Page 1 of 1

மனம் நிறைந்த மனைவியும் நீ!!!

Posted: Thu Feb 20, 2014 10:25 am
by மன்சூர்அலி
மனம் நிறைந்த மனைவி நீ!!!
தவித்த என் தாகத்திற்கு
தாயாக இருந்தவள் நீ...
தவித்த என் காமத்திற்கு
தாரமாக மாறியவள் நீ.

தவித்த என் உள்ளத்திற்கு
சந்தோசம் கொடுத்தவள் நீ.
தவித்த என் உடலுக்கு
உயிர் கொடுத்தவள் நீ.

தவித்த போது எல்லாம்.
தாராளமாய் தந்தவள் நீ...
கடவுள் அவதாரம் எடுத்தவள்...
என் மனம் நிறைந்த மனைவியும் நீ...

என் குடுபத்தின் தலைவி நீ.
என் குடுபத்தின் குல விளக்கு நீ.
என் குடுபத்தின் ஆணி வேர் நீ.
என் உயிர் நீ...

Re: மனம் நிறைந்த மனைவியும் நீ!!!

Posted: Sat Feb 22, 2014 8:27 pm
by agntvm
மன்சூர்அலி அவர்களுக்கு நன்றி
தங்கள் எழுதிய இந்த கவிதை
மிகவும் அருமையாக இருக்கிறது.
:great: :great: :great:
:great: :great: :great: