சேலை செய்த வேலை...!
Posted: Tue Sep 09, 2014 3:03 pm
சேலை செய்த வேலை...
அயல் நாடு நான் சென்று
அயராது நான் உழைத்து
தாயகம் திருப்பும் போது
தாய்க்கு ஒரு சேலையும்
தாரத்திற்கு ஒரு சேலையும்
அன்பாய் வாங்கி சென்றேன்
அங்கே அம்மாவும்,அவளும்
அடி பிடி சண்டை அழகாய்
அரங்கேற்றினர்...இந்த சேலை
எனக்குத்தான்..அந்த சேலை
உனக்குத்தான் என்று...
அப்போது உருவான சண்டைதான்
என்னை உருக்குலைத்து நிறுத்தியது..
இப்போது நான் நீதி மன்றத்தில்...
அயல் நாடு நான் சென்று
அயராது நான் உழைத்து
தாயகம் திருப்பும் போது
தாய்க்கு ஒரு சேலையும்
தாரத்திற்கு ஒரு சேலையும்
அன்பாய் வாங்கி சென்றேன்
அங்கே அம்மாவும்,அவளும்
அடி பிடி சண்டை அழகாய்
அரங்கேற்றினர்...இந்த சேலை
எனக்குத்தான்..அந்த சேலை
உனக்குத்தான் என்று...
அப்போது உருவான சண்டைதான்
என்னை உருக்குலைத்து நிறுத்தியது..
இப்போது நான் நீதி மன்றத்தில்...