Page 1 of 1

மீண்டும் முகர்வேன் உன்னை!!!

Posted: Mon Sep 08, 2014 1:21 pm
by மன்சூர்அலி
:ro: மீண்டும் முகர்வேன் உன்னை!!!
:ro:
பூவுக்குள் ஒரு வண்டு
புகுந்து உள்ளே சென்று
பூவில் உள்ள தேனை
புன்னகைத்து குடித்தது...

பூவுக்கும் ஒரு சுகம் கிடைத்தது
வண்டுக்கும் ஒரு சுவை கிடைத்தது
அப்போது பூ.... கேட்டது...
என் இரத்தத்தை குடித்து..

நீ வாழ ஆசைபடுகிறாயா?? என்று..
அப்படியானால் உதிர்ந்து விடுகிறேன்...இன்று
நீ வாழ்ந்து கொள் என்று... பூ உதிர தொடங்கியது
வண்டு சொன்னது..நீ உதிர்ந்தாலும்.

என் கால்களில் ஒட்டி உள்ள
மகரந்த துளை வைத்து
உன்னை இனபெருக்கம் செய்வேன்.
நீ மீண்டும் மலர்வாய்..அடுத்த

தலைமறை காண்பதற்கு அப்போதும்
உன்னிடம் வருவேன் மீண்டும்
உன்னை முகர்வதற்க்கு... அப்போதும்
நீ மலர்ந்து மணம் பெறுவாய்..

நாம் வாழ்வதற்கு.....