மாதுவிடம் மயங்கினேன்!!!

மனதை மனதோடு மட்டும் அல்லாமல் இயற்கையோடு ஒப்பிட்டு நண்பர்களோடும் பகிரும் ஆயுதமான கவிதைகளை ஓடையில் மிதக்கவிட்டு அழகு பார்க்கும் படுகை நண்பர்களின் கவித கவித! நீங்களும் படித்து மகிழ்வது மட்டும் அல்லாமல் உங்களது கவிதைகளையும் எங்களுடன் பகிர்ந்து, எங்களையும் உற்சாகப்படுத்துங்கள்.
Post Reply
மன்சூர்அலி
Posts: 708
Joined: Sun Dec 16, 2012 1:48 pm
Cash on hand: Locked

மாதுவிடம் மயங்கினேன்!!!

Post by மன்சூர்அலி » Tue Sep 09, 2014 3:14 pm

மாதுவிடம் மயங்கினேன்!!!

வாழ்க்கை என்னும் படகில்
ஏறி அமரும் போது
தேவைகள் அதிகம் என
கருத்தில் கொண்டு
கட்டிய மனைவியை
கண் கட்டி காட்டில் விட்டது போல்
திரை கடல் தாண்டி
திரவியம் தேட வந்தேன் நான்
வந்தது என் வாழ்கையில்
வசந்தம் வசதி எல்லாம்
ஒன்று கூடியது.. என்னிடம்...
அத்துடன் ஒரு மாது வந்தாள்
என்னிடம்..கண் கட்டி விட்டு
வந்த என் மனைவியை மறந்தேன்
இந்த மாதுவிடம் அடிக்கலாம் ஆனேன்
கண் கட்டி விட்டவள்
அப்படியே இருக்கிறாள்
இந்த மாது என் செல்வத்தை
எல்லாம் அள்ளி சென்றாள்..
என்ன சொல்வேன் கட்டியவளுக்கு...
Post Reply

Return to “கவிதை ஓடை”