சீர் :
இரண்டு அல்லது மூன்று அசைகள் சேர்ந்து வருவது சீர் ஆகும். அதனை ஈரசைச்சீர் மற்றும் மூவசைச்சீர் என இரண்டு வகையாகப் பிரித்துள்ளனர். அதைப்போல் ஒற்றையாக வரும் அசையினை அசைச்சீர் என குறிப்பிடுவர், இது வெண்பாவின் ஈற்றுச்சீராக அமையும்.
1. ஈரசைச்சீர் :
நேர், நிரை ஆகிய இரண்டு அசைகளையும் பெருக்கினால் மாச்சீர்கள் இரண்டும் விளச்சீர்கள் இரண்டும் என நான்கு ஈரசைச்சீர்கள் கிடைக்கும். அவை, கீழே அட்டவணையில் வாய்ப்பாடோடு கொடுக்கப்பட்டுள்ளது பார்க்கவும்.
2. மூவசைச்சீர் :
மாச்சீர் மற்றும் விளச்சீரோடு மீண்டும் நேர், நிரை ஆகிய அசைகளைப் பெருக்கினால் நான்கு காய்ச்சீர் + நான்கு கனிச்சீர் ஆக மொத்தம் 8 மூவசைச்சீர்கள் கிடைக்கும். அவை, கீழே அட்டவணையில் வாய்ப்பாடோடு கொடுக்கப்பட்டுள்ளது பார்க்கவும்.
நாம் பயில இருக்கும் வெண்பா பாடத்தில் மாச்சீர், விளச்சீர் மற்றும் காய்ச்சீர் ஆகிய 8 சீர் வகைகள் மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. ஆகையால், நாம் கனிச்சீரை விட்டுவிடலாம்.
3. அசைச்சீர் :
வெண்பாவின் ஈறுதிச் சீர் ஒற்றைச் சீராகவே அமைய வேண்டும் என்பது வெண்பா விதி. அதாவது வெண்பாவின் இறுதி அடியில் வரும் மூன்றாவது சீர், நேர் அல்லது நிரை என்ற ஒற்றை அசை கொண்டு முடிய வேண்டும் என்பதுதான். இதில் நேர் என்பதனை நாள் என்றும் நிரை என்பதனை மலர் என்றும் வாய்ப்பாடாக கொள்வர். இதில் ஒர் விதிவிலக்கும் உண்டு. அதாவது, இதனோடு "குசுடுதுபுறு" எனும் வல்லின உகரம் மட்டும் சேர்ந்து வரலாம். அவ்வாறு வந்தால் நாள் > காசு (நேர்பு) ஆகவும், மலர் > பிறப்பு (நிரைபு) ஆகவும் மாறும்.
எடுத்துக்காட்டு:
பார் = நேர் = நாள்
தல = நிரை = மலர்
பாடு = நேர்பு = காசு
உலகு = நிரைபு = பிறப்பு
குறிப்பு : உலகு, பாடு போன்ற வார்த்தைகள் ஈற்றுச்சீராக அல்லாமல் வேறு இடத்தில் வரின் அதனை உலகு = நிரை/நேர் = புளிமா என்றும் பாடு = நேர்/நேர் = தேமா என்றும் பிரிக்க வேண்டும்.
இதுவரையிலும் எழுத்து, அசை மற்றும் சீர் ஆகிய மூன்றினைப் பற்றிச் சொல்லியாகிவிட்டது. அதைப்போல் முந்தையப் பாடத்தின் போது வார்த்தைகளை அசை பிரித்துக் காட்டச் சொல்லியிருந்தேன். இப்பொழுது நாம் சீர் மற்றும் அசைக்கான வாய்ப்பாடு பற்றியும் பார்த்துவிட்டதால்... இரண்டடி வெண்பாவால் எழுதப்பட்ட திருக்குறளை அசை பிரித்து, வாய்ப்பாடோடு காட்டும் பயிற்சியினைக் கொடுக்கிறேன். அதற்கான,
எடுத்துக்காட்டு 1:
குறள் :
அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவான் முதற்றே உலகு
அசை:
நிரை/நேர் - நிரை/நேர் - நிரை/நேர்/நேர் - நேர்/நேர்
நிரை/நேர் - நிரை/நேர் - நிரை/நேர்
வாய்ப்பாடு:
புளிமா - புளிமா - புளிமாங்காய் - தேமா
புளிமா - புளிமா - பிறப்பு (நிரைபு)
எடுத்துக்காட்டு 2:
குறள் :
என்பி லதனை வெயில்போலக் காயுமே
அன்பி லதனை அறம்
அசை:
நேர்/நேர் - நிரை/நேர் - நிரை/நேர்/நேர் - நேர்/நிரை
நேர்/நேர் - நிரை/நேர் - நிரை
வாய்ப்பாடு:
தேமா புளிமா புளிமாங்காய் கூவிளம்
தேமா புளிமா மலர்
===================================================
நான் இரண்டு குறளுக்கு அசை பிரித்து, அதற்கான வாய்ப்பாடையும் கூறிவிட்டேன். அதைப்போல் நீங்களும் பயிற்சியாக இரண்டு குறளுக்கு சரியாக அசை பிரித்து வாய்ப்பாடு சொல்லுங்கள்.
இப்பயிற்சியினை செய்துவிட்டு அடுத்த பகுதியான தளை என்பதற்குள் செல்லலாம்.
தொடர்ச்சியாக படிக்க கிளிக் > http://padugai.com/tamilonlinejob/viewt ... 7848#p7602" onclick="window.open(this.href);return false;
இரண்டு அல்லது மூன்று அசைகள் சேர்ந்து வருவது சீர் ஆகும். அதனை ஈரசைச்சீர் மற்றும் மூவசைச்சீர் என இரண்டு வகையாகப் பிரித்துள்ளனர். அதைப்போல் ஒற்றையாக வரும் அசையினை அசைச்சீர் என குறிப்பிடுவர், இது வெண்பாவின் ஈற்றுச்சீராக அமையும்.
1. ஈரசைச்சீர் :
நேர், நிரை ஆகிய இரண்டு அசைகளையும் பெருக்கினால் மாச்சீர்கள் இரண்டும் விளச்சீர்கள் இரண்டும் என நான்கு ஈரசைச்சீர்கள் கிடைக்கும். அவை, கீழே அட்டவணையில் வாய்ப்பாடோடு கொடுக்கப்பட்டுள்ளது பார்க்கவும்.
2. மூவசைச்சீர் :
மாச்சீர் மற்றும் விளச்சீரோடு மீண்டும் நேர், நிரை ஆகிய அசைகளைப் பெருக்கினால் நான்கு காய்ச்சீர் + நான்கு கனிச்சீர் ஆக மொத்தம் 8 மூவசைச்சீர்கள் கிடைக்கும். அவை, கீழே அட்டவணையில் வாய்ப்பாடோடு கொடுக்கப்பட்டுள்ளது பார்க்கவும்.
அசை | வாய்ப்பாடு | அசை | வாய்ப்பாடு |
மாச்சீர்கள் | விளச்சீர்கள் | ||
நேர் நேர் | தேமா | நிரை நிரை | கருவிளம் |
நிரை நேர் | புளிமா | நேர் நிரை | கூவிளம் |
காய்ச்சீர்கள் | கனிச்சீர்கள் | ||
நேர் நேர் நேர் | தேமாங்காய் | நேர் நேர் நிரை | தேமாங்கனி |
நிரை நேர் நேர் | புளிமாங்காய் | நிரை நேர் நிரை | புளிமாங்கனி |
நிரை நிரை நேர் | கருவிளங்காய் | நிரை நிரை நிரை | கருவிளங்கனி |
நேர் நிரை நேர் | கூவிளங்காய் | நேர் நிரை நிரை | கூவிளங்கனி |
3. அசைச்சீர் :
வெண்பாவின் ஈறுதிச் சீர் ஒற்றைச் சீராகவே அமைய வேண்டும் என்பது வெண்பா விதி. அதாவது வெண்பாவின் இறுதி அடியில் வரும் மூன்றாவது சீர், நேர் அல்லது நிரை என்ற ஒற்றை அசை கொண்டு முடிய வேண்டும் என்பதுதான். இதில் நேர் என்பதனை நாள் என்றும் நிரை என்பதனை மலர் என்றும் வாய்ப்பாடாக கொள்வர். இதில் ஒர் விதிவிலக்கும் உண்டு. அதாவது, இதனோடு "குசுடுதுபுறு" எனும் வல்லின உகரம் மட்டும் சேர்ந்து வரலாம். அவ்வாறு வந்தால் நாள் > காசு (நேர்பு) ஆகவும், மலர் > பிறப்பு (நிரைபு) ஆகவும் மாறும்.
எடுத்துக்காட்டு:
பார் = நேர் = நாள்
தல = நிரை = மலர்
பாடு = நேர்பு = காசு
உலகு = நிரைபு = பிறப்பு
குறிப்பு : உலகு, பாடு போன்ற வார்த்தைகள் ஈற்றுச்சீராக அல்லாமல் வேறு இடத்தில் வரின் அதனை உலகு = நிரை/நேர் = புளிமா என்றும் பாடு = நேர்/நேர் = தேமா என்றும் பிரிக்க வேண்டும்.
இதுவரையிலும் எழுத்து, அசை மற்றும் சீர் ஆகிய மூன்றினைப் பற்றிச் சொல்லியாகிவிட்டது. அதைப்போல் முந்தையப் பாடத்தின் போது வார்த்தைகளை அசை பிரித்துக் காட்டச் சொல்லியிருந்தேன். இப்பொழுது நாம் சீர் மற்றும் அசைக்கான வாய்ப்பாடு பற்றியும் பார்த்துவிட்டதால்... இரண்டடி வெண்பாவால் எழுதப்பட்ட திருக்குறளை அசை பிரித்து, வாய்ப்பாடோடு காட்டும் பயிற்சியினைக் கொடுக்கிறேன். அதற்கான,
எடுத்துக்காட்டு 1:
குறள் :
அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவான் முதற்றே உலகு
அசை:
நிரை/நேர் - நிரை/நேர் - நிரை/நேர்/நேர் - நேர்/நேர்
நிரை/நேர் - நிரை/நேர் - நிரை/நேர்
வாய்ப்பாடு:
புளிமா - புளிமா - புளிமாங்காய் - தேமா
புளிமா - புளிமா - பிறப்பு (நிரைபு)
எடுத்துக்காட்டு 2:
குறள் :
என்பி லதனை வெயில்போலக் காயுமே
அன்பி லதனை அறம்
அசை:
நேர்/நேர் - நிரை/நேர் - நிரை/நேர்/நேர் - நேர்/நிரை
நேர்/நேர் - நிரை/நேர் - நிரை
வாய்ப்பாடு:
தேமா புளிமா புளிமாங்காய் கூவிளம்
தேமா புளிமா மலர்
===================================================
நான் இரண்டு குறளுக்கு அசை பிரித்து, அதற்கான வாய்ப்பாடையும் கூறிவிட்டேன். அதைப்போல் நீங்களும் பயிற்சியாக இரண்டு குறளுக்கு சரியாக அசை பிரித்து வாய்ப்பாடு சொல்லுங்கள்.
இப்பயிற்சியினை செய்துவிட்டு அடுத்த பகுதியான தளை என்பதற்குள் செல்லலாம்.
தொடர்ச்சியாக படிக்க கிளிக் > http://padugai.com/tamilonlinejob/viewt ... 7848#p7602" onclick="window.open(this.href);return false;