அம்மாவின் ஞாபங்கள்

மனதை மனதோடு மட்டும் அல்லாமல் இயற்கையோடு ஒப்பிட்டு நண்பர்களோடும் பகிரும் ஆயுதமான கவிதைகளை ஓடையில் மிதக்கவிட்டு அழகு பார்க்கும் படுகை நண்பர்களின் கவித கவித! நீங்களும் படித்து மகிழ்வது மட்டும் அல்லாமல் உங்களது கவிதைகளையும் எங்களுடன் பகிர்ந்து, எங்களையும் உற்சாகப்படுத்துங்கள்.
Post Reply
Thamillmadhan
Posts: 67
Joined: Fri Mar 23, 2012 1:04 pm
Cash on hand: Locked

அம்மாவின் ஞாபங்கள்

Post by Thamillmadhan » Mon Jul 09, 2012 11:44 am

பள்ளி
விடுதி வாழ்கையின்
முதல் பொழுதில் ...
அம்மா கொடுத்தனுப்பிய
நொறுக்கு தீனிகள்
எல்லாம் முடிந்து
எஞ்சியிருந்த ...
ஒரு
கடைசி முறுக்கையும்
சாப்பிட மனமில்லாமல்
மனது தொலைகிறது
பழைய நினைவுகளில் ...
கிழக்கு வாசலில்
புதைத்து வைக்க பட்டிருக்கும்
ஆட்டுக்கல்லில்
அம்மாவும், நானும்
சேர்ந்து
முருக்கிற்காக
மாவு ஆட்டியபோது,
அதில் நிறைந்திருந்தது
அம்மாவின் அன்பு.
முன் முற்றத்தில்
அடுப்பில் முறுக்கு
சுடும்போது
அம்மாவின் கை
பக்குவத்தில்
கலந்திருந்தது
தாய் பாசமும்
இப்படி
"அம்மாவின் நினைவுகளாய் "
மீதி இருக்கும்
கடைசி முறுக்கையும்
உண்ணாமல் பத்திரமாய்
பாதுகாக்க வேண்டும்
அடுத்த
விடுமுறை தொடங்கும் வரை...
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: அம்மாவின் ஞாபங்கள்

Post by ஆதித்தன் » Mon Jul 09, 2012 11:58 am

நினைவு முறுக்கு அருமை அருமை..

:ros: :ros: பாராட்டுகள் மதன்
thamilselvi
Posts: 95
Joined: Mon Mar 12, 2012 10:34 am
Cash on hand: Locked

Re: அம்மாவின் ஞாபங்கள்

Post by thamilselvi » Mon Jul 09, 2012 12:00 pm

முறுக்கு கொஞ்சம் பார்சல்....முறுக்கு சரி அது என்ன நினைவு முறுக்கு...புது பலகாரமோ?
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: அம்மாவின் ஞாபங்கள்

Post by ஆதித்தன் » Mon Jul 09, 2012 12:04 pm

thamilselvi wrote:முறுக்கு கொஞ்சம் பார்சல்....முறுக்கு சரி அது என்ன நினைவு முறுக்கு...புது பலகாரமோ?
அத எல்லாம் திங்க முடியாது... உணர மட்டுமே முடியும். :grain:


அதான் கவிதை முறுக்கு
thamilselvi
Posts: 95
Joined: Mon Mar 12, 2012 10:34 am
Cash on hand: Locked

Re: அம்மாவின் ஞாபங்கள்

Post by thamilselvi » Mon Jul 09, 2012 12:08 pm

புரிகிறது நினைவு முறுக்கோடு அம்மாவின் கை மணம் வந்து போகிறது நாசியில்....உங்கள் வார்த்தை விளையாட்டில்...முறுக்கலான பொய் கோபத்தோடு முறுக்கு பார்சல் அனுப்பாத தம்பிகள் எல்லோருக்கும் டூ விட்டாயிற்று :isir: :isir: :isir:
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: அம்மாவின் ஞாபங்கள்

Post by ஆதித்தன் » Mon Jul 09, 2012 12:15 pm

thamilselvi wrote:புரிகிறது நினைவு முறுக்கோடு அம்மாவின் கை மணம் வந்து போகிறது நாசியில்....உங்கள் வார்த்தை விளையாட்டில்...முறுக்கலான பொய் கோபத்தோடு முறுக்கு பார்சல் அனுப்பாத தம்பிகள் எல்லோருக்கும் டூ விட்டாயிற்று :isir: :isir: :isir:

திங்காத முறுக்கிற்காக டூ விடுங்க.. இல்லை சண்டையிடுங்க...

நாங்கல்லாம் எப்படி முறுக்கினாலும் பயப்பட மாட்டோமாக்க்கும்.. ஆமா

ஆனால், நாசி வரைக் கொண்டு வந்துச் சேர்த்த முறுக்கிற்கு மரியாதையாக காசைக் கொடுத்திடுங்க ... இல்லைன்னா.... இல்லைன்னா... :wae:
umajana1950
Posts: 561
Joined: Tue Mar 06, 2012 8:33 am
Cash on hand: Locked

Re: அம்மாவின் ஞாபங்கள்

Post by umajana1950 » Mon Jul 09, 2012 7:32 pm

"அம்மாவின் நினைவுகளாய் "
மீதி இருக்கும்
கடைசி முறுக்கையும்
உண்ணாமல் பத்திரமாய்
பாதுகாக்க வேண்டும்
அடுத்த
விடுமுறை தொடங்கும் வரை...
அட்டகாசமான கவிதை......உணர்வுகளை பிரதிபலிக்கும் அருமையான வரிகள். வாழ்த்த வரிகள் தேடி வசமாக மாட்டிக் கொண்டேன். hats off.
muthulakshmi123
Posts: 1266
Joined: Thu Mar 08, 2012 2:36 pm
Cash on hand: Locked

Re: அம்மாவின் ஞாபங்கள்

Post by muthulakshmi123 » Mon Jul 09, 2012 9:15 pm

கவிதை அருமை.. வரிகளும் அருமை.. இனி முறுக்கு சாப்பிடும் போதெல்லாம் உங்களை நினைக்க செய்து விட்டீர்கள் வாழ்த்துக்கள்.. :ros: :ros: :ros: :ros: :ros: :ros:
Post Reply

Return to “கவிதை ஓடை”