை
- ↳ ஊர் ஊரா சுற்றிப் பார்க்கலாம்!
- ↳ சக்தி இணை மருத்துவம்
- ↳ ஆன்மிகப் படுகை
- ↳ Forex Trading Tutorial & Signal
- ↳ Free Online Job Resources
- ↳ To be become a Millionaire
- ↳ Digital Currency Exchange
- ↳ Support Forum
- ↳ Online Job Free Tutorial
- ↳ Home Business & Jobs Talk
- ↳ Mobile, Computer & Internet World
- ↳ சிறுகதை மற்றும் தொடர்கதைகள்
- ↳ கவிதை ஓடை