Page 1 of 1

பூவும்,பொட்டுடன் ஒரு விதவை!!!

Posted: Thu Sep 04, 2014 9:32 am
by மன்சூர்அலி
பூவும்,பொட்டுடன் ஒரு விதவை!!!

விதவை ஒருவள்..கடை...
வீதிக்கு சென்றாள்...பூ..
விற்ற பூக்காரீயிடம்...
விலை கொடுத்து...பூ வாங்கினாள்...

அப்படியே, குங்குமமும் வாங்கினாள்
அருகில் உள்ளோர் எல்லாம்
ஆச்சரியமாக ஏற இரங்க அவளை
ஏறிட்டு பார்த்தனர்..ஏன்?.. ஏன்?..

விதவை வாங்க கூடாத ஒன்று அவள்
வாங்குகிறாள் என்று...அங்கே
கை ஜாடைகள் அரங்கேரியது
அவள் அதை கண்டு கொள்ளாமல்

வீடு வந்து சேர்ந்தாள்.. விதவை..
பூவையும்,பொட்டையும் வைத்தாள்
அவள்.. புகைபடத்திற்க்கு முதல் ஆண்டு
திதி அவள் கணவனுக்கு.. அன்று..