ஒரு முதுமையின் பிரார்த்தனை!!!

மனதை மனதோடு மட்டும் அல்லாமல் இயற்கையோடு ஒப்பிட்டு நண்பர்களோடும் பகிரும் ஆயுதமான கவிதைகளை ஓடையில் மிதக்கவிட்டு அழகு பார்க்கும் படுகை நண்பர்களின் கவித கவித! நீங்களும் படித்து மகிழ்வது மட்டும் அல்லாமல் உங்களது கவிதைகளையும் எங்களுடன் பகிர்ந்து, எங்களையும் உற்சாகப்படுத்துங்கள்.
Post Reply
மன்சூர்அலி
Posts: 708
Joined: Sun Dec 16, 2012 1:48 pm
Cash on hand: Locked

ஒரு முதுமையின் பிரார்த்தனை!!!

Post by மன்சூர்அலி » Thu Nov 21, 2013 2:32 pm

ஒரு முதுமையின் பிரார்த்தனை!!!

கண்ணா என்னை இங்கே
விட்டு வீட்டு நீ எங்கே
செல்கிறாய்..உன்னை
பத்து மாதம் சுமந்து...

கண்ணுக்குள் வைத்து
கண்ணு இரண்டும் உறங்காமல்
கஷ்டப்பட்டு வளர்த்ததிற்க்கு
கூலி கொடுத்துவிட்டாயா...

நான் இந்த கோலத்தில்
இந்த இல்லத்தில் இருப்பது
உனக்கு சந்தோசம் என்றால்?
எனக்கும் சந்தோஷம் தான்...

எனது முதுமை இங்கே கழியட்டும்
உனது இளமை அங்கே கழியட்டும்
ஆனால் நீ உன் முதுமையில் இங்கே
வேண்டாம் என்று பிரார்த்தித்து கொள்கிறேன்...

நீ பூத்த மலர் நீ வாடி விட கூடாது என்று
என்னுள் ஏங்குகிறது என் உள்ளம்
அன்று நான் உன்னை கொஞ்சினேன்
இன்று உன்னிடம் கெஞ்சுகிறேன்... பத்திரமாய் இரு...
images.jpg
Post Reply

Return to “கவிதை ஓடை”