பாலைவன பாவங்கள் நாங்கள்!

மனதை மனதோடு மட்டும் அல்லாமல் இயற்கையோடு ஒப்பிட்டு நண்பர்களோடும் பகிரும் ஆயுதமான கவிதைகளை ஓடையில் மிதக்கவிட்டு அழகு பார்க்கும் படுகை நண்பர்களின் கவித கவித! நீங்களும் படித்து மகிழ்வது மட்டும் அல்லாமல் உங்களது கவிதைகளையும் எங்களுடன் பகிர்ந்து, எங்களையும் உற்சாகப்படுத்துங்கள்.
Post Reply
மன்சூர்அலி
Posts: 708
Joined: Sun Dec 16, 2012 1:48 pm
Cash on hand: Locked

பாலைவன பாவங்கள் நாங்கள்!

Post by மன்சூர்அலி » Thu Nov 14, 2013 1:42 pm

பாலைவன பாவங்கள் நாங்கள்!

உன் கடிதத்தின் கவிதை கண்டேன்
கண்கள் இரண்டும் கலங்க கண்டேன்
கலக்கிய கண்ணிற் துளிகள் கானல்
நீராய் உணர கண்டேன்.

என் பாவையை என் கண்கள் கண்டு
இரண்டு ஆண்டுகள் இன்றோடு முடிய கண்டேன்
என் ஆண்மை என்னுள் ஏங்க கண்டேன்
எனது இளமையும் இழக்க கண்டேன்

பத்தினியாய் வாழும் என் மனைவி ஏங்க கண்டேன்
பாவம் அவளும் ஒரு பெண்தானே
என என்னுள் புரிந்து கொண்டேன்
இந்த மண்ணில் சுரக்கும் பெட்ரோலை விட

எங்களின் உடலில் சுரந்த வியர்வை அதிகம் கண்டேன்
காணாத காட்சி எல்லாம் இங்கே கண்டேன்
எங்களின் வயது கூடுவதை கண்டேன்
உன் கடிதத்தின் கவிதை புரிந்தும் கொண்டேன்.
Post Reply

Return to “கவிதை ஓடை”