Page 1 of 1

யாருக்கு கொடுத்தேன் நான்?

Posted: Thu Sep 11, 2014 10:31 am
by மன்சூர்அலி
யாருக்கு கொடுத்தேன் நான்?

நாட்டையும் வீட்டையும் விட்டு
நலமாய் நான் வாழ நாடு விட்டு
நாடு வந்தேன் நான்.. இங்கே
வியர்வைகள் பல நான் வடித்து..

கண் உறங்காமல் நான் தவித்து
காலத்தை கழித்து காசு பணம்
உண்டாக்கி நாடு சென்றேன் நான்
அம்மா கேட்டாள்.. இத்தனை

காலம் சம்பாரித்து யாருக்கு
கொடுத்தாய் என்று மனைவியும்
அப்படிதான் கேட்டாள். நான்
யாருக்குதான். கொடுத்தேன்???