தன்னம்பிக்கை போதும் கோடீஸ்வரி ஆக வைக்கும் GBDgift

CashFeeder.Net தளத்தின் செயல்பாடுகள், வசதிகள், மற்றும் இதுபோன்ற Matrix தளங்களுக்கான டாலர் பணப்பரிமாற்ற சேவை, சந்தேகங்கள் மற்றும் உதவிகளைப் கேட்டுப் பெறுவதற்கான இடம்.
Post Reply
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

தன்னம்பிக்கை போதும் கோடீஸ்வரி ஆக வைக்கும் GBDgift

Post by ஆதித்தன் » Thu Oct 01, 2015 5:18 pm

Image
கோடீஸ்வரி:

ஆன்லைன் ஜாப் என்றுச் சொன்னால் அது பெண்களுக்கான ஸ்பெஷல் ஜாப். இதனை பெண்கள் சரியாக வீட்டிலிருந்து பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதற்காகவே கோடீஸ்வரி என்ற தலைப்பில் இப்பதிவில் உங்களுக்கு ஆன்லைன் வேலைப் பற்றி நீண்ட தகவலைக் கொடுத்திருக்கிறேன். படிக்க பத்து நிமிடம் போதும் என்றுச் சொன்னாலும் புரிந்து கொள்ள ஒர் நாள் ஆகலாம், புரிந்ததை செயலாக்கத்தில் கொண்டு வந்துவிட்டால் நீங்கள் கோடீஸ்வரி!!! இது நிஜம்... பெண்களாகிய உங்களிடம் அந்த தகுதி இருக்கிறது.

பெண்களில் பெரும்பான்மையானவர்கள் வீட்டில் இருக்கும் அதிகப்படியான வேலைகளை எவ்வளவு விரைவாக செய்ய முடியுமோ... அதாவது 9 மணிக்கு ஆபிஸ் போய்... 1 மணி நேரத்தில் ஒர் டீ டைம் ... கொஞ்சம் அரட்டை .... அடுத்த ஒர் மணி நேரத்தில் லஞ்ச் டைம் .... கொஞ்சம் நேரம் வேலை செய்யணும்னு நினைக்கும் பொழுது, களைப்பாகிடும்...அப்பிடி இப்படின்னு சீக்கிரமா ஒர் டீ சாப்பிட்டுக்கிட்டே என்ன செய்தோம்னு யோசிச்சி முடிக்கிறதுக்குள்ள... ஆபிஸ் டைம் முடிஞ்சி போய்டும்.. கடைசியில் ரிப்போர்ட்டுக்கு சாக்கு போக்கு சொல்லிட்டு... மேனஜர் தொல்லை தாங்க முடியலப்பா என்று சலிச்சிக்கிட்டே வீட்டை நோக்கி ஓடி வந்தா.. மணி ஆறு ஆகிடும்.... அப்பாடா என்று பெரிதாக வேலை செய்துவிட்டு வந்திருப்பதாக பெரிமிதம் கொள்ளும் ஆண்களைக் காட்டிலும், ரொம்ப அதி விரைவாக காலையிலேயே எழுந்து, எல்லா பாத்திரம் மற்றும் வீட்டை எல்லாம் கிளின் செய்து, காலை டிபன் அனைவருக்கும் ரெடி செய்து சாப்பிட்டு... வெளியில் கிளம்புறவங்களுக்கு மதிய சாப்பாட்டையும் ரெடி செய்து...அடிபிடின்னு அடம்பிடிக்கிற வாலுகளையும் சமாளிச்சி அடக்கிவைச்சி, இடை இடையே ரிலாக்ஸா ஒர் டீ குடிக்கணும்னா கூட, அந்த டீ போடுறதுக்கும் தானே வேலை செய்து.... இரவு சாப்பாட்டு வேலையும் செய்து... பசங்க துணிகளையும் துவைத்து... இப்படி நிறைய வேலையை செய்துவிட்டு... கேட்டால் நான் வீட்டில் ஹவுஸ் வொய்ப்பா இருக்கேன் என்பதனை எந்த வேலையையும் செய்யாமல் சும்மா இருப்பதாக மனதில் நினைத்துக் கொண்டு... நானும் வேலைக்கு போகணும் நிறைய சம்பாதிக்கணும் என்று நினைக்கும் பெண்களில் பெரும்பான்மையானவர்கள் தேடுவது ஆன்லைன் ஜாப்.

உண்மையாக பார்க்கப் போனால், ஆண்களைக்காட்டிலும் பெண்கள் புத்திசாலிகள், எத்தனை கடினமான பணியினையும் இலகுவாக செய்து முடிக்கக்கூடியவர்கள். ஆகையால் தான் என்னவோ, அவர்களை தன் குடும்ப வேலைகளை சரியாகச் செய்வதற்க்கு பயன்படுத்திவிட்டு, அத்தனை திறமையற்ற ஆண்களை அடுத்தவர்களுக்காக வேலை செய்ய என்று வெளியில் செல்லுமாறு நமது சமூகம் பழங்காலத்திலேயே சரிபட செய்திருக்கிறார்கள். ஆனாலும் "பழகப்பழக பாலும் புளிக்கும்" என்று பழமொழி சொல்வார்கள் அல்லவா, அதைப்போல் எத்தனைக் காலம் தான் வீட்டிலேயே வேலை செய்வது நாமும் வெளியில் வேலைக்கு சென்று நாலு காசு சம்பாதிப்போம் என்று பெண்களுக்கு எண்ணம் தோன்றத் தொடங்கிவிட்டதோடு, பல கோடீஸ்வரிகளையும் காண முடிகிறது.

இண்டர்நெட் என்ற வசதி இருப்பதால் இன்னும் இன்னும் நிறைய கோடீஸ்வரிகள் வீட்டிலிருந்தப்படியே உருவாகுவார்கள் என்பதனை என்னால் முழுமையாக நம்ப முடிகிறது. அதிலும் குறிப்பாக சொல்லப்போனால் ஆன்லைன் வேலை என்று தேடுவதில் ஆண்களைக்காட்டிலும் பெண்களின் எண்ணிக்கை மிக மிக அதிகம். அதுமட்டுமில்லாமல், நிறைய பெண்கள் ஆன்லைன் ஜாப் செய்து கொண்டிருக்கிறார்கள். அதிவிரைவில், இவர்கள் கோடீஸ்வரிகள் ஆனாலும் ஆகிவிடுவார்கள், ஆச்சர்யப்படுவதற்கு இல்லை.

ஐ.டி பீல்டில் வேலை செய்வோர்களின் எண்ணிக்கையின் சதவீதம் பார்த்தோம் என்றுச் சொன்னால் பெண்களின் எண்ணிக்கைதான் அதிகமாக இருக்கலாம். இன்னும் குறிப்பாகச் சொல்லப் போனால், வீட்டில் வேலை செய்து கொண்டிருந்தவர்கள், இரட்டை வேலையாக வெளியிலும் சென்று வேலை பார்க்க ஆரம்பித்துவிட்டதால்தான் ஆண்களுக்கு வேலை இல்லாத் திண்டாட்ட நிலை அதிகரித்துவிட்டது என்று சர்வே ரிப்போர்ட் எடுத்தாலும் பார்க்கலாம்.

இண்டர்நெட் மூலமாக வீட்டிலிருந்தே ஆன்லைன் ஜாப் செய்வோர்களின் எண்ணிக்கையின் நிலையை எனது டவுன்லைன் நிலையில் பார்க்கப் போனாலும் பெண்களின் எண்ணிக்கைதான் அதிகம்.

பார்ப்பதற்கு வேண்டும் என்றால், இங்கு ஆண்களின் இராஜ்ஜியம் போல் தெரியலாம், ஆனால் உண்மையில் ஆன்லைன் ஜாப்பில் பெண்களின் எண்ணிக்கைத் தொகையே அதிகம். இப்பெண்கள் மனம் வைத்தால் ஆன்லைன் உலக இராஜ்ஜியத்தினை கைப்பிடிக்கலாம்... ஆன்லைன் ஜாப் மூலம் கோடீஸ்வரிகளாகவும் ஆக முடியும்.

படுகை.காம் ஆரம்பக்கட்டத்தில்.. அதாவது நான் வருவாய் அற்ற நிலையில் இருந்த பொழுது எனது தன்னம்பிக்கைக்கு உரத்தினை ஊட்டி எனக்கு பக்கப் பலமாக நின்று, படுகையின் வளர்ச்சிக்கு பெரும் பங்கினை அளித்தவர்கள் பெண்கள். அவர்களை என்னால் ஒர் பொழுதும் மறக்க முடியாது. ஆனால், எப்படி அவர்களால் இடையில் பலனை அனுபவிக்காமலே வெளியில் செல்ல முடிந்தது என்பதுதான் ஆச்சர்யமாக இருக்கிறது.

ஆண்களைக்காட்டிலும் பெண்கள் பிடிவாதம் மிக்கவர்கள். எடுத்த காரியத்தினை சிறப்பாக முடிக்க வேண்டும் என்பதில் வைராக்கியம் கொண்டவர்கள். அப்படியான பெண்கள், இன்று படுகை.காம் தன் வருவாய் நிலைக்கு வந்து நிற்கும் நிலையில் இல்லாமல், இடையிலேயே எடுத்த காரியத்தினை முடிக்காமல் நகண்டு கொண்டார்கள் என்பது எனக்கு ஆச்சர்யமாக இருக்கிறது. பலனை பெறவில்லை என்பதில் வருத்தமாக இருக்கிறது... அவர்கள் நகண்டு கொண்டார்கள் என்றால், அன்றைய கஷ்டமான சூழலை என்னாலும் உணர முடிந்தது. இவ்வளவு கஷ்டப்பட்டும் பலன் கொடுக்காத இந்த ஆன்லைன் ஜாப்பினை நம்பி இனிமேலும் தொடர வேண்டுமா என்று நானும் நினைத்ததுண்டு. அப்படியான சூழலில் தான் அவர்கள் ஒவ்வொருவராக சூழல் திசை திருப்ப, திருப்பத்தில் ஐக்கியமாகிவிட்டார்கள். ஏமாற்றத்தில் நானும் இருந்ததால் அவர்களை தடுக்க முடியாதவனாக இருந்துவிட்டேன். இருந்தாலும் என் முயற்சியினை விடவில்லை, விடாது முயற்சித்தேன், நிலைப்பெற்றுவிட்டேன் என்ற நிலையையும் உணர்கிறேன். எனது வெற்றி என்பது, எவர்கள் எல்லாம் படுகையை விட்டு விலகிடக்கூடாது என்று எண்ணியும் விலகிட நேரந்ததோ, அவர்கள் எல்லாம் மீண்டும் களம் இறங்கும் வரை எனக்கு வெற்றி பெற்றதாக ஒர் திருப்தி வரவே வராது.

ஆரம்பக்கட்டத்தில் அமைந்த பெண்கள் அணி மிகவும் சிறப்பாகச் செயல்பட்டது, அவர்கள் துணையால் தான் படுகையில் பல பயிற்சிப் பதிவுகள் எழுதப்பட்டன. சொன்னதனை உடனே புரிந்து கொண்டு செயல்படும் திறமையான அப்பெண்களுக்கு, அத்தனை அவ்வளவு தெரியாத என்னால் அடுத்து என்ன என்று சொல்லிச் செயல்பட வைப்பதற்கே கஷ்டப்பட்ட சூழலில்... அவர்களே எனக்கு பாடம் எடுக்கும் அளவிற்கு, இது தான் பெர்பக்ட் என்று நான் செய்து காட்டியதனைக்காட்டிலும் சிறப்பாகச் செய்து என்னை பெரிமிதம் கொள்ளச் செய்வார்கள்.

ஆரம்பத்தில் என்னோடு இருந்தவர்கள் நான் சொல்லியதனை செய்தார்கள்... அவ்வாறு அன்று பயின்ற பாடம் தான் இன்று எனக்கு பண வருவாய் கொடுக்கிறது. இப்பொழுது அந்த பண வருவாய் கொடுக்கக்கூடிய பாடத்தினைத்தான் பயிற்சியாக மீண்டும் நீங்கள் செய்ய இருக்கிறீர்கள். அவர்களிடம் இருந்த திறமையினையும், இல்லாத பொறுமையையும் ஒருங்கே கொண்ட பெண்கள் கண்டிப்பாக இலட்சங்களை சம்பாதித்து கோடீஸ்வரியாக முடியும்.

பெண்களிடம் இயற்கையாகவே திறமை உண்டு, அதனை தகுதியாக பயிற்சியின் மூலம் மாற்றிக் கொள்ள வேண்டும். பொறுமையாக விடாது முயன்று உழைப்பதனை தன் தகுதிக்குத் தகுந்த அளவிற்கு சிறப்பாகச் செய்தல் வேண்டும். கடின உழைப்பு வீண்போகாதிருக்க திட்டமிட்டு, சரியான தருணத்தினை பயன்படுத்தி பணமாக மாற்றிட வேண்டும்.

இங்கு பணம் என்பது கடைசி நிலையில்தான் வருகிறது, ஆனால் ஆசை என்னவோ கோடீஸ்வரி என்று முதலில் வந்துவிடுகிறது. ஆசையின் மூலம் தான் இலக்கினை நிர்ணயித்து பாதையிட்டு பயணிக்க ஆரம்பிக்கிறோம் என்றுச் சொன்னாலும், ஆரம்பத்தில் கோடீஸ்வரிக்கு தேவையான பணம் என்பதனை கொஞ்சம் தள்ளி நிற்க வைக்க வேண்டும்.

ஆகையால், இலட்சம் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசையோடு ஓடி வருபவர்கள்... இலட்சம் எதற்கு? என்ற நிலையினை புரிந்தப் பின்... பணி செய்ய வேண்டும் என்ற நிலைக்கு வரும் பொழுது, உழுதால் ஒன்றும் கிடைக்காது, உழாமல் பயிர் ஊன்றி நல் விளைச்சலைக் கொடுக்காது என்ற உண்மையை அறிந்தப்பின், இலட்சத்தினைச் சம்பாதிக்க வேண்டும் என்றுச் சொன்னால், அடிப்படையாக தன் தகுதியினை உயர்த்த வேண்டும், கோடீஸ்வரி ஆகும் அளவிற்கு தன் திறமையினை முதலில் வளர்க்க வேண்டும் என்று வைராக்கியமும், பிடிவாதமும் கொண்ட நபர்களைத் தேர்ந்தெடுத்து ஆன்லைன் வேலைக்கு என ஒர் பெண் குழுவினை உருவாக்க நான் தயாராகிவிட்டேன்.

என் மீது நம்பிக்கை வைக்கிறீர்கள் என்பது இல்லை, அவ்வாறு பிறர் மீது நம்பிக்கை வைத்தல் என்பதும் கூடாத ஒன்று.

தன்னம்பிக்கை வேண்டும், தன்னால் முடியும் என்ற நம்பிக்கை வேண்டும். தன் தும்பிக்கையை நம்பி களம் இறங்கி வருபவர்கள் கண்டிப்பாக இலட்சம் இலட்சமாக சம்பாதிக்க முடியும், கோடீஸ்வரி ஆக முடியும்.

கோடீஸ்வரி தான் ஆக முடியுமா? கோடீஸ்வரன் ஆக முடியாதா? என்று கேட்டால் இரண்டுமே முடியும். ஆனால், நான் என் இலக்கினை இந்த வருடத்தில் முடிக்க வேண்டும் என்றுச் சொன்னால் கோடீஸ்வரிதான் செயல்படுத்த முடியும்.

எனக்கான இலக்கினை நான் நிர்ணயித்துவிட்டேன். அதிலிருக்கும் தடைகளையும் உணர்ந்துவிட்டேன். அவற்றினை உடைக்கவும் தீர்மானித்துவிட்டேன்.. இனி பயணத்தினை தொடர்வதும் இலட்சங்களை அடைவதும் தான் நோக்கம்.

நான் பயணிக்கிறேன்... என்னோடு சேர்ந்து பயணிப்பவர்கள் பயணிக்கலாம்... பயணச்சீட்டு கேட்பவர்களுக்கு எல்லாம் கிடைக்கும், வாங்கியவர்கள் இலக்கினை அடையும் வரை பயணிப்பதும், இடையே இறங்குவதும் விருப்பத்திற்கே விடப்பட்ட ஒன்று.

கண்டிப்பாக பெண்கள் இடையே இறங்கிவிடமாட்டார்கள் என நம்புகிறேன், ஆகையால்தான் கோடீஸ்வரி என்ற கனவினை விதைக்கிறேன். கோடி கோடியாக பணத்தில் மிதக்கலாம் என்ற உறுதியான மனதினை உருவாக்குகிறேன். கோடீஸ்வரி, பேரழகி என்பதனையும் நினைவுகூறுகிறேன். கிளியோபாட்ராவின் புத்திசாலித்தனம், வைராக்கியம், கம்பீரம், நளினம், ஒப்பனை ஆகியவை அவளை ஒர் பேரழகியாகவும் சரித்திரத்தின் நாயகியாகவும் மாற்றியது.

இந்த சமூகம் நம்மை பணத்தினைக் கொண்டுதான் மதிப்பிடுகிறது, கழுத்தில் கிடக்கும் தங்க நகையைக் கொண்டுதான் எடையிடுகிறது, கொஞ்சம் கூட மனதினைப் பார்ப்பதே இல்லை, மாயையை உணர்வதுமில்லை.

கோடீஸ்வரி ஆக வேண்டும் என்ற எண்ணம் உங்களிடமிருந்தால், சத்தியமாகச் சொல்லுகிறேன்... கண்டிப்பாக உங்களால் அதனை சாத்தியப்படுத்த முடியும்.

இப்பதிவினை எத்தனைபேர் படிப்பீர்கள் என்பதும் தெரியாது, யார் யார் படிப்பார் என்பதும் தெரியாது. ஆனால், ஒன்றினை நான் முழுமையாக நம்புகிறேன், யவர் ஒருவர் தான் கோடீஸ்வரி ஆக வேண்டும் என்ற எண்ணத்தில் தன்னை முழுமையாக நம்பி தன்னம்பிக்கை கொள்கிறாரோ அவர் கண்டிப்பாக கோடீஸ்வரிதான்.

கோடீஸ்வரி ஆவதற்கு என்ன வேண்டும் என்றுச் சொன்னால் ஒர் ஒன்று போடுங்க... அது பக்கத்துல இரண்டு பூஜ்ஜியம் சேர்த்தால் நூறு, இந்த காலத்துல நூறு ரூபாய் நோட்டு எல்லாம் சாதாரணம் ஆகிப்போச்சு. இன்னும் இரண்டு பூஜ்ஜியம் சேர்த்தால் பத்தாயிரம். இப்பெல்லாம் சர்வ சாதாரணமாக ஒர்நாள் கூலி ஆயிரம் ரூபாய் வாங்கும் அளவுக்கு ஆகிடிச்சிங்க... அப்படிப் பார்த்தால் 10 நோட்டுதாங்க பத்தாயிரம்.. இன்னும் இரண்டு பூஜ்ஜியத்தை சேர்த்தா?... பத்து இலட்சம் (10,00,000) ... இரண்டு சைபர்.. இரண்டு சைபர்னு தான் போட்டோம், பத்து இலட்சம் ஆகிடிச்சு... இன்னும் ஒர் சைபரையும் சேர்த்து போட்டுட்டா ஒர் கோடி... 1,00,00,000 ... தப்பாச் சொல்லிட்டேனோன்னு எழுதிப் பார்த்தேன்.. 7 சைபர் தாங்க கோடிக்கு இருக்கு. கோடியை ஆயிரத்தால் வகுத்துப் பார்த்தால் நூறு ஆயிர ரூபாய் கெட்டுதாங்க, ஒர் கோடி.

ஆயிரம்ங்கிறது சாதாரணம்.. அதுல நூறு கெட்டு இருந்தால் போதும் நீங்க கோடீஸ்வரி. நூறும் சரி ஆயிரமும் சரி சர்வ சாதாரணம், அப்ப கோடியும் சாதாரணம் தான், இல்லையா! அதனால் மலைப்படையாதீர்கள்.

இதனைப் படிச்சதுமே உங்களுக்கு சிரிப்பு வந்துச்சின்னா... கொஞ்சம் அப்படியே போய் ஒர் கிளாஸ் தண்ணி குடிங்க, ஆனால் சிரிக்காதீங்க.. ஏன்னா சீரியசா எழுதியிருக்கிறத படிக்கும் பொழுது சிரிக்கவே கூடாது... அப்படியும் சிரிப்பு வந்துச்சின்னா ஒர் மிளகாவை கடிச்சிட்டு அழுதிடுங்க... அழுகையை மறைக்க, குளிச்சிடுங்க... ஒர் குளியல் போட்டுட்டீங்கன்னா... சிரிப்புங்குறது ஆனந்தம் ஆகிடும்.

ஆனந்தம் என்கிறது அவ்ள சீக்கிரத்தில யாருக்கும் கிடைக்காது, ஆனந்தம் அடைந்த உங்களது மன எண்ணத்தில் கோடீஸ்வரி என்பது நிலைப்பெற்றால், அதனை ஆண்டவனே நினைத்தாலும் மாற்ற முடியாது. இதனால் தான் கோடீஸ்வரனை நம்பாமல் கோடீஸ்வரிக்கு தாவிட்டேன்.

எதாவது வேலையைப் பற்றிச் சொல்லுவாரு... அல்லது கொஞ்ச முதலீட்டில் ஆன்லைன் பிசினஸ் பற்றிச் சொல்லுவாரு என்று எண்ணிப் படித்தவர்கள், மொக்கைப் போடுவதனைப் படிக்க முடியாமல்.. பாதியிலேயே போயிருப்பாங்க... அதனையும் தாண்டி நீங்க படிச்சிக்கிட்டு இருக்கிறீங்கன்னா, ஒன்று உங்களுக்கு இதனை விட்டால் வேறு வழியில்லாமல் இருக்கலாம்... அதான் அப்பப்ப நடக்குமே, பஸ் ஏத்திவிட வந்தால், பாவி பஸ் ஸ்டாண்டிலேயே கழுத்த அறுக்கிறானே... பஸ் எப்படா வரும், பாய் எப்படா சொல்லலாம்னு நாக்க துறுத்திக்கிட்டு கோவத்தக்காட்டாம, பப்பிள்கம் இல்லாமலே நாக்கக் கடிச்சிக்கிற அந்த தருணமா இருக்கலாம்.. அப்படியாக இருந்தால், கம்ப்யூட்ர உடைக்காம.. சட்டவுன் பண்ணிட்டு, டிவில நல்லப்பாட்டு போடுறானான்னு பாருங்க.. ரிலாக்ஸ் ஆகிடலாம். (எனக்குத் தெரியும்... நல்லப்பாட்டு கேட்கலாம்னு டிவி முன்னால் உட்கார்ற அன்னைக்குத்தான் ஒர் பாட்டும் உருப்படியாக போடமாட்டாங்க... அப்புறம் எதுக்கு அந்த டிவி... அத வேணும்னா கோபத்துல உடைச்சிருங்க... ஆத்திரத்துக்குக்கூட பயன்படாத பொருள் எதுக்கு? காயிலான் கடைக்கு போட்ருவோம்...இல்ல போட்டிடுங்க.. ஒகே.)

இப்படித்தான், பணம் சம்பாதிக்கலாம் வாங்க என்றுச் சொல்லி, தினம் ஆயிரம் சம்பாதிக்கலாம்... இலட்சம் ரூபாய் சம்பாதிக்கலாம்... தினம் ரூ.10,00,000 எளிதாக சம்பாதிக்கணும்.. பணியே இல்லாமல் பணம் வாங்கலாம் வாங்க, கோடீஸ்வரன் ஆக்கும் கூகுள் சூத்திரம், பணத்தினைக் கொடுக்கும் மந்திரம், என்று பல பல பதிவுகள் இருக்கும்.. அத்தனையிலும் மொக்கையாக எதனையாவது சொல்லியிருப்பேனே தவிர... செய்தோம், காசு வாங்கினோம் என்று எதுவும் இல்லையே என்று என்னை திட்டாத குறையாக திட்டியவர்கள் ஏராளம்.

ஆனால் உண்மை என்னவென்றால், ஒவ்வொரு பதிவிலும் ஏதேனும் ஒர் கருவினை மையமாகக் கொண்டுதான் எழுதியிருப்பேனே தவிர, வெற்றுத்தனமாக எழுதியிருக்கமாட்டேன். ஆனால் அதனைப் புரிந்து கொள்ளும் அளவிற்கு புத்திசாலித்தனமும், நிதானமாக சிந்தித்து என்னதான் இதில் இருக்கு என்று ஆராய்வதற்கான பொறுமையும் இல்லாத காரணத்தினால், அவற்றினை படித்த மாத்திரத்தில் தோன்றியதை மனதில் கொண்டு உதாசினம் செய்தவர்கள் ஏராளம்.

என்னை மையப்படுத்துவனை விடுத்து, கோடீஸ்வரி என்று பெண்களை மையப்படுத்தி இலட்சத்தினை சம்பாதிப்பதற்கான பயிற்சியினை தொடங்குவதற்கான முதன்மை காரணம் என்றுச் சொன்னால்... அவர்களிடம் இருக்கும் அன்பான பேச்சுத் திறன், பிறர்களுக்கு அவர்கள் கொடுக்கும் மரியாதை, ஆசையை அடைய வேண்டும் என்ற பிடிவாத குணம், கோபத்தினை டக்கென முகத்தில் காட்டாது அமைதியாக விலகிச் செல்லும் பக்குவம், உறவினர்களிடம் கொண்டுள்ள பாசம், பிறரிடம் தனக்கு அன்பானவர்களை விட்டுக்கொடுக்காத தன்னிலை, சத்தமே இல்லாமல் சாதிக்கும் தந்திரம், இறை நம்பிக்கை.. இப்படி பல குணங்கள் அவர்களிடம் அடங்கியிருக்கிறது.
Image
ஆன்லைன் ஜாப் என்று சொல்லிவிட்டு, தகுதியாக எக்செல் தெரியுமா? பவர்பாயிண்ட் பிரசண்டேஷன் தெரியுமா? ஹெச்.டி.எம்.எல் தெரியுமா? ப்ரோக்கிராமிங்க் லேங்குவேஜ் என்ன படிச்சிருக்க? கஷ்டமர் டேட்டா பேஸ் கேண்டில் பண்ணத் தெரியுமா? போல்டா பேசத் தெரியுமா? பிரச்சனையை சமாளிக்கத் தெரியுமா? இலாப நஷ்டம் பார்க்கத் தெரியுமா? இப்படி ஜாப் சம்பந்தமா எதனையுமே தகுதியா எடுத்துக் கொள்ளாமல் பெண்களிடமிருக்கும் அடிப்படைத் தகுதியையே திரும்பவும் கேட்கிறேனே என்று உங்களுக்கு ஆச்சர்யமாக இருக்கலாம், இருந்தாலும் உண்மை யாதெனில் விரும்புவர்க்கே விரும்பும் யாவும் கிடைக்கும். கோடீஸ்வரி ஆக வேண்டும் என்ற விருப்பம் இருக்கா? ஆசைப்பட்டதை அடைந்தே தீர வேண்டும் என்ற பிடிவாத குணம் இருக்கா? அதுபோதும்.

இதுவரை நீங்கள் படித்திருந்தாலே உங்களால் ஆன்லைன் ஜாப் செய்ய முடியும்... அதற்கும் மேலே அடைந்தே தீர்வேன் என்ற பிடிவாத குணமும் இருக்குன்னு சொன்னீங்களே... அப்படின்னா.... நான் சொல்வதனை எப்பாடுபட்டாவது கஷ்டப்பட்டு செய்துவிடுவீங்க ... செய்துட்டா அப்புறம் பலன் கிடைக்காமலா போயிடும்? அல்லது பலன் கிடைக்கும் வரைக்கும் நீங்கள் விடா முயற்சியோடு தொடர்ந்து செய்யாமல் தான் விட்டு விடுவீர்களா?... இரண்டுமே இல்லை, பின் என்ன, நீங்கள் கோடீஸ்வரிதான்.

கோடீஸ்வரி ஆக வேண்டும் என்ற ஆசைக்கு ஒர் சின்ன விதை மட்டும் கண்டிப்பா முதலில் விதைச்சிடுங்க. விதையை வாங்கி விதைச்சிட்டிங்கன்ன, அப்புறம் தினமும் தண்ணீர் ஊற்ற வேண்டும் என்பது பெண்களுக்குத் தெரியாதது இல்லை. பணம் காய்க்கும் மரத்தின் விதைக்கு எந்த தண்ணீரை ஊற்றலாம் என்று நான் பயிற்சியில் கொடுத்துவிடுவேன்.... கிட்டத்தட்ட 50 நாட்கள் பயிற்சி. ஐம்பது நாளா??? என்று வாயை மட்டும் பிளந்திடாதீங்க... அப்புறம் கொசு புகுந்திடும்... வாமிட் வந்திடும்...

50 நாள் தான், அதுவும் விதைச்ச விதையின் பலனான பணத்தினை பெறுவதற்கான வேலையுடன் சேர்ந்த 50 நாள் பயிற்சிக்காக எந்த தொகையும் வேண்டாம், ஆனால் விதைக்கு ரூ.815 கொடுத்து GBDgift.com ஒர் அக்கவுண்ட் அக்டிவேட் செய்துவிடுங்கள். அம்புட்டு நேரம் பேசிட்டு கடைசியில் கையில காசு கேட்கிறீங்களே என்று நினைக்கலாம்... உண்மையில் Digital Marketing Course படிக்க செலவிடும் தொகையினை கணக்கீடு செய்யும் பொழுது இது வெறும் தியேட்டர் செலவுதான்.

பல ஆயிரங்களை செலவு செய்து படிக்க வேண்டிய டிஜிட்டல் மார்க்கெட்டிங் பிசினஸ் பயிற்சியினையே உங்களுக்கு நான் இலவசமாக கொடுக்கிறேன் என்றுச் சொன்னால் வாய்ப்பினை சரியாக பெண்கள் பயன்படுத்துவார்கள் என்ற நம்பிக்கையில் தான் கோடீஸ்வரி என்ற தலைப்பில் தலைப்பிட்டேன். அதுமட்டுமில்லாமல், பணமும் கைநிறைய சம்பாதிக்க ஆரம்பித்துவிட்டார்கள் என்றுச் சொன்னால்... அவர்களது மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. மகிழ்ச்சியினைக் காட்டிலும் சிறந்த ஒர் மதிப்பு எதுவும் இல்லை, அப்படியான மகிழ்ச்சியினை உங்களிடம் காண்பதில் தான் எல்லோர்க்குமே விருப்பம். மகிழ்ச்சியான மனதே சூப்பர் பவர் என்றுச் சொன்னால்... அந்த சூப்பர் பவர் சின்னக் காசினை கோடியாக விரைவில் மாற்றிவிடும்.

கடைசியா, விதைக்கான ரூ.815 கட்டத் தயார் என்பவர்களுக்குத்தான் இந்த கோடீஸ்வரியின் கனவு வேலை வாய்ப்பான GBDgift.com என்ற ஆன்லைன் ஜாப்பில் சேர்ந்து பணியாற்ற முடியும். ஜாப்பே தேவையில்லை என்பவர்களுக்கு பயிற்சியும் தேவையில்லை..

ஜாப் என்னவோ ரொம்ப ஈசி.... அதான் சொன்னேனே... உங்களுக்கான அடிப்படை குணமே போதும், அதனைக் கொண்டே ஈசியா இலட்சம் இலட்சமா சம்பாதித்து, கோடீஸ்வரி ஆகிவிடலாம் என்று, அது உண்மைதான். இந்த வேலைக்கு பெரிதாக எதுவும் தெரிந்திருக்க வேண்டிய தேவையில்லை... ஆனால் சொல்லிக் கொடுப்பதனை சரியாக செய்துவிடுதல் வேண்டும்.

50 நாட்கள் பயிற்சியில் அனைத்து விவரமும் கற்றுக் கொடுக்கப்படும்.. பயிற்சி ஆன்லைனில் தான். ஆகையால் இதனையும் வீட்டிலிருந்தப்படியே கிடைக்கும் ஒய்வு நேரத்தினை பயன்படுத்தி கற்றுக் கொள்ளும் கையோடே வேலையை அப்படியே செய்து கொண்டே வந்துவிடலாம்... அப்படி கற்றதை தினமும் சரியாக செய்து கொண்டே இருந்தால் போதும்.

பெரும்பான்மையான பெண்கள், தினம் ஆயிரம் சம்பாதிக்கிற மாதிரி ஏதாவது ஒர் ஜாப் மட்டும் சொல்லுங்க சார், அதனை சரியா செய்றேன் என்று சொல்வார்கள். அப்படி சரியாக செய்வீர்கள் என்ற நம்பிக்கையில் தான் உங்களை நம்பி 50 நாள் பயிற்சி திட்டத்தினை அறிமுகம் செய்கிறேன்.

பயிற்சியில் சேர விருப்பம் உள்ளவர்கள் "கோடீஸ்வரி- ஆன்லை வேலை" என்று தலைப்பிட்டு selvaathithan @ hotmail என்ற இமெயில் ஐடிக்கு தகவல் அனுப்புங்கள்.

தயவு pls details... என்று கேட்காதீர்கள்... விருப்பம் இருக்கிறது என்றுச் சொன்னால் அடுத்து கேட்க வேண்டியது, 815 ரூபாய எப்படி சார் உங்களிடம் தருவது என்பதுதான்... அப்படி கேட்டு மெயில் அனுப்பினீர்கள் என்றுச் சொன்னால், வங்கி விவரம் கொடுப்பேன்... அந்த அக்கவுண்ட்க்கு பணத்தினை அனுப்பிவிட்டுச் சொன்னால்... உங்களுக்கான பயிற்சிகள் தினம் கொடுக்க ஆரம்பித்துவிடுவேன்... அதனைப் பின்பற்றி நீங்கள் செய்ய வேண்டியதுதான். அதில் எந்தவொரு தயக்குமும் இல்லாமல் சந்தேகங்களைக் கேட்டு தெளிவுற பணிகளைச் செய்து கொண்டே வந்தீர்கள் என்றுச் சொன்னால் 50 நாட்களில் நீங்கள் பணம் சம்பாதிக்க ஆரம்பித்துவிடுவீர்கள்.

பெரிய பெரிய படிப்பு பல ஆயிரம் இலட்சம் என்று செலவு செய்து 3..4 வருடம் படித்துவிட்டுக்கூட வேலைக்கு போராடும் இந்தக் காலத்தில், ரூ.815 செலவில் 50 நாள் பயிற்சியில் பணமே வாங்க ஆரம்பித்துவிடலாம் என்பது மிகவும் மகிழ்ச்சியான விடயம். ஆகையால் வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

சந்தேகம் என்ற ஒன்று கண்டிப்பாக அனைவருக்கும் இருக்கும், எப்படி இந்த ஜாப்பினை நம்புவது?? என்ற கேள்வியிருந்தால் என்னிடமிருந்து வரும் ஒரே பதில்... நீங்க என்னும் பல பல வருடங்கள் இருப்பீர்கள் அல்லவா? அதுவரைக்கும் நாங்களும் இருப்போம்.. அப்படி இருக்கும் வாழ்நாளில் உங்களுக்கு என்று நம்பிக்கை என்ற ஒன்று பிறக்கிறதோ, அன்று சேர்ந்து கொண்டாலும் சரிதான்... ஆனால் சந்தேகம் என்ற நல்ல விடயத்தில், ஒர் நல்ல வாய்ப்பினையும் காலம் தாழ்த்துவது நல்லதா என்பதனை மட்டும் ஆழமாக யோசித்து விரைவாக முடிவெடுங்கள்...

இத்தனையும் உங்களிடம் சொல்வது, படுகை.காம்

வருங்கால கோடீஸ்வரிகளுக்கு எமது வாழ்த்துகள்.

நன்றி.
susmitharavi
Posts: 1
Joined: Sat Mar 26, 2016 6:15 pm
Cash on hand: Locked

Re: தன்னம்பிக்கை போதும் கோடீஸ்வரி ஆக வைக்கும் GBDgift

Post by susmitharavi » Sat Mar 26, 2016 6:21 pm

how to get this job
வெங்கட்
Cash on hand: Locked

Re: தன்னம்பிக்கை போதும் கோடீஸ்வரி ஆக வைக்கும் GBDgift

Post by வெங்கட் » Sat Mar 26, 2016 6:52 pm

சூப்பா்.
தயவு pls details... என்று கேட்காதீர்கள்..
இது சூப்பரோ சூப்பா். பொறுமையாக 10 நிமிடம் படிக்க நேரம் எடுத்துக் கொள்ளாமல் வாழைப்பழத்தை உாித்து நீட்டினாலும் விழுங்க சோம்பல் படுவோா் தன் நேரத்துடன் நமது நேரத்தையும் சோ்த்து வீணடிப்பவா்கள். சாியான சொல்அடி.
VRHOTSNACKERS
Posts: 1
Joined: Fri May 06, 2016 12:56 pm
Cash on hand: Locked

Re: தன்னம்பிக்கை போதும் கோடீஸ்வரி ஆக வைக்கும் GBDgift

Post by VRHOTSNACKERS » Fri May 06, 2016 2:01 pm

ஹாய் சார் , நான் இந்த ஆன்லைன் JOB சேர விரும்புகிறேன், நான் எப்படி பணம் செலுத்துவது அதனுடைய செலுத்தும்முறை எனக்கு மெயில் அனுப்பும் படி கேட்டுகொள்கிறேன். நன்றி BY கௌரி
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: தன்னம்பிக்கை போதும் கோடீஸ்வரி ஆக வைக்கும் GBDgift

Post by ஆதித்தன் » Fri May 06, 2016 5:50 pm

VRHOTSNACKERS wrote:ஹாய் சார் , நான் இந்த ஆன்லைன் JOB சேர விரும்புகிறேன், நான் எப்படி பணம் செலுத்துவது அதனுடைய செலுத்தும்முறை எனக்கு மெயில் அனுப்பும் படி கேட்டுகொள்கிறேன். நன்றி BY கௌரி

தகவல் private message அனுப்பியுள்ளேன்.... சரி பார்க்கவும்.
Tamilmozhi
Posts: 11
Joined: Sat Mar 05, 2016 7:37 pm
Cash on hand: Locked

Re: தன்னம்பிக்கை போதும் கோடீஸ்வரி ஆக வைக்கும் GBDgift

Post by Tamilmozhi » Thu Jun 16, 2016 12:46 am

ஹாய் சார் , நான் இந்த ஆன்லைன் JOB சேர விரும்புகிறேன், நான் எப்படி பணம் செலுத்துவது அதனுடைய செலுத்தும்முறை எனக்கு மெயில் அனுப்பும் படி கேட்டுகொள்கிறேன். நன்றி BY Tamilmozhi Subramani
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: தன்னம்பிக்கை போதும் கோடீஸ்வரி ஆக வைக்கும் GBDgift

Post by ஆதித்தன் » Thu Jun 16, 2016 1:14 am

Tamilmozhi wrote:ஹாய் சார் , நான் இந்த ஆன்லைன் JOB சேர விரும்புகிறேன், நான் எப்படி பணம் செலுத்துவது அதனுடைய செலுத்தும்முறை எனக்கு மெயில் அனுப்பும் படி கேட்டுகொள்கிறேன். நன்றி BY Tamilmozhi Subramani

தனிமடல் அனுப்பியுள்ளேன்.. பார்க்கவும்.
Post Reply

Return to “இலட்சமே இலட்சியம்”