5,00,000+++ ஆன்லைன் ஜாப் கட்டுரைகள் எழுதலாம்
படுகை.காம், ஆன்லைன் ஜாப் பற்றி தமிழில் எழுதப்பட்ட கட்டுரைகளை ரூ.5.00 கொடுத்துப் பெற்றுக் கொள்கிறது என்பது உங்களுக்குத் தெரியும் தான். ஆனால், அக்கட்டுரைகள் சொந்த ஆக்கமாகவும், 50 வரிக்கும் குறைவில்லாமல் இருக்க வேண்டும் என்றால், ஒர் நாளைக்கு ஒர் கட்டுரை தானே எழுத முடியும். அப்படியானால், சிறப்பாக சொந்தக் கட்டுரை எழுதும் ஒருவர் படுகை மூலம் தினம் வெறும் ரூபாய் 5.00/-தான் சம்பாதிக்க முடியுமா?? என்ற கேள்வி முழுமையாக எழலாம். ஆனால், உண்மை அதுவல்ல. படுகை எந்தவொரு முடிவெடுத்தாலும், அது உறுப்பினர்களின் நலனையும் மனதில் கொண்டுதான் செயல்படும். அந்த வகையில், கட்டுரைக்கான ஊக்கத்தொகை என்பது உங்களது கட்டணத்தொகையை திரும்பக் கொடுபதற்கு மட்டுமே. வருவாய் என்பது ஒர் ஆர்ட்டிகள் மூலம் ஆயிரம் ரூபாய் கூட உங்களால் பார்க்க முடியும்.
சிறப்பாக வாசகர்களுக்கு பயனுள்ள வகையில் கட்டுரைகள் எழுத ஆரம்பித்தீர்கள் என்றுச் சொன்னால் இரண்டாம் மாதம் முதலே உங்கள் கட்டுரைகளின் மதிப்பு பல மடங்காக உயர்ந்து வருவதனை கண்கூடாக பார்க்கலாம். அதற்கு நம் கையொப்ப விளம்பர உரிமையும், கட்டுரையில் எடுத்துக் கொள்ளும் அப்ளிகேட் லிங்கும் உறுதுணையாக இருக்கும். அதுவும் போகப் போக கட்டுரைகளின் எண்ணிக்கை கூடக்கூட நமது மாத வருவாய் மதிப்பும் உயர்ந்து, நமக்கான பதிவின் மதிப்பையும் உயர்த்திக் கொண்டே செல்லும்.
நிறைவான பதிவுகளைக் கொண்டால் நிறைவான வருவாய் பார்க்கலாம் என்பது உண்மை. அதே நேரத்தில், அக்கட்டுரைகள் சரியான கீ-வேர்டிலும் அமைந்திருக்க வேண்டும், அப்பொழுதுதான் நாம் வருவாய் பார்க்க முடியும். ஆகையால், ஆன்லைன் ஜாப் தளமான படுகையில் ஆன்லைன் ஜாப் பற்றிய முழுமையான கட்டுரைகளைக் குவித்து, எல்லோரும் பலனடைய வேண்டும் என்பதற்காகத்தான் "சின்னஞ்சிறு கட்டுரைகள்" என்ற களம் ஆன்லைன் ஜாப் மற்றும் ஆன்லைன் தொடர்பானவற்றை பதிவுகளாக எழுதுவதற்காக தொடங்கப்பட்டது. அதே புதிய தளங்களைப் பற்றிய அப்ளிகேட் கட்டுரைகளை எழுதி வெளியிட என்று விளம்பரமும் பணமும் என்ற வாசகர்கள் அனைவரும் படிக்கும் துணைக்களமும் உள்ளது.
http://img.ezinearticles.com/ezineartic ... online.png[/fi]எல்லோர் மனதிலும் இருக்கும் அச்சம், Online Job என்ற ஒர் Keyword-ல் அதுபற்றி 200 ஆர்ட்டிகள் எழுத முடியுமா? என்ற கேள்விதான். ஆனால், Article Writing- ஐ ஒர் தொழிலாக செய்து வரும் ezinearticles.com எனும் தளத்திற்குள் சென்றுப் பார்த்தால் Home Based Business என்ற தலைப்பில் மட்டும் கிட்டத்தட்ட 54,000-க்கும் மேற்ப்பட்ட ஆர்ட்டிகள் எழுதப்பட்டிருக்கின்றன.. என்னும் எழுதுவர். அதைப் போல், Internet & Business Online என்ற தலைப்பினைக் கொண்டு, அதற்கும் துணைத் தலைப்பு வகுத்து என கிட்டத்தட்ட 3,00,000-க்கும் மேற்ப்பட்ட ஆர்ட்டிகள் எழுதப்பட்டிருக்கின்றன, இன்னும் எழுதுவார்கள். அப்படியானால், இவற்றிற்கு எல்லாம் தலைமையான "Online Job" என்ற கீ வேர்டில் நாம் 4,00,000- இலட்சத்திற்கும் மேற்ப்பட்ட கட்டுரைகள் எழுத முடியும். அதற்கு எப்படி? என்று யோசிக்க வேண்டியதில்லை. EZineArticles.com வெளியிட்டிருக்கும் கட்டுரைகளைப் படித்தாலே போதும், நாமும் தினம் தினம் புதிது புதிதாக இரண்டு ஆன்லைன் ஜாப் பற்றிய ஆர்ட்டிகளை தமிழில் எழுத முடியும்.
இவ்வாறு நாம் தினம் தினம் புதிய ஆர்ட்டிகளை எழுதுவதன் மூலம் உறுதியான சிறு வருவாய் கிடைப்பதுடன், நமது எழுத்துத் திறமையாலும், நல்லதொரு தெளிவான கட்டுரையாலும் நமக்கென வாசகர்கள் வட்டம் கூடிக் கொண்டேச் செல்லும். வாசகர்கள் எண்ணிக்கைக் கூடினால்! தானாகவே நம் பதிவின் மதிப்பும் கூடுவதுடன், எளிதாக விளம்பரம் மூலமாகவும் நம்மால் சம்பாதிக்க முடியும். அதற்கான அத்தனை வசதிகளையும் படுகை செய்து கொடுத்திருப்பதுடன், புதியதாக ஒர் விற்பனை மையத்தையும் உறுப்பினர்களுக்காக தொடங்கக் காத்திருக்கிறது. அதாவது, உழைப்பு மட்டும் இருந்தால் பணம் சம்பாதிக்க முடியாது, அங்கே விற்பனையின் மூலம் பணமும் புழங்க வேண்டும், அப்பொழுதுதான் நிறைவான வருவாய் பார்க்க முடியும். ஆகையால், அதனை உறுப்பினர்களுக்காக படுகை செய்து கொடுக்கும்.
எழுத்தின் மகிமையை நீங்கள் அறியாதவர்கள் அல்ல! பாரதி மறைந்தாலும் பாரதி படைத்துச் சென்ற கவிதைகள் இன்றும் நம் நாவில் துள்ளுகின்றன... வள்ளுவன் மறைந்தாலும், அவன் எழுதிய திருக்குறள் என்றும் அழியாது
எனவே,
முழு நம்பிக்கையுடன்
சொந்த உழைப்புடனும்
உண்மையான அர்ப்பணிப்புடனும்
உங்கள் ஆர்ட்டிகளை பிறர் படித்து
நன்மை பெற வேண்டும் என்ற
ஒரே நோக்கத்துடன்,
தெளிவாகவும்,
விளக்கமாகவும்,
கட்டுரைகளாக எழுதினால்
வெற்றி நிச்சயம்
கோடீஸ்வரன் கனவும் நிலைப்படும்
வாழ்த்துகள்
இவண்
ஆதித்தன்
18-அக்டோபர்-2015Postby ஆதித்தன் » Tue May 01, 2012 8:18 am
Edit:
அன்று முதல் இன்று வரை நான் முக்கியத்துவம் கொடுப்பது பதிவுகளுக்குத்தான். எனது பணியே பதிவுகள் செய்வதுதான். அப்பதிவுகளே எனக்கான வருவாய்க்கான மூலம், ஆன்லைன் ஜாப் தளங்கள் என்பது அதற்கான சிறு ஆதாரம் மட்டுமே. அத்தளங்கள் மாறிக் கொண்டே இருந்தாலும், நாம் எழுதும் கட்டுரைகள் நிலை என்பது எப்பொழுது வாசகர்கள் நினைவில் நிலை நிற்கும் வகையில் செய்துவிட்டால், எத்தனை போலியான தளங்கள் வந்தாலும், அடுத்தடுத்து வரும் புதிய தளங்கள் வாயிலாகவும் நம்மை சம்பாதிக்க வைப்பது நமது பதிவுகளே. ஆகையால் பதிவுகளை அலட்சியம் செய்யாமல் செய்வதோடு, பிற உறுப்பினர்களோடு நட்புறவு கொள்ளுங்கள். உறுதியாக ஆன்லைனில் கைநிறைய சம்பாதிக்கலாம்.