பாலைவன பைத்தியங்கள்!!!

மனதை மனதோடு மட்டும் அல்லாமல் இயற்கையோடு ஒப்பிட்டு நண்பர்களோடும் பகிரும் ஆயுதமான கவிதைகளை ஓடையில் மிதக்கவிட்டு அழகு பார்க்கும் படுகை நண்பர்களின் கவித கவித! நீங்களும் படித்து மகிழ்வது மட்டும் அல்லாமல் உங்களது கவிதைகளையும் எங்களுடன் பகிர்ந்து, எங்களையும் உற்சாகப்படுத்துங்கள்.
Post Reply
மன்சூர்அலி
Posts: 708
Joined: Sun Dec 16, 2012 1:48 pm
Cash on hand: Locked

பாலைவன பைத்தியங்கள்!!!

Post by மன்சூர்அலி » Sun Nov 17, 2013 1:05 pm

பாலைவன பைத்தியங்கள்!!!
:mudi: :mudi: :mudi:

ஒட்டகத்தோடு ஒப்பிட்டு இங்கே
ஒப்பாரி வைத்தோம் நாங்கள்.
ஒட்டகம் மேயும் நாட்டில்
ஒட்டகம் சுமக்கும் சுமையாய்
ஒன்று ரெண்டா சுமந்தோம் நாங்கள்

ரேத்தத்தை வியர்வையாக்கி
இந்த நிலத்திலே சிந்திய நாங்கள்
பெற்ற தாயை மறந்து
கட்டிய மனைவியை மறந்து
பெற்ற பிள்ளையை மறந்து

உற்றார் உறவினரை மறந்து
நண்பர்கள் பலரை மறந்து
நண்பிகள் சிலரை மறந்து
அடுத்த வேலை சாப்பாட்டிர்க்கு
பேயாய் நாங்கள் பறந்து

நாயாய் உழைத்தோம் இங்கே..
நாயாய் உழைத்த எங்களை
இந்த நாடு சொல்கிறது
நா கூசாமல் நாட்டைவிட்டு
வெளியே போ என்று..

நன்றி கெட்ட இந்த நாட்டில்
நாம் இங்கே மேலும்
உழைக்க வேண்டுமா?
இபோதுதான் யோசிக்க வைக்கிறது
தன்னை (எங்களை) மறந்து...
Post Reply

Return to “கவிதை ஓடை”