பருவம் உன்னோடு பேசுகிறது!!!

மனதை மனதோடு மட்டும் அல்லாமல் இயற்கையோடு ஒப்பிட்டு நண்பர்களோடும் பகிரும் ஆயுதமான கவிதைகளை ஓடையில் மிதக்கவிட்டு அழகு பார்க்கும் படுகை நண்பர்களின் கவித கவித! நீங்களும் படித்து மகிழ்வது மட்டும் அல்லாமல் உங்களது கவிதைகளையும் எங்களுடன் பகிர்ந்து, எங்களையும் உற்சாகப்படுத்துங்கள்.
Post Reply
மன்சூர்அலி
Posts: 708
Joined: Sun Dec 16, 2012 1:48 pm
Cash on hand: Locked

பருவம் உன்னோடு பேசுகிறது!!!

Post by மன்சூர்அலி » Sat Nov 23, 2013 2:02 pm

என் பருவம் உன்னோடு பேசுகிறது

நீ உன் வீட்டு வாசலில்
தண்ணீர் தெளிக்கும் போது
எனக்கு நீ பன்னீர் தெளிப்பது
போல் தான் என்னினேன்...

நீ கோலம்மிட வைக்கும்
ஒவ்வொரு புள்ளியும் என்னை
நீ முத்தம்மிட்டதாக தான்
கருதினேன்...நீ கடைசியாக...

போட்ட அந்த பொம்மை
கோலத்தில் கூட என் உருவத்தை
நானே கண்டது போல் இருந்தது
இது தான் பருவம் பேசுகிறதா?....

பருவத்தில் வரும் கோலமா?
பருவத்தின் கோளாறா?
பருவம் அழைகிறதா?
பருவம் துடிக்கிறதா?

காதல் மலர்கிறதா?
கற்பனைகள் வளர்கிறதா?
காமம் துடிக்கிறதா?
காட்சிகள் மாறுகிறதா?.

ஏன் இந்த கோலம் உனக்கு
பருவ கோளாரா?.. எனக்கு
உன் கோலம் கண்டு நான்
பாவம் பருவத்தில் பட்டேனே...
images KOLAM.jpg
Post Reply

Return to “கவிதை ஓடை”