Page 1 of 1

காதல் நாற்று!!

Posted: Sat Nov 29, 2014 10:32 am
by மன்சூர்அலி
காதல் நாற்று!!
************

நீ எட்டி எடுத்து
நடந்து வரும் போது
உன்னை தொட்டு பார்க்க
ஆசைப்பட்டது என் உள்ளம்.

நீ ஏறிட்டு என்னை
பார்க்கும் போது எல்லாம்
உன்னை கட்டி பிடிக்க
ஏங்கியது என் இதயம்.

என் மனதில் பட்டு
விட்டாய் நீ...உன்னை
என் மனதில் நாற்றாய்
நட்டு விட்டேன்..நான்.

காதல் நாற்றாய்...நீ
என் மனதிலே வளர்ந்து
சொல்லிவிடு நீ என்னை
காதலிப்பதாக... காத்திருக்கிறேன்.. :ro:

Re: காதல் நாற்று!!

Posted: Tue Jun 18, 2019 1:58 pm
by sujatham90
காதல் என்னும் நாற்றினை நட்டு வளர்த்து அறுவடை செய்வதற்குள் கருகி விடுகின்றது.