வணிகர்களே விழித்தெழுங்கள் ... சென்னைக்கு ஆபத்து

படுகை அன்பர்களின் சொந்த கதைகள் மற்றும் தொடர்கதைப் படைப்புகளைப் படித்து உங்களது கருத்துக்களையும் வாழ்த்துகளையும் கூறி உற்சாகப்படுத்துவது மட்டுமின்றி நீங்கள் எழுதிய கதைகளையும் எங்களோடு பகிர்ந்து கொள்ளுங்கள்.
Post Reply
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

வணிகர்களே விழித்தெழுங்கள் ... சென்னைக்கு ஆபத்து

Post by ஆதித்தன் » Mon Nov 14, 2016 8:59 pm

விழித்தெழு .. குலமே விழித்தெழு ... 2020 vision, Digital India, Clean India, Make in India என அனைத்தும் நமது குலத்தின் வணிகத்தொழிலை கேள்விக்குறியாக்குபவை.

நீர் நிலைகளை பல ஆண்டுகளுக்கு முன்னரே திட்டமிட்டே சரிப்படுத்தாமல் விவசாயிகளை கண்ணீர் சிந்தவைத்துவிட்டு, தற்பொழுது விவசாய நிலங்களை எல்லாம் கையகப்படுத்தி வெளிநாட்டு கார்ப்ரேட் கம்பெனிகளுக்கு கொடுக்க இருக்கிறார்கள், அவ்வாறு நடந்தப் பின்னர், எப்படி மெட்ரோ ரெயில் பாதைக்குள்ளே பாலம் போட்டு ஓடுதோ, அதைப்போல் கடலுக்குள் போகும் தண்ணீர் எல்லாம் வயக்காட்டுக்குள் வந்துவிடும். நாட்டின் நிலத்தினை கார்ப்ரேட் கம்பெனிகளுக்கு எழுதி கொடுப்பது அல்லது அரசு(வெள்ளைக்கார அடிமை அரசு) கொள்வது என்பது திட்டமிட்ட சதி.. இதனை ஒர்போதும் ஏற்கக்கூடாது.

அடுத்து டிஜிட்டல் இந்தியா என்றத் திட்டம் வணிகர்களை முழுமையாக ஓடுக்கும் திட்டம். ஒர் நாட்டின் அரசு அமைப்பு என்பது வணிகர்கள் மூலமே இருக்கிறது. வணிகரே அரசு அமைத்தல் வேண்டும். அவனே படைத்தல், காத்தல், அழித்தல் என்ற மூன்றையும் சரியான வடிவமைத்தல் வேண்டும். அவ்வாறே பழங்காலத்தில் நடந்தது இப்பொழுதும் நடந்து கொண்டிருக்கிறது. வணிகர்களிடமே பெருந்தொகைகளை அரசியல்வாதிகள் வாங்கி கட்சிகளை வளர்க்கிறார்கள்.. வணிகர்களே மக்களிடம் இருக்கும் பணத்தினை கைமாற்றுபவர்கள்.

ஒர் நாட்டின் அச்சாரம் வணிகம் என்பதனை ஆங்கிலேயர்கள் நன்றாகப் புரிந்து வைத்தவர்கள், அன்றும் கிழக்கு இந்திய கம்பெனி என்று வாணிபம் செய்ய வந்தவர்களே சிறு சிறு பகுதியாகப் பிடித்தவர்கள், படித்த புத்திசாலிகளை தன் கைக்குள் போட்டுக் கொண்டு மக்களை நயவஞ்சகமாக இம்சை, அகிம்சை என இரண்டாகப் பிரித்து, நமக்காகப் போராடிய அனைவரையும் கொன்றுத் தீர்த்துவிட்டு, இந்த அகிம்சை வஞ்சகர்களை வைத்து இந்தியா என்ற பெயர் வைத்து நம்மை அடிமையாக ஆண்டிருக்கிறார்கள் வெள்ளையர்கள்.

அவர்களது கொள்கையான உலகம் அனைத்தையும் தானே ஆள வேண்டும் என்றத் திட்டமிட்டு, அதற்குத் தேவையான அனைத்து வசதிகளை, மீண்டும் நமது புத்திசாலிகளை எல்லாம் கேம்பஸ் இண்டர்வியூ என்றுச் சொல்லி பலகோடி சம்பளம் கொடுத்து வேலைக்கு எடுத்துச் சென்றவர்கள், தற்போதைய நவீன டிஜிட்டல் உலகத்தினைப் படைத்து, அதற்கு நம்மை அடிமையாக்கியவர்கள்... வணிகத்தினையும் டிஜிட்டல் இந்தியாவுக்குள் அடக்கியிருக்கிறார்கள்.

வெள்ளையர்களின் கம்பெனியே அனைத்து வர்த்தகம் செய்யவதற்காக பலகட்ட அடிப்படைகள் அனைத்தையும் செய்துவிட்டு, தற்பொழுது மக்கள் கையில் இருந்த பணத்தினை எல்லாம் வாங்கிவிட்டு, ஒர் கார்டு மட்டும் கொடுத்து, ஆன்லைன் எதுவேண்டும் என்றாலும் வாங்கிக் கொள்ளுங்கள் என டேக் டைவர்சன் செய்திருக்கிறார்கள்.

இரண்டு நாட்கள் கடை விடுமுறை விட்டாலே, வியாபாரம் போய்விடும் என்று ஒவ்வொருநாளும் கஷ்டப்பட்ட நமது உறவுகளுக்கு, 50 நாட்கள் விடுமுறை சொல்லாமல் சொல்லி செய்திருக்கிறார்கள்.

ஒவ்வொரு வீட்டுக்கும் இண்டர்நெட், ஒவ்வொருவரும் வீட்டிலிருந்தே அவர்களிடம் பொருட்கள் வாங்கிக் கொள்ளலாம் என்பதே டிஜிட்டல் இந்தியா திட்டம்,

ஒரே கூகுள் உலகை ஆள்கிறது... ஒரே பேஸ்புக் உலகை ஆள்கிறது... நாளே ஒர் சில வெள்ளைக்கார வணிக தளங்களே இந்தியா முழுமையையும் ஆளப்போகிறது.

இது இன்னும் 3 ஆண்டுகளில் நடந்துவிடும்.. அதுவே 2020 திட்டம். எப்பொழுது முழுமையாக வணிகத்தினைப் பிடிக்கிறார்களோ அப்பொழுதே இந்தியா முழுமையாக ஆங்கிலேயர் ஆட்சிக்குள் சென்றுவிடும்.. அதனைக் கணக்கில் கொண்டே, அப்துல்காலம் வைத்து, 2020 ஆண்டில் இந்தியா வல்லரசு என்ற பரப்புரை செய்தார்கள், தற்பொழுது கிளின் இண்டியா சொல்கிறார்கள், அதாவது துப்புரவு செய்வதல்ல, இந்தியா என்றப் பெயரை கிளின் செய்துவிட்டு், United என்ற வாசகம் வந்துவிடும்.. அதாவது ஆங்கிலேயர் ஆட்சிக்குள் இந்த நாடு என்பதாகும்.

விவசாய மண்ணும், வணிகமுமே ஒர் நாடு யார் கையில் இருக்கிறது என்பதனை நிர்ணயிப்பதாகும்.

வணிகத்தினை நம் கையிலிருந்து பிடுங்கி, விவசாயிகளைபோல், கண்ணீர் விட வைக்கப்போகிறார்கள்.. அதற்கு முன் விழித்தெழு இனமே விழித்தெழு..

நாடான் என்றால், நிலக்கிழார் மட்டுமல்ல, அதனை ஆள்பவனுமே..

தற்போதைய சூழலில் இந்த படித்த புத்திசாலிகள் திட்டமிட்டு மோடியினை ஆட்சிக்குள் கொண்டுவந்ததோடு, அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களையும் ஒர் மறைமுக ஆளுமைக்குள் வைத்திருக்கிறார்கள்.

முகம் காட்டாமல் நாட்டுக்குள் அனைத்து பிரச்சனையும் செய்யும் இந்த புத்திசாலி ஆங்கிலேயர்களுக்கு, நாம் அதிபுத்திசாலி என்பதனை காட்டும் தருணம் நெருங்கிவிட்டது.. இந்த நேரத்தினை நலுவவிட்டால், 2020-இல் அவர்கள் திட்டமிட்டதுபோல நாட்டை கைப்பற்றிவிடுவார்கள்.

2020-இல் ஒர் போர் வேறு நடக்க இருக்கிறது.. அதுமட்டுமில்லாமல், வணிக மையமான சென்னையில் விமானத் தாக்குதல் திட்டமிட்டிருக்கிறார்கள். விமானத் தாக்குதல் முழுமையாக வணிகர்களை ஒழித்துவிட முடியும் என்பது அவர்களது திட்டமாக இருக்கும்... சென்னையைத் தாக்கினால், ஆன்லைன் வர்த்தகம் விரைவாக உயரும்.. இதனை லைகா என்ற இங்கிலாந்து இளவரசர் சார்லஸ் சார்ட்டி பண்ட்டில் இயங்கும் கம்பெனி தற்பொழுது தமிழகத்தில் எடுத்து வரும் படங்கள் மூலம் வெளிப்டுத்திவிட்டனர்.

இந்த வெள்ளைக்கார புத்திசாலிகள் எது செய்வதாக இருந்தாலும் வெளியில் ஏதேனும் ஒர் அடையாளத்தின் மூலம் செய்தே செய்கிறார்கள்.. ஆனால் நாம் தான் தெரியாமல் இருக்கிறோம்.

தெரிந்தும் ஒன்றும் செய்ய முடியாமல் பூர்வ குடி அமெரிக்கர்கள் இருக்கிறார்கள். ஆம், 2001 ஆம் ஆண்டு நடந்த 110 மாடி இரட்டைக்கோபுர தகர்ப்பு என்பது திட்டமிட்ட குண்டுவெடிப்பு.. ஒர் விமானம் தாக்கி அத்தனை பலமான கட்டடம் இடியாது.. அதுவும் சம்பந்தமே இல்லாத மூன்றாவது கட்டடம் இடிந்தது என்பது எல்லாம், அதிகார வர்க்கம் சொல்லியே மிரட்டல் பேச்சு... அங்குள்ள பூர்வ குடிகள் கேட்ட கேள்விள் ஒன்றுக்கும் பதில் சொல்லாமலே கேஸினை பின்லேடன் மீது பழிபோட்டு, ஈராக் & ஆப்கானிஸ்தான் என தனது திட்டப்படி எல்லையை விரித்துக் கொண்டது.

ஒர்பக்கம் முஸ்லிம் நாடுகள் பலவற்றினைப் பிடிக்க ISIS என்ற தீவிரவாத கும்பலை வளர்ததுவிட்டிருக்கிறது. இலங்கையைப் பிடிக்க விடுதலைப்புலிகளை வளர்த்ததும் அவர்களே, இலங்கை வர்த்தகத்தினை கட்டுக்குள் கொண்டுவந்ததும், அழித்ததும் அவர்களே..

தற்பொழுது போரினால் சீனாவையும் தன் கைக்குள் கொண்டுவரும் திட்டத்தோடே இந்தியாவினை போருக்கு தயார்படுத்திக் கொண்டிருக்கிறது.

உலக அரசியல் உண்மைகள் தெரிந்ததன் விளைவே என்னால், தமிழகத்தில் நடக்கும் நிகழ்வினை முன்கூட்டியே அறிய முடிந்தது.. என்னும் பலவிடயங்கள் இருக்கின்றன.. ஒவ்வொன்றாகத்தருகிறேன்..

இப்பொழுது உங்களது செயல் எல்லாம், நமது வணிகத்தினைப் பார்த்துக் கொள்ள, வங்கிகள் செய்யும் அக்கிரமத்தினை வெளிக்கொணர்ந்து, மக்களை வங்கிகளிருந்து பிரிக்க வேண்டும்.. ஆன்லைன் மூலம் அவர்கள் பொருள் வாங்குவதனை தடுக்க போதிய அனைத்து செயல்பாடுகளை முன்னெடுத்து இப்பொழுதே செய்தல் வேண்டும்.

அதுமட்டுமில்லாமல், தற்போதைய அரசியல் கட்சிகள் அனைத்தினை புறந்தள்ளிவிட்டு, அமைதியாக நமது ஆட்சியினை கொண்டுவர.. இதுவரை கீழ்சாதி என்று ஒதுக்கிய அனைத்து மக்களுக்கும் நாமே அரசு என்று அவர்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் செய்து கொடுத்து, நமக்கான மக்களாக மாற்ற வேண்டும்.

படைத்தல், காத்தல் அழித்தல் என்ற சூத்திரம் நம்முடையது... அதனைச் சரியாக பின்பற்றினால் நாமே இந்த உலகத்தின் ஆதிக்கச்சக்தி.

அமைதியாக செயலில் இறங்குங்கள்... ஆன்லைன் வர்த்தகத்தினை முடக்குங்கள் ... நிலம் கையகப்படுத்தும் திட்டத்தினை நிகழவிடாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.

நன்றி.
Post Reply

Return to “சிறுகதை மற்றும் தொடர்கதைகள்”