Page 1 of 1

தமிழுக்கு தாயிக்கு நன்றி.

Posted: Mon Dec 15, 2014 12:00 pm
by மன்சூர்அலி
தமிழ் மொழி பேசத்தான்
தாகித்து போனது உள்ளம்
தமிழ் மொழியை கேட்கத்தான்
தவித்து போனது இதயம்.

கடல் தாண்டி இருந்ததால்
காணவில்லை என் மொழி
கவலை பட்டேன் நானும்
காண வேண்டும் தமிழ் மொழியை..

பேச வேண்டும் என் மொழியை
எழுத வேண்டும் என் மொழியில்
என எனக்குள் ஓர் போர் கொடி
கண்டேன் படுகை.காம்யை.

என் தமிழ் தாய் இங்கேயும் உலா
வருகிறாள். உலக தமிழர்களை
மகிழ்விக்க என நினைக்கும் போது
நன்றி சொல்கிறது தமிழ் உள்ளங்கள்...