ஏன் வந்தாய்?

மனதை மனதோடு மட்டும் அல்லாமல் இயற்கையோடு ஒப்பிட்டு நண்பர்களோடும் பகிரும் ஆயுதமான கவிதைகளை ஓடையில் மிதக்கவிட்டு அழகு பார்க்கும் படுகை நண்பர்களின் கவித கவித! நீங்களும் படித்து மகிழ்வது மட்டும் அல்லாமல் உங்களது கவிதைகளையும் எங்களுடன் பகிர்ந்து, எங்களையும் உற்சாகப்படுத்துங்கள்.
Post Reply
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

ஏன் வந்தாய்?

Post by ஆதித்தன் » Sun Jul 08, 2012 9:03 pm

என் உயிரே!
ஏன் வந்தாய்?

காணும் பொழுதெல்லாம்
கண்ணீரை பரிசளித்தவளே
ஏன் வந்தாய்?

வாழ்தல் ஏனென்று
வரவேற்று நிற்கையிலே
வலிகூறி மறுத்தவளே
ஏன் வந்தாய்?

நலம் காண வந்தாயோ
நான் படும்பாடு காண வந்தாயோ!
ramkumark5
Posts: 253
Joined: Tue Mar 06, 2012 7:43 pm
Cash on hand: Locked

Re: ஏன் வந்தாய்?

Post by ramkumark5 » Sun Jul 08, 2012 9:31 pm

அப்படி என்ன விரக்தி உங்களுக்கு????

:enn: :enn: :enn:
umajana1950
Posts: 561
Joined: Tue Mar 06, 2012 8:33 am
Cash on hand: Locked

Re: ஏன் வந்தாய்?

Post by umajana1950 » Sun Jul 08, 2012 9:42 pm

காணும் பொழுதெல்லாம்
கண்ணீரை பரிசளித்தவளே
ஏன் வந்தாய்?
காணும் பொழுதெல்லாம் கண்ணீரைப் பரிசளித்தவள், வந்தால் என்ன? போனல் தான் என்ன?
கண்டவுடனே மனதைக் கலகலப்பாக்கும் கன்னியைப் பற்றி மட்டுமே கவலைப் படுங்கள்.
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: ஏன் வந்தாய்?

Post by ஆதித்தன் » Sun Jul 08, 2012 10:43 pm

ramkumark5 wrote:அப்படி என்ன விரக்தி உங்களுக்கு????

:enn: :enn: :enn:
கால்
இங்கே
ஊன்றினால் சரியும்
அங்கே
ஊன்றினால் உடையும் - என்ற
இரண்டும் கெட்டான் நிலை
சற்று மறந்து
ஒர் நிமிடத்தில் முடித்திடலாம்
எட்டி எடுத்திடலா மென...
எட்ட எட்டாது போகவே...
ஒர் பக்கம் அழுத்தம்
கொடுக்க சரிந்தது கிரேடு..
வெடித்தது பாட்டில்கள் ...
சீறியது இரத்தம்!!!
விசாரித்தது நலம்!

இப்ப வலிக்கிறதுனால ஏன் வந்தாய் என்ற கேள்வி!

அம்முட்டுத்தான் வேற ஒன்னும் இல்ல... சின்னதே சின்னதான காயம்...
umajana1950 wrote:
காணும் பொழுதெல்லாம்
கண்ணீரை பரிசளித்தவளே
ஏன் வந்தாய்?
காணும் பொழுதெல்லாம் கண்ணீரைப் பரிசளித்தவள், வந்தால் என்ன? போனல் தான் என்ன?
கண்டவுடனே மனதைக் கலகலப்பாக்கும் கன்னியைப் பற்றி மட்டுமே கவலைப் படுங்கள்.
மன்னித்துவிடு!
இரத்தத்தின் இரத்தமாக
உயிர் கொடுத்தவள்
அவள் அல்லவா!
அக்குருதியை
அவளென்று குறியாமல்
எப்படி தவிர்ப்பேன்!
Post Reply

Return to “கவிதை ஓடை”