நீரில் மிதக்கும் தாமரை!!!
கண்யானம் ஆகி உன்
வீட்டில் தொட்டில் ஆட
வேண்டிய நேரத்தில். இன்னும்
கன்னி கழியாமல் இருக்கிறாய்..
ஒரு முதிர் கன்னியாய்
முப்பது வயதாகியும் உன் முகம்
முதிர் அடையவில்லையே...
ஒரு வீட்டுக்கு அண்ணியாக
போக வேண்டிய நீ இன்னும்
கன்னியா இருப்பது நியாயமா?
உன்னை பார்க்கும் போது
எல்லாம் நீ என் கண்களுக்கு
நீரில் மிதந்த தாமரையாய்
இல்லை இல்லை நீரில் மிதக்கும்
நிலவாய் பிரதிபலிக்கிறாய்..
நீ வருவாயா? என் தம்பிக்கு அண்ணியாய்?..