Page 1 of 1

சேமிக்க கொடுத்த காசு சேலையாக மாறியது!!!

Posted: Thu Sep 11, 2014 9:59 am
by மன்சூர்அலி
சேமிக்க கொடுத்த காசு சேலையாக மாறியது!!!

கடல் தாண்டி சென்றால்.அங்கே
கவலை எல்லாம் தீரும் என்று
கட்டியவள் முனுமுனுக்க
கஷ்டபட்டாவது கரை சேர்வோம் என

கருத்தில் நான் கொண்டு
கனவுகள் பல கண்டு
கடன் வாங்கி வந்தேன் இங்கே
காசு பணம் சம்பாரிக்க..

காட்டரபி பாஷை புரியாமல்
கை ஜாடை காண்பித்தே
காசுகள் பல சம்பாரித்து
கட்டியவளை காண..

தாயகம் சென்றேன்..நான்..
சேமிக்க கொடுத்த காசு பணம்
எல்லாம் சேலையாக மாறி
இருந்தது..

என் மூலைக்கு எட்ட வில்லை
மூதேவி இப்படி செய்வாள்.. என்று.
முனங்கியது தான் மிச்சம்..
நான்..

சேலைகள் பல வாங்கினாலும்
கடனை தீர்த்திருக்கிறாள்..
கண்டு கொள்ளாமல்... நான்..
கட்டி அனைத்தேன் அவளை...