யாருக்கு கொடுத்தேன் நான்?

மனதை மனதோடு மட்டும் அல்லாமல் இயற்கையோடு ஒப்பிட்டு நண்பர்களோடும் பகிரும் ஆயுதமான கவிதைகளை ஓடையில் மிதக்கவிட்டு அழகு பார்க்கும் படுகை நண்பர்களின் கவித கவித! நீங்களும் படித்து மகிழ்வது மட்டும் அல்லாமல் உங்களது கவிதைகளையும் எங்களுடன் பகிர்ந்து, எங்களையும் உற்சாகப்படுத்துங்கள்.
Post Reply
மன்சூர்அலி
Posts: 708
Joined: Sun Dec 16, 2012 1:48 pm
Cash on hand: Locked

யாருக்கு கொடுத்தேன் நான்?

Post by மன்சூர்அலி » Thu Sep 11, 2014 10:31 am

யாருக்கு கொடுத்தேன் நான்?

நாட்டையும் வீட்டையும் விட்டு
நலமாய் நான் வாழ நாடு விட்டு
நாடு வந்தேன் நான்.. இங்கே
வியர்வைகள் பல நான் வடித்து..

கண் உறங்காமல் நான் தவித்து
காலத்தை கழித்து காசு பணம்
உண்டாக்கி நாடு சென்றேன் நான்
அம்மா கேட்டாள்.. இத்தனை

காலம் சம்பாரித்து யாருக்கு
கொடுத்தாய் என்று மனைவியும்
அப்படிதான் கேட்டாள். நான்
யாருக்குதான். கொடுத்தேன்???
Post Reply

Return to “கவிதை ஓடை”