அனைவராலும் மறக்க முடியாத நினைவுகள் எதுவென்றால் அது பள்ளி நாட்கள் தான்
எனது பள்ளியின் பெயர் தேசியதுவக்கபள்ளி இந்த பள்ளியில் 5 ஆம் வகுப்புவரை படித்தேன் இந்த பள்ளிகூடத்தில் 5 வகுப்புகள் வரைதான் உள்ளது
முதல்வகுப்பு
முதல்வகுப்பு ஆசிரியர் பெயர் ராதா அவங்க முகம் இன்னும் எனக்கு நாபகம் இருக்கு அவங்க தான் எனக்கு ஆனா ஆவனா கற்று தந்தவங்க அவங்க பார்பதற்கு வயசனவங்களா இருப்பாங்க அவங்க முகத்தின் தாடையில் நான்கைந்து தாடி வளர்ந்து இருக்கும் ஒருநாள் என்னுடன் படித்த ஒரு பையன் அவன் பெயர் விசுவநாதன் அவனுக்கு அவசரமாக 2பாத்ரூம் வந்துவிட்டது அதனால் அவன் டீச்சர் ட்ட போய் 2விரல்களை நிட்டினான் டீச்சர் அவனை பார்த்துட்டு போய் உட்காரு மணி அடிக்க இன்னும் 10 நிமிடம் தான் இருக்குன்னு சொன்னாங்க அவன் வந்து உட்கார்ந்தான் ஆனால் அவனுக்கு ரொம்ப அவசரம் மறுபடியும் டீச்சர் ட்ட இரண்டு விரல்களை நீட்டினான் அதற்க்கு டீச்சர் அவனைகண்டுகாமல் வேறபக்கம் பார்த்துட்டு இருந்தாங்க அவனக்கு கோபம் வந்து விட்டது உடனே அவன் டீச்சர் முகத்தின் கிட்ட இரண்டு விரலை நீட்டினான் அப்பொழுதும் டீச்சர் கண்டுகாதபோல் இருந்தாங்க உடனே அவன் டீச்சர் இன் தாடியை வெடுக்கென்று இழுத்துட்டு ஒரே ஓட்டமாக ஓடிவிட்டான் டீச்சர் வலியில் அவனை புடி புடி சொன்னங்க நாங்கள் அவனை துரத்திக்கொண்டு ஓடினோம் அந்த நிகழ்ச்சீயை இன்றும் எனக்கு சிரிப்பாய் இருக்கும்
இரண்டாம் வகுப்பு
இரண்டாம் வகுப்பு ஆசிரியர் பெயர் தெரியவில்லை அவங்கள எல்லோரும் ஒட்டு மாங்கா டீச்சர் ன்னு கூப்பிடுவாங்க அவளாதான் நாபகம் இருக்கு
மூன்றாம் வகுப்பு
மூன்றாம் வகுப்பு டீச்சர் பெயர் சீத்தாமேரி அவங்க பார்பதற்கு ஒல்லிய சிகப்பா இருப்பாங்க ரொம்ப கண்டிசன் எதாவது குறும்பு பண்ண அவலதான் தொலைந்தோம் எங்கபள்ளிகூடத்தில் a b c d முதல்ல கற்று தரவங்க இவங்கதான் அதுமட்டும் இல்ல அதுவரைக்கும் சிலேட்டில் எழுதிக்கொண்டு இருந்த எங்களை நோட் புக் ல் எழுத வைத்ததும் அவங்கதான் பொதுவா சொல்லுனுனா இவங்க இல்லனா எங்க பள்ளி கூடம் இல்லன்னு சொல்லலாம்
நான்காம் வகுப்பு
நான்காம் வகுப்பு டீச்சர் பெயர் லதா இவங்க பார்பதற்கு குண்டா கருப்பா இருப்பாங்க இவங்கள பார்த்த எனக்கு பயமா இருக்கும் நாங்கள் இடைவேளை நேரத்தில் எங்கள் பள்ளி யின் அருகில் ஒரு வீட்டில் உள்ள இளந்த மரத்தில் இளந்த பழம் அடித்து சாப்பிடுவோம் அன்றும் அப்படியே இளந்த பழத்தை அடித்து சாப்பிட்டோம் அதில் ஒருவன் மீதி பழங்களை அவன் பாக்கெட்டில் எடுத்துவந்து வகுப்பரையில் பாடத்தை கவனிக்காமல் இளந்த பழத்தை சாப்பிட்டு கொண்டே இருந்தான் அவனை பார்த்த டீச்சர் இங்கேவா இன்னா சாப்பிடுற எங்க காட்டுன்னு அவனிடம் இருந்த இளந்த பழங்களை வாங்கிட்டு இனிமேல் இளந்த பழம் அடிக்க போவியா போவியா ன்னு அடிச்சாங்க சரி இளந்தபழத்தை கீழ தூக்கி போட்டுடுவாங்க ன்னு பார்த்த அந்த இளந்த பழத்தை அவங்க சாப்டாங்க
ஐந்தாம் வகுப்பு
ஐந்தாம் வகுப்பு டீச்சர் பெயர் ரத்னா இவங்கதான் எங்கபள்ளியின் தலைமை ஆசிரியர் பார்பதற்க்கு அமைதியாக சாந்தமாக இருப்பாங்க ஆனால் சரியாக படிக்கவில்லை பள்ளிக்கு சரியான நேரத்தில் வரவில்லை என்றால் நம்ம தொல உரிச்சிடுவாங்க நான் அவங்களிடம் அடிவாங்கியது இன்னும் நாபகம் இருக்கு
ஆறாம் வகுப்பு
அடுத்து என்னை நகராட்சி மேல் நிலை பள்ளியில் 6 வது சேர்த்தாங்க அந்த டீச்சர் பெயர் வனஜா அவங்க ஆங்கிலம் மற்றும் கணக்கு பாடங்கள் எடுப்பாங்க 6 ம் வகுப்பில் எனக்கு நிறைய புதிய நண்பர்கள் பழக்கமானார்கள்
ஏழாம் வகுப்பு
7 ம் வகுப்பு டீச்சர் பெயர் சாந்தி அவங்க ஆங்கிலம் மற்றும் சமுக அறிவியல் பாடங்களை எடுப்பாங்க
எட்டாம் வகுப்பு
8 ம் வகுப்பு சார் பெயர் வேலாயுதம் ரொம்ப நல்ல மனிதர் எளிமையாக படங்களை கற்றுத்தருவார் அடங்காத பசங்களையும் கூட அன்பாக சொல்லி திருத்துவார் இவர் கணக்கு மற்றும் சமுக அறிவியல் பாடங்களை சொல்லி தருவார்
ஒண்பதாம் வகுப்பு
9 ம் வகுப்பு சார் பெயர் ஜனார்த்தனன் ஆங்கிலம் மற்றும் சமுக அறிவியல் பாடம் நடத்துவார்
பத்தாம்வகுப்பு
சார் பெயர் பல தண்டாயுதபாணி அறிவியல் மற்றும் ஆங்கில பாடங்கலை நடத்துவார்
என் பள்ளிக் கால நினைவுகள்
- muruganmk
- Posts: 435
- Joined: Wed Sep 04, 2013 6:59 pm
- Cash on hand: Locked
- ஆதித்தன்
- Site Admin
- Posts: 12147
- Joined: Sun Mar 04, 2012 1:17 am
- Cash on hand: Locked
Re: என் பள்ளிக் கால நினைவுகள்
நிதானமாக, நினைவாற்றலோடு, தங்களது பள்ளி நினைவுகளை மகிழ்வாக பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி.
- mubee
- Posts: 531
- Joined: Tue Jul 09, 2013 6:04 pm
- Cash on hand: Locked