காத்திருந்த காமம் (காதல்)
நாற்பத்தைந்து வயதை கடந்து கொண்டு இருக்கும் பரந்தாமன்..அவரின் மனைவி கமலா நல்ல லட்சனமான குடும்ப பெண்...இருபது ஆண்டுகளுக்கு முன் கமலாவை கரம் பிடித்தார் பரந்தாமன்... இல் வாழ்கையில் சுகமும் சந்தோசமும் நிறைந்த குடும்பமாக தான் இருந்தது...இவர்களுக்கும் ராமன் 15 வயது...ராதிகா 13வயது பருவம் அடைந்த ராதிகா பள்ளி படிப்பில் முதல் மாணவி என்று பெயர் பெற்றவள்.. பரந்தாமன் ஒரு தனியார் நிறுவனத்தில் பணி புரிந்து.குடும்பத்தை நல்ல படி எடுத்து செல்கிறான்... கணவனுக்கு ஏத்த மனைவி...கமலா.....
இந்த இரண்டு குழந்தைகளுக்கு பிறகு கமலாவுக்கு தாம்பத்தியத்தில் அதிக ஈடு பாடு கிடையாது அடிக்கடி வயறு வலியால் துடிப்பாள்.அருகிலுள்ள மருத்துவ மனைக்கு போய் மருந்து மாத்திரைகள் சாப்பிட்டதும் சரியாகி போகும்..இந்த வயத்து வலி காரணம் இவர்களின் தாமத்யமே கசந்தது...எல்லாம் சகித்து கொண்டு தான் பராந்தாமன் இவளுடம் அன்பாக வாழ்ந்தான்..
திடிரென்று கமலாவுக்கு கர்ப பையில் கட்டி. ஆப்பரேஷன் செய்ய வேண்டும்...என்ற நிலை உறுவாகிறது..கடனை உடனை வாங்கி அந்த ஆப்பரேசனுக்கு ஒப்பு கொள்கிறான்...பரந்தாமன்...
அந்த ஆஸ்பத்திரி வெளி ஊரில் இருப்பதால் பிள்ளைகளின் படிப்பு கெட்டு விடுமே என்று தன் உறவு காரவர்கள் வீட்டில் பிள்ளைகளை விட்டு விட்டு தானும், தற்கால விடுப்பு எடுத்து கொண்டு..தன் மனைவி கமலாவை மருத்துவமனையில் சேர்த்து விட்டு அவனும் மனைவின் துணைக்கு அங்கேயே இருந்து விடுகிறான் பரந்தாமன்..
அந்த ஆஸ்பத்திரின் வரவேற்பு அறையில் அவனுடன் படித்த ஜெயா வை சந்திக்க நேர்ருடுகிறது....
ஜெயா அந்த ஆஸ்பத்திரில் பணிபுரிவதாக அவனிடம் சொல்கிறாள்..இத்தனைகாலம் இவனை காண ஏங்கி துடித்த இவளின் இதயத்திற்கு இதமாகவும்,சுகமாகவும் இருந்தது..
பழைய நினைவுகள் அவன் கண்முன் நிழலாடுகிறது...அவள் இவனை ஒரு பக்கமாக காதலித்தது...இவன் ஒதிங்கி போனது... என பலவாறு நினைத்து கொண்டு அவளுடன் நலம் விசாரித்து கொண்டு...ஆஸ்பத்திருக்கு வந்த விபரத்தை சொன்னான்..
இருவரும் பேசி கொண்டு இருக்கும் போது இன்னும் உங்கள் நினைவில் வாழ்வதாக இடையிடையே சொல்கிறாள் ஜெயா.
இப்படியாக சில நாட்களில் ஆப்பரேசனும் முடிந்து...வீட்டுக்கு போக கூடிய நாளும் வந்து விட்டது...
கடைசியாக டாக்டர் பரந்தாமனை அழைத்து...
பரந்தாமன்... இனி நீங்க உங்க மனைவியோட தாம்பத்திய தொடர்பு வைத்து கொள்ள கூடாது...அது போல அதிகமான் வேலையும் செய்ய கூடாது கொஞ்சம் ஜாக்கிரதையா பார்துக்குங்கோ..
இதை கேட்டது அவனின் இதயம் ஒரு நிமிடம் நின்று மீண்டும் துடிக்க தொடங்கியது...
இதை ஜெயாவும் கேட்டு கொண்டு இருந்தாள்.
இந்நிலையில் பழைய காதலன் பரந்தாமனை மீண்டும் காதலிப்பதாக ஜெயா சொல்கிறாள். . அவனின் வாழ்கையில் குறுக்கிடுகிறாள்...உங்கள் நினைவில வாழ்ந்து கொண்டு இருபதாக காம வார்த்தைகளில் வர்ணிக்கிறாள்.
இவர்களின் சந்திப்பு அடிக்கடி தொடர்கிறது..
எத்தனையே எடுத்து சொல்லியும் அவளின் பிடிவாதம் பரந்தமனை அடைந்தே தீருவேன் என்ற போர் கொடி அவளின் மனதில்..
இதோ பாரு ஜெயா இத்தனை வருஷமா எந்த கர கூட பாடாமல் என்னையும் என் குடும்பத்தையும் நல்ல முறையில் கொண்டு செல்கிறேன்..என் வயசுக்கு இப்ப இது தேவையா?...வீனால உம் மனசுல என்னை வச்சுகிட்டு உன் வாழ்கையும் நாசம் பண்ணிட்டு..என் வாழ்கையும் நாசம் ஆக்கி விடாதே...
என் வாழ்க்கைதான் நாசமா போச்சே..உங்க வாழ்கையும் நாசமா ஆகிட கூடாதே...ன்னு தான் சொல்லுறேன்...
டாக்டர் சொல்லுறத எல்லாம் கேட்டுட்டு தான் இருந்தேன்...இந்த வயசுல தாமத்யம் இல்லாம எந்த அம்புலயாலும் இருக்க முடியாது...நானும் வாழ்க்கைய தொலைச்சுட்டு.உங்கள நினச்சுட்டு தான் இருக்கேன்..ஏன் நம்ம ரெண்டு பேரும் ஒன்னு சேர கூடாது...
இல்லங்க நாம படிக்கிற காலத்துல இருந்து...உங்க நினைவில்தான் நான் வாழ்ந்து கொண்டு இருக்கேன்... உங்க நினைவிலே கல்யாணமே வேண்டாம்னு சொல்லிக்கிட்டு இருத்தவதான்... அப்பாவுக்கு உடம்பு சரியல்ல, தாத்தாவுக்கு உடம்பு சரில்லேன்னு..ஒருத்தன் தலையில என்ன தூக்கி வச்சுட்டாங்க... அவனோட நான் வாழும் போது எல்லாம் உங்களோட வாழறதா நினைப்பேன்..நானும் வாழ்கையில் பாதிச்சவ...என்னை ஒருவனுக்கு முறைப்படி கட்டி கொடுத்து வாழ வச்சவங்க தான்...என்னோட விதி என் வாழ்க்கையில விளையாடி பாதிலேயே எம் புருஷன் நோயால அவதி பட்டு போய் சேர்ந்துட்டான்....அதன் பிறகு எத்தனை பேர் என்னை பெண் கேட்டு வந்தாங்க...அத்தனையும் வேண்டாம் என்று சொல்லி விட்டேன்... ஒரே ஒரு நாள் உங்களோடு வாழ்ந்தா கூட போது அத நினச்சே என் வாழ் நாள் பூர அப்படியே இருந்து விடுவேன்....அதுக்காக உங்க மனைவி மக்கள விட்டு விட்டு என்னோட குடும்பம் நடத்த சொல்லல...நீங்க சம்பாரிக்கிற பணத்துல எனக்கு ஒரு ரூபாய் கூட வேண்டாம்...எனக்கு உங்க உடலும் மனசும் போதுங்க....தயவு செய்து என்ன வேண்டாம்ன்னு மட்டும் சொல்லிடாதிங்க ப்ளீஸ்....என்று கதறி அழுதாள் ஜெயா...
எம் பொண்ண கட்டி கொடுக்கிற வயசுல நான் ஒருத்திய தேடி போனா என் குடுப்பம்,என் கவர்வம், எல்லாம் என்ன வாகும் நீயா எம் மேல ஆசைய வளர்த்துட்டு...இப்படி ஒரு சங்கடத்த ஏற்படுத்துறது இது சரியா சொல்லு... என்றான் பரந்தாமன்....
நான் உங்கள் எம் மனசுல சுமக்க காரணமே உங்களிடம் உள்ள நல்ல குணத்துக்கு தான்..இருக்குற கொஞ்ச காலத்த உங்க நிழல நீன்னு கழுச்சுடுலாம்ன்னு...நீங்கதான் எனக்கு வேணும்...இதுல எந்த மாற்றமும் இல்ல...என் எண்ணப்படி நீங்க எனக்கு கிடைகிலன்னா நீங்க என்ன கெடுத்துட்டாத சொல்லி அவமான படுத்துவேன்.இது சத்தியம் இதுக்கு மேல எனக்கும் எதுவும் சொல்வதற்கில்லை..என்று விடை பெற்று சென்றாள் ஜெயா.
இதை கேட்ட பரந்தாமனுக்கு நேஜ்சம் படபடத்தது....யாருக்கும் ஒரு கெடுதல் கூட நினைக்காத எனக்கா இந்த சோதனை...என்ன செய்வது என்று அறியாமல் திகைத்து நின்றான் பரந்தாமன்...
வீட்டில் கமலாவுக்கு வீட்டு வேலை ஒத்தாசையாக இருப்பான்...பிள்ளைகளுக்கு மாலை வேலைகளில் பாடங்கள் சொல்லி கொடுப்பது..என்று உதவியாக இருந்தவன் சமிகாலமாக அதை எல்லாம் தவிர்த்து விட்டு ஏதோ யோசனையுடன் ஆழ்ந்த சித்தனையில் இருந்து வருகிறான்...
இதை எல்லாம் நோட்டமிட்ட கமலா....இவருக்கு என்ன ஆச்சு...உடல் நலம் சரி இல்லையா? அப்படி எதாவுதுன்னா சொல்லுவாரே?..என்று மனதில் எண்ணியபடி இருக்கும் போது...
மகள் ராதிகா அழுது கொண்டு அவளின் அம்மாவிடம் வருகிறாள்..
என்னம்மா என்னாச்சு....
அம்மா இந்த தேர்வுல மார்க்கு கொஞ்சமா எடுத்துடேன்மா...இந்த ராங்கு சீட்ட காட்டவே வெட்கமா இருக்கு...ஸ்கூள்ள டிச்சரும் எல்லா பிள்ளைங்க முன்னாடி...திட்டிடாங்க....
இதுக்குத்தானா? இப்படி அழறே....நான் என்னமே ஏதோ என்று பயந்தே போய்டேன்...
இதுதான் சமயம் என்று யோசித்த கமலா... ராதிகாவை அழைத்து கொண்டு தன் கணவன் முன்பு சென்றாள்...
சாய்வு நாற்காலியில் படுத்து கொண்டு யோசித்து கொண்டு இருந்த பரந்தாமனை நோக்கி...
என்னங்க...கொஞ்ச நாளாவே உங்கள பாக்குறேன்...எனக்கு சமையல் கட்டுல உதவியா இருப்பீங்க...பிள்ளைகளுக்கு பாடம் சொல்லி கொடுபீங்க...இப்ப ஏதோ யோசித்தவாறு இருக்கீங்கலே...என்ன ஆச்சு... நீங்க இப்படி இருக்கிறது நாளே தான் ராதிகா எல்லா பாடத்திலும் முதல் மார்க்கு எடுத்தவள்...இப்ப என்ன மார்க்கு வாங்கிருக்கா பாருங்கள் என்று அந்த ரேங்க் சிட்டை அவன் முன் நீட்டினாள் கமலா...
அந்த ரேங்க் சிட்டை பார்த்தவன் எதுவும் பேச முடியாமல் தவித்தான்...மௌனம் சாதித்தான்...
அவன் மௌனத்தின் அர்த்தம் புரியாமல் தவித்தாள் கமலா.
அது நேரம் அவனின் கை பேசி ஒலிக்க...ஹலோ..என்றான் மறுமுனையில் ஜெயா...காம வார்த்தைகள் தேனில் கலந்து வார்த்தது போல் அவனின் காதுகளுக்கு இதமாய் இனித்தது...
டேய் பரந்தாமா??உனக்கு என்ன உணர்வே இல்லையா??நீயும் சராசரி மனிதன்தானே...நீ என்ன உம் பொன்னாடிக்கு துரோகம் செஞ்சுட்டா பேரே. உன் பொண்டாட்டி இல்லறத்துகே தகுதி இல்லேன்னு முடிவாகி போச்சு....உனக்குன்னு ஆசா பாசம்..அதும் ஒருத்தி வந்து தன்னையே உனக்கு கொடுக்க முன் வருகிறாள்...ச்சி...நீயெல்லாம் என்ன மனுஷ்னாடா... கரும்பு தின்ன உனக்கு காசா கொடுக்கணும்...என்று அவனின் மனசாட்சி அவனை உறுத்த....அவளை அவன் அடைய வேண்டுமாய் முடிவுக்கு வருகிறான்...
அவனின் திட்ட படி பரந்தாமன்...அவளின் வீட்டுக்கு செல்கிறான்..
அங்கே அவள் அவனுக்காக காத்திருந்தாள்...அவள் விரித்து வைத்திருந்த அந்த கிடக்கையில் அவன் கிடக்க. அவன் அருகில் அவள் கிடக்க...இருவரின் விரல்களும் வீணையை தழுவியது போல் ஒன்றோடு ஒன்றாக் தழுவி கொண்டவர்கள்..உதடுகள் உரச கண்ணங்கள் சிவக்க... இறுக்கமான பிடிக்குள் இருவரும் சிக்கி கொண்டனர்.. இருவரின் உடல் நிலையும் சூடுகள் பறக்க....இருவரின் காம சுமைகள் அங்கே இறக்கிவைக்கவட்டது....
அவனுள் துடித்து கொண்டி இருந்த அவனின் ஆண்மை எத்தனை ஆண்டுகளுக்கு பிறகு விடை பெற்றது..மீண்டும்... மீண்டும்... இது போல் சந்தர்பம் கிடைக்காதா?. என்று அவனின் இதயம் அவனிடம் ஒரு முறை கேட்டு கொண்டது...
இந்த உறவு அடிக்கடி இவர்களுக்குள் தொடந்தது.....
ஒருவர் மேல் காமும்,காதலும் வந்து விட்டால் எத்தனை தடைகள் வந்தாலும் எத்தனை ஆண்டுகள் சென்றாலும்..எந்த சந்தர்ப்பத்திலாவது அது அடைந்தே தீரும் உண்மை காதல் அழியாது...காத்திருக்கும் காமமும்,காதலும் ஒரு நாள் வெல்லும்....
- Forex Board index Forex Online Home Business Website சிறுகதை மற்றும் தொடர்கதைகள்
-
- It is currently Sun Apr 28, 2024 2:01 am
- All times are UTC+05:30
காத்திருந்த காமம் (காதல்)
படுகை அன்பர்களின் சொந்த கதைகள் மற்றும் தொடர்கதைப் படைப்புகளைப் படித்து உங்களது கருத்துக்களையும் வாழ்த்துகளையும் கூறி உற்சாகப்படுத்துவது மட்டுமின்றி நீங்கள் எழுதிய கதைகளையும் எங்களோடு பகிர்ந்து கொள்ளுங்கள்.
-
- Posts: 708
- Joined: Sun Dec 16, 2012 1:48 pm
- Cash on hand: Locked
Return to “சிறுகதை மற்றும் தொடர்கதைகள்”
Jump to
- Forex Online Home Business Website
- ↳ ONLINE JOB PAYMENT PROOFS
- ↳ இணையம் மூலம் பணம் சம்பாதிக்கலாம் வாங்க
- ↳ பணம் சம்பாதிக்கலாம் வாங்க
- ↳ FOREX Trading - கரன்சி வர்த்தகம்
- ↳ IndianCashier Currency Exchange
- ↳ இலட்சமே இலட்சியம்
- ↳ விளம்பரமும் பணமும்
- ↳ செய்தால் உடனடி பணம்
- ↳ ஆன்லைன் வேலை தகவல் மையம்
- ↳ டிஜிட்டல் மார்க்கெட்டிங்
- ↳ படுகை ஓரத்தில் இணையத் தமிழர்களின் குடில்
- ↳ படுகை உறவுப்பாலம்
- ↳ படுகை ஓரம்
- ↳ உதவிக் களம்
- ↳ குப்பைத் தொட்டி
- ↳ பழமைச் சுவடுகள்
- ↳ படுகை பரிசுப் போட்டி மையம்.
- ↳ நம் வீட்டுச் சமையலறை
- ↳ ஊர் ஊரா சுற்றிப் பார்க்கலாம்!
- ↳ சக்தி இணை மருத்துவம்
- ↳ ஆன்மிகப் படுகை
- ↳ Forex Trading Tutorial & Signal
- ↳ Free Online Job Resources
- ↳ To be become a Millionaire
- ↳ Digital Currency Exchange
- ↳ Support Forum
- ↳ Online Job Free Tutorial
- ↳ Home Business & Jobs Talk
- ↳ Mobile, Computer & Internet World
- ↳ சிறுகதை மற்றும் தொடர்கதைகள்
- ↳ கவிதை ஓடை