மனதில் தெரித்தவை
Posted: Wed Jun 08, 2016 10:18 am
[youtube]https://www.youtube.com/watch?v=KcZTY1K1K0E[/youtube]
வாண்டுகளுக்கு மத்தியில்
விவாதம் செய்து
விட்டில் பூச்சியாய்
விளையாடிப் போகும்
வயதுமிகு பெற்றவர்களின்
வினை புரியவில்லை
============================
அறிந்தும் ஆசைக்கு அசைபோடும் மனமே
அசையாது இசைந்திடவே புன்னகை பூக்கும் புகழவே!
புரிந்து பிறந்த இடம் புகுவாய்
பூவுலகம் யாவும் புன்னகை பூப்பாய்
====================
பாத்திரம் கோடி படைத்தாலும்
பாவம் படைப்பவனுக்கு பாடம்
பாத்திரம் தாங்கா சிரிப்பு தானடி
=============================
புரிந்தும் புரியாது
புதிராவது புன்னகைக்கு
புனல் பூக்க பூவே புரிந்து
புரியாமல் பூமராங்காய்
புடைக்குள் புகு புகு
=======================
பெற்ற வரத்தில்
பெரும் வரம்
தூங்குவதும்
தூங்கி எழுகையில்
காணா கண்ணீரும்
========================
சிந்தனையில்லா
சிரிப்பினைக் காண
ஆயிரம் என்ன
ஆயிரம் ஆயிரம்
பிறப்புகள் காண்பேன்
துன்பம் ஏதாயினும்
========================
நித்தமும் நிலவிற்காய்
நிலத்தில் காத்திருக்கும்
ஜீவன்களுக்கு மத்தியில்
ஜீவனுள் முதல்வனாம்
தாய்க்கும் தலைவனாம்
தன்னல மற்றவனாம்
பகலவனை தேடுவார்
பாதி தேரலையே!
=====================
உற்றது ஒன்றே மெய்யாம்
அற்றது யாவும் பொய்யாம்
மெளனம் புகழ்ந்து
மெய்யாய் தெளிக்கும்
பூரணம் போற்றும்
பொய்ப்புலவன் அறிந்தது
================================
வாண்டுகளுக்கு மத்தியில்
விவாதம் செய்து
விட்டில் பூச்சியாய்
விளையாடிப் போகும்
வயதுமிகு பெற்றவர்களின்
வினை புரியவில்லை
============================
அறிந்தும் ஆசைக்கு அசைபோடும் மனமே
அசையாது இசைந்திடவே புன்னகை பூக்கும் புகழவே!
புரிந்து பிறந்த இடம் புகுவாய்
பூவுலகம் யாவும் புன்னகை பூப்பாய்
====================
பாத்திரம் கோடி படைத்தாலும்
பாவம் படைப்பவனுக்கு பாடம்
பாத்திரம் தாங்கா சிரிப்பு தானடி
=============================
புரிந்தும் புரியாது
புதிராவது புன்னகைக்கு
புனல் பூக்க பூவே புரிந்து
புரியாமல் பூமராங்காய்
புடைக்குள் புகு புகு
=======================
பெற்ற வரத்தில்
பெரும் வரம்
தூங்குவதும்
தூங்கி எழுகையில்
காணா கண்ணீரும்
========================
சிந்தனையில்லா
சிரிப்பினைக் காண
ஆயிரம் என்ன
ஆயிரம் ஆயிரம்
பிறப்புகள் காண்பேன்
துன்பம் ஏதாயினும்
========================
நித்தமும் நிலவிற்காய்
நிலத்தில் காத்திருக்கும்
ஜீவன்களுக்கு மத்தியில்
ஜீவனுள் முதல்வனாம்
தாய்க்கும் தலைவனாம்
தன்னல மற்றவனாம்
பகலவனை தேடுவார்
பாதி தேரலையே!
=====================
உற்றது ஒன்றே மெய்யாம்
அற்றது யாவும் பொய்யாம்
மெளனம் புகழ்ந்து
மெய்யாய் தெளிக்கும்
பூரணம் போற்றும்
பொய்ப்புலவன் அறிந்தது
================================