Page 1 of 1

காதல் ஏமாற்றம்!!!

Posted: Wed Sep 03, 2014 4:53 pm
by மன்சூர்அலி
காதல் ஏமாற்றம்!!!

கடை வீதிக்கு சென்றாள்
கன்னி ஒருத்தி..அங்கே...
கண்ணன் ஒருவனை..கண்டாள்.
கண்டதும் காதல் மலர்ந்தது..

கண்களில் காதல் உணர்ச்சி
கண்ணனும் கண்டான் அவளை
கண் இமைக்கும் நேரத்தில்
காதல் பரி மாற்றங்கள்...புத்துணர்ச்சி..

காதல் வலை விரிக்கப்பட்டன
காம பார்வைகள் வரவேற்றன
கவிதைகள் பல உலா வந்தன
காவியம் பல பாடின...

காலங்கள் கடந்து போனது...
கண்ணன் வெறும் கண்ணன் அல்ல.சில
கன்னிகளின் காதல் மன்னன் என அறிந்தாள்
காதல் கரைய தொடங்கியது
கவலை பட்டாள் அவள்...

கண்ணன் ஏமாற்றி விட்டானே..என்று..
கண்ணனை போல் ஏராளம் பேர்
காதலை காயபடுத்தவும்,
கலங்கபடுத்தவும்....

காத்திருக்கிறார்கள் என்று
கன்னி உணர்ந்து பார்த்தாள்..இன்று...
கண்ணனை மறக்க தொடங்கினாள்..
காதல் ஏமாற்றத்துடன்.......