எங்கோ பிறந்து
எங்கோ வளர்ந்து
ஏதோ ஒரு புள்ளியில்
சந்தித்தோம் !
பெயரை மட்டுமே
அறிந்து நட்புகொண்டோம்
எவ்வளவோ முரண்கள்
இருந்தபோதும் - நாம் கொண்ட
அன்பு குறைந்துவிடவில்லை!
தோல்விகளை கண்டு - நான்
துவண்டு போன நொடியில்
ஒரு அன்னையாய்
எனை தாங்கினாய்!
தவறான பாதைகளில் -நான்
அடியெடுத்து வைத்த போது
எனை தடுத்து
நல்வழி காட்டினாய்!
தோல்விகளை முறித்து - நான்
வெற்றி கண்ட நேரத்தில்
நீயே வென்றதாய் எண்ணி
பெருமை கொண்டாய்!
உதிரத்தில் பங்கு
கொண்ட - உறவுகளும்
உதவ தயங்கிய
காலத்தில்...
உயிரில் பங்கு கொண்ட
உறவாய் - வாழ்க்கை எனும்
முள்ப்பாதை கடக்க
உடன் நிற்கும் நட்பே!
உன்னை போற்றி
பொக்கிஷமாய் பாதுக்கப்பதை
தவிர - வேறு என்ன
செய்து விடமுடியும்
என்னால்....
பொக்கிஷமாய் பாதுகாக்கிறேன்
-
- Posts: 67
- Joined: Fri Mar 23, 2012 1:04 pm
- Cash on hand: Locked
-
- Posts: 561
- Joined: Tue Mar 06, 2012 8:33 am
- Cash on hand: Locked
Re: பொக்கிஷமாய் பாதுகாக்கிறேன்
உடுக்கை இழந்தவன் கைபோல் ஆங்கேஉதிரத்தில் பங்கு
கொண்ட - உறவுகளும்
உதவ தயங்கிய
காலத்தில்...
உயிரில் பங்கு கொண்ட
உறவாய் - வாழ்க்கை எனும்
முள்ப்பாதை கடக்க
உடன் நிற்கும் நட்பே!
இடுக்கண் களைவதாம் நட்பு.
இந்த தாடிக்கார கிழவனின் வரிகளை, உங்கள் கவிதையை நினைவுக்குக் கொண்டு வருகின்றன.
வாழ்த்துக்கள்.