நான் பிறந்த ஊர்
-
- Posts: 97
- Joined: Mon Jun 09, 2014 4:30 pm
- Cash on hand: Locked
நான் பிறந்த ஊர்
தமிழ் இலக்கியத்தில் திருக்கொடி மாடச்செங்குன்றம் என்று குறிப்பிடப்படும் ஊர் எங்கள் ஊர் தான் . இன்று அதன் பெயர் மருவி திருச்செங்கோடு என்று அழைக்கப்படுகிறது. இது நாமக்கல் மாவட்டத்தில் உள்ளது . அம்மை அப்பனுக்கு திருக்கோயில் உண்டு . வைகாசி விசாக தேர் திருவிழா மிக பிரபலம் . அம்மை அப்பனை அர்த்தணாரி ஈசுவர் என்று அழைப்பர் . செங்குன்றம் என்றால் சிவந்த நிறமுடைய மலை என்று பொருள் . ஆகாயத்தின் மேல் மார்க்கமாக செல்லும் பொழுது கீழாக அமையப்பெற்ற மலையை பார்த்தால் அம்மையப்பன் படுத்து இருப்பது போன்ற தோற்றத்தில் மலை காணப்படும்.Lorry Body Building க்கு பெயர் பெற்ற ஊர். ரிக்(Bore Well) வண்டி 10,000 க்கு மேல் உண்டு. power looms, mills என்று ஏராளமான தொழில் வாய்ப்புகளை தன்னகத்தே கொண்டுள்ளது இம் மாவட்டம். மேலும் அதிக கல்லூரிகலையும் பள்ளிகலையும் தன்னகத்தே கொண்டுள்ளது.