காதல் படுத்தும் பாடு!!!

மனதை மனதோடு மட்டும் அல்லாமல் இயற்கையோடு ஒப்பிட்டு நண்பர்களோடும் பகிரும் ஆயுதமான கவிதைகளை ஓடையில் மிதக்கவிட்டு அழகு பார்க்கும் படுகை நண்பர்களின் கவித கவித! நீங்களும் படித்து மகிழ்வது மட்டும் அல்லாமல் உங்களது கவிதைகளையும் எங்களுடன் பகிர்ந்து, எங்களையும் உற்சாகப்படுத்துங்கள்.
Post Reply
மன்சூர்அலி
Posts: 708
Joined: Sun Dec 16, 2012 1:48 pm
Cash on hand: Locked

காதல் படுத்தும் பாடு!!!

Post by மன்சூர்அலி » Sun Sep 14, 2014 1:07 pm

காதல் படுத்தும் பாடு!!!

காதல் மலரும்போது முதல்
வாக்கியம் இதுவாகத்தான் இருக்கும்..


காகிதத்தில் உன் முகம்
கவிதைகளில் உன் முகம்
கை விரல்களில் உன் முகம்
எழுது கோலில் உன் முகம்..

கண் இமைகளில் உன் முகம்
இதயத்தில் உன் முகம்
இருட்டிலும் உன் முகம்
இருப்பதில் எல்லாம் உன் முகம்..


அந்த காதல் கசந்து போனால்
என் முகமும்,உன் முகமும்


வேறு விதமாக இருக்கும்
அந்த முகத்தையே இனி..
நான் காண வேண்டாம் என்று..
கலங்கி போய் நிற்கும்.இரு முகங்கள்...

முகத்திலே ஆரம்பித்து
முகத்திலே முடிவு பெறும்
காதல் படும் பாடும்
காதல் படுத்தும் பாடும் இதுதான்...
arojin
Posts: 3
Joined: Wed Apr 03, 2013 11:23 pm
Cash on hand: Locked

Re: காதல் படுத்தும் பாடு!!!

Post by arojin » Mon Sep 15, 2014 1:08 am

super bro super kavithai enaku migavum pidithathu
Post Reply

Return to “கவிதை ஓடை”