Page 1 of 1

வண்டு சொன்னது பூவிடம்!!!

Posted: Sun Sep 14, 2014 12:26 pm
by மன்சூர்அலி
வண்டு சொன்னது பூவிடம்!!!

:ro: :ro: :ro: :ro: :ro: :ro:
நீ வளர்ந்து வரும் போது
எல்லாம்..நீ எப்போது மலர்வாய்
என காத்திருந்தேன்..உனக்காக
நீயும் மலர்ந்தாய் பூவாய்..

என் உள்ளமும் மலர்ந்தது
பூவின் மணம் தெரிந்தது
முகர என் மனம் உறுத்தியது
உன்னை சுற்றி முள் வேலி இருந்தது..

நீ ரோஜா மலர் அல்லவா..
முள்ளிலே பிறந்த உன்னை..
நெருங்க முடியாமல்..நெருஞ்சி
முல்லாய் குத்துகிறது என் இதயம்..

என் காத்திருப்பு கவலை பட்டது
காலமும்..ஏமாற்றியது.. கலங்க பட்டேன்
நான்.. கண்ணிருடன் விடை பெறுகிறேன்.
நான்..உன்னை விட்டு...
:ro: :ro: :ro: :ro: :ro: :ro: