Page 1 of 1

சாரி சொல்கிறது ஒர் காதல்!!

Posted: Mon Sep 15, 2014 11:32 am
by மன்சூர்அலி
சாரி சொல்கிறது ஒர் காதல்!!

அத்தை மகள் இருக்கிறாள் என்று
அம்மா சொல்கிறாள்
மாமன் மகள் இருக்கிறாள் என்று
அப்பா சொல்கிறார்.

கண்ணோடு கண் பேசியது
கை ஜாடை காண்பித்தது
கவிதைகள் பல எழுதியது
கண்ணங்கள் சிவந்தது.

மறந்து விடு இவற்றையெல்லாம்
மன்னித்து விடு மற்றதையெல்லாம்
மாற்றி கொள் உன்னை
சாரி கேட்கிறேன் உன்னிடம்..

அத்தை மகளோ,மாமன் மகளோ
மணந்து கொள்கிறேன்..
அப்பா,அம்மா விருப்பபடி
விட்டு விடு என்னை..