ஊனம் எல்லோருக்கும் தான்!!!

மனதை மனதோடு மட்டும் அல்லாமல் இயற்கையோடு ஒப்பிட்டு நண்பர்களோடும் பகிரும் ஆயுதமான கவிதைகளை ஓடையில் மிதக்கவிட்டு அழகு பார்க்கும் படுகை நண்பர்களின் கவித கவித! நீங்களும் படித்து மகிழ்வது மட்டும் அல்லாமல் உங்களது கவிதைகளையும் எங்களுடன் பகிர்ந்து, எங்களையும் உற்சாகப்படுத்துங்கள்.
Post Reply
மன்சூர்அலி
Posts: 708
Joined: Sun Dec 16, 2012 1:48 pm
Cash on hand: Locked

ஊனம் எல்லோருக்கும் தான்!!!

Post by மன்சூர்அலி » Tue Dec 03, 2013 11:21 am

ஊனம் எல்லோருக்கும் தான்!!!
ஊரார் சொன்னார்கள்
நான் ஊனம் உற்றவன் என்று
உள்ளம் சொன்னது...நான்
ஊனம் அற்றவன் என்று

உண்மையாக படித்து என்
உயர்வை காட்டினேன்
உயர் அதிகாரிகள் சொன்னார்கள்
ஊனமுற்றவனின் பட்டியலில்..

உன் பெயர் உள்ளது என்று
உண்மையாக சொல்ல போனால்
ஊனம் உற்றவன் நானில்லை
உயர் அதிகாரிகள் தான் என்று

உண்மையாக சொல்வேன்
உன் மதியையும் என்
மதியையும் ஒரு கணம்
ஒப்பிட்டு பார். நம்மில் யார்?...

மாற்று திறனாளி என்று...
மாற்று திறனாளி நானில்லை
மாறி வரும் உலகத்தில்
மாறிடுவோம் எல்லோரும்

நானும் ஒரு வகையில்
மாற்று திறனாளி தான். என்று.
மனங்கள் புண்படாமல்
மனதை திடபடுத்துவோம் எல்லோரும்.....
images HADI.jpg
தமிழ்வாணன்
Posts: 18
Joined: Fri Nov 15, 2013 10:41 pm
Cash on hand: Locked

Re: ஊனம் எல்லோருக்கும் தான்!!!

Post by தமிழ்வாணன் » Tue Dec 03, 2013 2:58 pm

MIGAVUM ARUMAI YANA VARIGAL
User avatar
muruganmk
Posts: 435
Joined: Wed Sep 04, 2013 6:59 pm
Cash on hand: Locked

Re: ஊனம் எல்லோருக்கும் தான்!!!

Post by muruganmk » Tue Dec 31, 2013 6:15 pm

நண்பா உங்கள் கவிதை மிகவும் அருமையாக உள்ளது நன்றி!
Post Reply

Return to “கவிதை ஓடை”