எளிதாக கோடி சம்பாதிக்க வைக்கும் ஆதி மந்திரம்

CashFeeder.Net தளத்தின் செயல்பாடுகள், வசதிகள், மற்றும் இதுபோன்ற Matrix தளங்களுக்கான டாலர் பணப்பரிமாற்ற சேவை, சந்தேகங்கள் மற்றும் உதவிகளைப் கேட்டுப் பெறுவதற்கான இடம்.
Post Reply
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

எளிதாக கோடி சம்பாதிக்க வைக்கும் ஆதி மந்திரம்

Post by ஆதித்தன் » Mon Oct 19, 2015 6:28 am

இல்லை இல்லை
இல்லை என்பதில்லாமல் எதுவுமில்லை
இருப்பதில்லாமல் இல்லையும் இல்லை
இல்லை இல்லை

இல்லை... இல்லைங்கிற இடத்திலிருந்துதாங்க நம்ம தொடங்குகிறோம். நம்மக்கிட்ட பெருசா பணம் ஏதுமில்லை. பணம் பெருசா இல்லைன்னா, இந்த உலகத்துல எதுவுமில்லை என்கிற மாயை முழுசா உருவாகிடிச்சி. ஆகையால், பணத்தினை கோடி கோடியாய் சம்பாதித்து, வன்னமயமான இப்புவனம் இல்லாதிருந்து உருவானது என்ற உண்மையோடு, நாமும் முதலீடு இல்லாமல் கோடீஸ்வரர் ஆகப்போவதும் உண்மை.

எதுக்கெடுத்தாலும் பணம்.. பணம்.. பணம். பணமிருந்தால் பாதாளம் மட்டுமில்லை வானுக்கும் பாயலாம் என்பது முற்றிலுமான உண்மை. இதற்கு நம்பிக்கைக்கோ, தன்னம்பிக்கைக்கோ இடம் கொடுக்காமல் அத்தனையையும் நாம் உண்மையாகக் கண்கூடாகப் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

பணம்... வேணுங்க, நிறைய வேணும், கோடி கோடியா வேணும். வேண்டுவதெல்லாம் நிறைவேற பணம் நிறைய வேண்டும் என்பது உங்களுக்கு தெரியாதது இல்லை. தெரிந்தும் அந்தப் பணத்தின் மீது ஆசைப்படாவிட்டால் எதுவும் நம்மிடம் இருப்பதில்லை. கொஞ்சமா ஆசைப்பட்டாலும் சரி, பெரிய்ய ஆசையாப்பட்டாலும் சரி, நிறைவேறப்போவது நம்ம விருப்ப ஆசை தாங்க. அதனால, ஆன்லைன் வேலைக்கு வருவாயாக எனக்கு மாதம் பத்தாயிரம் கிடைச்சா போதும், ஒர் முப்பதாயிரம் கிடைச்சா போதும்.. ஒர் இலட்சம் கிடைச்சா ரொம்ப மகிழ்ச்சியா இருப்பேன் என்கிறதுக்கு எல்லாம் மேலாக, ஆன்லைன் வேலை வழியாக கோடி கோடியா பணம் வேண்டும் என்று நல்ல ஆசையை மனதில் விதைப்பதில் தப்பொன்றும் கிடையாது.

இதெல்லாம் உங்களுக்கு பேராசையா தெரியலையா? அப்படின்னு தயவு செய்து நினைக்கவே நினைக்காதீங்க. சிலர் "பேராசை பெரும் நஷ்டம்" என்ற பழமொழியினை முன்னெடுத்து வைக்கலாம் அல்லது "ஆசையே எல்லா துன்பத்திற்கும் காரணம்" என்று சொல்லலாம்.

நீங்க மகிழ்ச்சியாக, எல்லாம் இரண்டான இவ்வுலகில் ஆசையில்லாமல் உலகமேது, துன்பமில்லாமல் இன்பமேது? எல்லாம் துறந்து இல்லா பேரின்பம் காண வேண்டும் என்ற ஆசையில் நீங்கள் இடர்களை சந்திக்கிறீர்கள் என்றால், இருப்பில் பேரின்பம் காண வேண்டும் என்ற ஆசையில் நான் இடர்களை சந்திக்கிறேன். ஆசையில்லாமல் இருக்க வேண்டும் என்பதும் ஆசைதான். ஆக, நம் இருவர்க்கும் மூலம், மன ஆசை. அதனை நிறைவேற்ற இருப்பது பூதம். இதனை புரிந்து கொண்டால் சுமைகள் இல்லை.. துன்பமும் இல்லை.

புரிதல் என்பதில் பலருக்கும் பிரச்சனை இருக்கிறது. அதனால் தான் ஆசிரியர்கள் வகுப்பெடுக்கும் பொழுது புரிஞ்சுதா? புரியுதா? என்று பலமுறை கேட்பார்கள். ஆனால், திரும்பவும் அதையே தானே சொல்லுவார் என்று பயந்து புரியாதவர்கள் வாய் திறப்பதில்லை, புரிந்தவர்கள் வாய் திறக்க வேண்டியதிலை. இப்படி வாய் திறக்காமலே இருந்துவிட்டால் நலம் பயத்துவிடும். ஆனால், மீண்டும் கேள்வியாய் கேட்டு சொல்லச் சொல்லுவார்கள்... அப்பொழுது பிரச்சனை பலர்க்கு தொடங்கிவிடும். அதனை அப்பொழுதே புரிதலில் தீர்க்காவிட்டால், நம்பிக்கை, தன்னம்பிக்கை என பிரச்சனைகள் பரவி நம்மை விதியாய் ஆட்டிப்படைக்க ஆரம்பித்துவிடும்.

ஏழைக்கும் சரி, கோடீஸ்வரனுக்கும் சரி அனைவருக்கும் விதிக்கப்பட்ட ஒர் நாள் என்பது 24 மணி நேரம்தான். இந்த 24 மணி நேரத்தினை 24/7 என வாரத்தின் ஏழு நாட்களும் சரியாகப் பயன்படுத்துபவர்கள், அவர்கள் எண்ணப்படி வாழ்வில் வெற்றிகளை அடைகிறார்கள். டிஜிட்டல் மார்க்கெட்டிங் உலகம் நாம் தூங்கும் பொழுதும் நமக்காக உழைக்க தயாராக இருக்கும் பொழுது, 24/7 முழுநேர வேலை என்பது இப்பொழுது பலருக்கும் சாத்தியமான ஒன்றாக மாறிவிட்டது. ஆகையால் முயற்சித்தால் உங்களாலும் கோடி கோடியாக சம்பாதிக்க முடியும்.

ஆண்டவன் உழைக்கக் கைகள் கொடுத்திருக்கிறான் என்று, எவ்வளவுதான் கஷ்டப்பட்டு உழைத்தாலும் ஊதியம் என்பது உள்ளத்தின் ஆசைகளை நிறைவேற்றத் தேவையானதாக இருப்பதில்லை. உலகில் ஏழைகள் என்று சொல்லப்படுபவர்கள் அனைவருமே கூலியாட்களாய் உழைப்பவர்களாகத்தான் இருக்கிறார்கள். அன்றாட தேவையாக உள்ள உணவுப்பொருட்களை கஷ்டப்பட்டு உழைத்துக் கொடுக்கும் விவசாயிகளின் நிலையும் அப்படித்தான் இருக்கிறது என்றுச் சொன்னால், மாயை உலகத்தினை நாம் புரிந்து கொள்ள வேண்டியது அவசியம்.

உழைப்பதில் மட்டுமே கண்ணும் கருத்துமாய் இருந்தால் நாம் இலட்சாதிபதியாய் ஆவது கூட கஷ்டமாகிவிடும் என்பதனால், பணி என்று உழைக்கச் சொல்வதனைக் காட்டிலும் அதிகமாக உங்களது புத்தியை சிந்திக்க வைக்கும் விதத்திலும், கனவுகளை விரித்து திட்டமிட்டு செயல்படுத்துவதன் மூலம் பணியே இல்லாமல் பணம் சம்பாதிக்கும் வழிமுறையைக் கூறியும் பணம் பணம் என்று பல பல பதிவுகளைச் செய்துள்ளேன்.

சிந்தனையால் திட்டம் வகுத்து காய் நகர்த்துவது மூலமாகவே மிக அதிகமான பணம் சம்பாதிக்க முடியும் என்பதனை இவ்வுலக நிஜங்களைப் பார்த்து தெரிந்து கொள்ளலாம். எந்தவொரு பணக்காரரும், தான் ஒருவரே உழைத்து பெரியவரானதும் கிடையாது, வயக்காட்டில் இறங்கி களை எடுப்பதும் ஒருவராய் கிடையாது. ஆனால் தனியாளாய் தனக்கான பணியாட்களை நிறுவுவதும், தன்னிடம் சரியாக வேலை செய்யாத நபரினை களை எடுக்கவும் தவறுவதில்லை.

புரிதல் என்பது ஆன்லைனில் கோடீகளை சம்பாதிக்க இருக்கும் நம்மிடம் கொஞ்சம் அதிகமாகவே இருக்க வேண்டும். அல்லது இந்த ஒர் பதிவினையாவது புரிந்து செயல்பட வேண்டும்.

இறைவன் இருக்கிறான் அல்லது இல்லை என்ற விடயத்தில் நான் விவாதம் செய்ய விரும்புவதே இல்லை. ஆனால், ஐம்பூதம் என்ற வான், காற்று, நெருப்பு, நீர் மற்றும் நிலம் ஆகிய ஐந்து பூதங்கள் உண்மை. அண்டமும் சரி, பிண்டமும் சரி, ஐம்பூதங்களால் ஆனவை. இவற்றின் மூலம் என்ன, இல்லை.

விரும்பிச் செய்தாலும் சரி, போகிறப் போக்குல நடந்தாலும் சரி, அங்கே நம்மை இயக்குவது யார்? மனம்.

பிறரால் சொல்லச் செய்தாலும், பணியாய் செய்தாலும், கட்டாயத்திற்குச் செய்தாலும், குடும்பத்திற்காய்ச் செய்தாலும் அங்கே நம்மை சமாதனப்படுத்துவது யார்? மனம்.

என் இதயமெல்லாம் நீயே!!! உனக்காக என் உயிரையும் கொடுப்பேன்!!! நான் வாழ்வதே என் குடும்பத்திற்காகத்தான்!!!

பாருங்கள், அனிச்சையாக செயல்படும் குருதி நிரம்பிய இதயத்திற்குள்ளும் அவளை/அவனை முழுமையாக நிரப்பி குருதிக்கான மதிப்பினை இல்லாமல் செய்வதும் யார்? இதுவரையில் அறியப்படாத அனிச்சை செயலான உயிரையும் மரிக்கத் துணிவதும், கட்டுக்குள் வைப்பதும் யார்? மனம்.

நடப்பதில் மகிழ்வதும், சமாதனம் கொள்வதும், பித்து பிடிப்பதும் யார், மனம்.

மூச்சுக் காற்றை உள்ளேயும் வெளியேயுமாய் விட்டுக் கொண்டே இருக்கும் நாம், விட்டக் காற்றினை உள்ளே இழுத்து விடவில்லை என்றுச் சொன்னால் உயிர் இல்லை. அந்த உயிர் மூச்சுக் காற்றினையும் அடக்கி ஆளவல்லது மனம்.

நம்மளை பெற்றெடுத்த தாய்க்கு, நமக்கு எப்படி கை கால், மூக்கு கண்ணு காது வாயின்னு உருவாக்கி குழந்தையாக பெற்றெடுத்தார்கள் என்பது தெரியுமா? இல்லை. தாயின் கருவறையில் அனிச்சை செயலாக நடக்கும் அச்செலுக்கும் செயல் தாக்கம் கொடுக்க வல்லது மனம்.

இவ்வல்லமை மிக்க மனம் நம்முள்ளே எங்கிருக்கிறது, எங்கிருந்து இயங்குகிறது என்றுக் கேட்டால், சிந்திக்கும் இயங்கு கட்டளைகளை பிறப்பிக்கும் மூளையா, அப்படியானால் ஒவ்வொருவர் மனதிலும் என்ன இருக்கிறது என்பதனை எண்ணங்களை சேகரித்து வைக்கும் மூளையிலிருந்து எடுத்துக் கொள்ளலாமா? .. நம் கம்ப்யூட்டர் நினைவகத்தில் மற்றொருவர் சேகரித்து வைத்திருப்பதனைக் கூட நாம் எடுத்துப் பார்த்து தெரிந்து கொள்கிறோம் அல்லவா? அப்படியிருக்கையில் மற்றொருவர் மனதில் என்ன இருக்கிறது என்பதனை எண்ணங்களைப் பார்த்து தெரிந்து கொள்ளலாமா? என்றால் இல்லை. அப்படியானல் மனம் என்பது அங்கும் இல்லை.. எங்கோ இருக்கிறது என்று உள்ளே அறிவியலார் தேடிக் கொண்டே இருக்கிறார்கள்.

பஞ்ச பூதங்களாலான இவ்வுடலை மனம் இயக்குவது போல பஞ்ச பூதங்களால் ஆன உலகத்தையும் இயக்கு வல்லது மனம். உள்ளத்தில் உருவாகும் அனைத்து ஆசைகளையும் உலகத்தில் நிறைவேற்ற வல்லதும் மனம் என்பதனை புரிந்து கொண்டால், கோடி கோடியாய் சம்பாதிக்க இருப்பதும் நிஜம் என்பதும் புரிந்துவிடும்.

பூவுலகத்தில் பல மந்திரத்தாலும் தந்திரத்தாலும் உருவாக்கப்பட்டது, பிணைக்கப்பட்டது என்ற உண்மை தெரியாவிட்டாலும், புரிதல் வேண்டும். மந்திர தந்திரங்களை இயக்குவது மனம் என்பதை புரிந்து கொள்ளுதல் வேண்டும்.

இல்லை என்பதில்லாமல் எதுவுமில்லை, இருப்பதில்லாமல் இல்லையும் இல்லை என்பதுதாங்க உண்மை.

அறிவியல் ரீதியாக உலகம் உண்டானது எப்படி என்று படித்தால் காற்றும்.. நெருப்பும் ..நீருமாய் நிலம் தோன்றி... உயிர்கள் தோன்றி என பரிணாம வளர்ச்சியாக மனிதன் தோன்றினான் என்று சொல்லியிருப்பார்கள். பஞ்ச பூதமாகிய வானுக்கு எல்லையில்லை.. அந்த இல்லைக்குள் தான் மற்ற பூதங்கள் அடக்கம். இல்லா இடமிருக்கையில் தான் இருப்பது நகர்கிறது, அத்தனையும் நிகழ்கிறது.

இல்லைங்கிறது எங்கும் வியாபித்து இருந்தாலும் மனிதனின் மனதிடம் மட்டும் தான் அகப்படுகிறது. அதற்காக நினைத்தவுடன் கையில் சிக்கிக் கொள்வது கிடையாது. அதிலும் முக்கியமாக புரிதல் இல்லாமல் இருக்கும் நாம், நம் மனதினை படிப்பது என்பதற்கே ஆழ்ந்து சிந்திக்க வேண்டும். உயரே இருக்கும் பொருளை ஏறி எடுக்க வேண்டும் என்பது போல, ஆழத்திலிருக்கும் மனதினை இறங்கித்தான் கைப்பற்ற வேண்டும்.

நான் வேறு, என் மனம் வேறு கிடையாது. ஆனாலும் நாம் அனைவருமே, நான் என்று நம் மனதிடமிருந்து பிரிந்து நிற்கிறோம் என்பதால்தான் பல பல பிரச்சனைகள். பஞ்ச பூதங்களை ஆளும் மனதினையே தன்னுள் வைத்திருந்தும் சொற்ப கோடிப் பணத்திற்காக கஷ்டப்படும் அவலம்.

புறச்சூழலால் நான் என்று மனதிடமிருந்து பிரிந்திருக்கும் நாம், அவ்வள சீக்கிரத்தில் மந்திர தந்திரங்களை புரிந்து கொள்ளவும் முடியாது, உள்ளம் நினைத்தது எல்லாம் அவ்ள எளிதில் அடையவும் முடியாது.

மன ஆசைப்படி அத்தனையும் கிடைக்க வேண்டும் என்றுச் சொன்னால் முதலில் புரிதல் வேண்டும், இரண்டாவது நம்பிக்கையும் தன்னம்பிக்கையும் வேண்டும். நான் இப்பதிவில் உங்களிடம் சொல்ல நினைப்பது அடுத்தடுத்து நான் கொடுக்க இருக்கும் எனது பயிற்சிகளை முழுமையாக தன்னம்பிக்கையுடன் செய்யுங்கள்... கண்டிப்பாக கோடீகளை கையில் பார்க்கலாம் என்பதுதான். ஆனாலும், புரிதல் என்பது இல்லை என்றுச் சொன்னால் அது முடியாது என்பதற்காகவே அடிப்படையான ஆதியைப் பற்றி நான் அறிந்த வகையில் சொல்ல வேண்டிய கட்டாயம். எந்தவொரு செயலுக்கும் அடிப்படையான மூலம் இல்லாமல் இல்லை. அடிப்படையை அறியாமல் அத்தனை எளிதில் வெல்ல முடியாது. ஆன்லைன் வேலை என்றுச் சொன்னாலும் டிஜிட்டல் மார்க்கெட்டிங் என்றுச் சொன்னாலும், மனம் ஒன்றிச் செய்தால் தான் வெற்றி பெற முடியும் என்பதால் மனதினை வலுப்படுத்தவே இப்பதிவு.

ஐம்பூதங்களை ஆளும் மனம், மின்னலைக் காட்டிலும் மிக வேகமாகப் பயணிக்கக்கூடியது. மிகப்பெரிய மாடமாளிகையில் இளமை முதல் முதுமை வரை என ஒர் வாழ்க்கையையே ஒரு மணி நேரத்தில் வாழ்ந்தது போன்ற கற்பனையை மனம் நமக்கு ஆசைகாட்டி மகிழும். ஆனாலும் காலத்தின் மூலம் இதனை அளக்கும் பொழுது ஒர் குழுந்தையை பெற்றெடுக்கவே பத்து மாதம் ஆகிவிடுகிறது.

ஒன்றறி வதுவே உற்றறி வதுவே
இரண்டறி வதுவே அதனொடு நாவே
மூன்றறி வதுவே அவற்றொடு மூக்கே
நான்கறி வதுவே அவற்றொடு கண்ணே
ஐந்தறி வதுவே அவற்றொடு செவியே
ஆறறி வதுவே அவற்றொடு மனமே
நேரிதின் உணர்ந்தோர் நெறிப்படுத் தினரே. '
– ( தொல்காப்பியம். பொருள். 571)

பரிணாம வளர்ச்சியின் அறிவியல் வரலாறு படிச்சீங்கன்னா, 460 கோடி வருடங்களுக்கு முன் பெரிய நெருப்பு நட்சத்திரம் வெடித்து சிதறி சூரியன் உருவாகியதாகவும் அதில் அமைந்த ஈர்ப்பு விசையால் மற்ற துண்டுகளை தன்னகத்தே ஈர்த்து சூரியமண்டலம் உருவாகியதாகவும் சொல்லப்பட்டிருக்கும். அப்படியே கொஞ்சம் சிந்தித்தீர்கள் என்றால்.. நிறைகுடம் தழும்பாது என்பது நினைவுக்கு வரும். அப்படின்னா அங்கே வெற்றிடம் இருந்திருக்கிறது, இல்லையால் வெடித்து சிதற முடிந்தது. இந்த இல்லை என்பதின் இல்லா இருப்பின் ஆசைதான் பரிணாம வளர்ச்சியாக பூதங்களும், ஓர் அறிவு உயிர்..ஈரறிவு உயிர் என்று மேன்மையான மனம் கொண்ட மனிதன் பிறக்க காரணமானது. முதல் மனிதன் 20 இலட்சம் ஆண்டுகளுக்கு முன் தோன்றியிருக்கக்கூடும் என்று அறிவியல் கூறுகிறது.

இல்லா இருப்பு என்பது அத்தனைக்கும் ஆசைப்படும்.. இல்லா மனம் அத்தனையையும் ஏற்று இயங்கும்.

ஓரரறிவு முதல் ஐந்தாம் அறிவு உயிரினங்களிடத்தில் இல்லாமை இருப்பு இருந்தது.. அது அடுத்தக்கட்ட ஆசையாக வளர்ச்சி பெற்றுக் கொண்டே ஆறாம் அறிவு நிலைக்கு மனம் என்பதோடு வந்துவிட்டது.

இல்லா மனம், நான்..நானென்று இல்லா இருப்பினை மறந்துவிட்டது. அவ்வப்பொழுது தோன்றும் இல்லா இருப்பின் ஆசைகளையும் கனவுகளையும் நோக்கிச் செயல்பட்டாலும், தந்திரங்களால் ஏற்பட்ட சூழல்களை தன்னகத்தே ஏற்று தடைக்கற்களை தானே போட்டுக் கொள்கின்றன. தன் ஆசைக்காக பெரிய பங்களா வீடு, ஆசையாக புது பைக், புதுப்புது டிசைனில் தங்க நகைகள், என்று இருப்பதனையே பிறரைப் பார்த்து ஏற்று மனம் இயங்குகிறதே தவிர... எப்பொழுதும் புதியதாக விரும்பும் இல்லா இருப்பின் ஆசையை நம்புவதும், நம்மால் இதுமுடியும் என்று தன்னம்பிக்கை கொண்டு இயங்குவதும் கிடையவே கிடையாது. இந்த புரிதல் தாங்க நம்மிடம் இருக்கும் பிரச்சனை.. அதனை தீர்க்கணும்.

ஒரே ஒர் உதாரணம் மட்டும் கொடுக்கிறேன், அதனையாவது நம்பி புரிதலை ஏற்படுத்திக் கொள்ளுங்கள், இல்லாவிட்டால் மேலும் பல வெற்றியாளர்கள் கட்டுரைகளை நீங்களே படித்து புரிதலை ஏற்படுத்திக் கொள்ளுங்கள்.

மறைந்த டாக்டர் அப்துல் கலாம் ஐயா அவர்கள் நம்மிடம் கேட்டுக் கொண்டது, கனவு காணுங்கள் என்பதுதான். அவர் தனது இல்லா இருப்பிடமிருந்து தோன்றிய ஆசைக்கனவுகளை நம்பி தன் மனதில் இருத்தி இயங்கியதன் விளைவாக, அவர் வெற்றி நாயகனாக உலா வந்தார்.

இல்லா மனிதனையையே 5 அறிவு ஜீவனிலிருந்து உருவாக்கியது இந்த இல்லா இருப்பின் ஆசை தான், உலகத்தில் அனைத்தையும் படைத்ததும் இந்த இல்லா இருப்பு ஆசைதான். உலகில் இருந்த புதிய கண்டுபிடிப்பாளர்கள் அனைவரும் சரி, இல்லா ஒன்றினை உருவாக்கியது அல்லது தெரியாததை கண்டுபிடித்தது என்பது இல்லா இருப்பின் ஆசையினை மனதால் நம்பி, தன்னம்பிக்கையோடு இயங்கியதுதான் காரணம்.

இருப்பின் ஆசையை நாம் முன்னிறுத்தி, மனதினை செம்மைப்படுத்தி சர்வ சாதரணமாக திட்டமிட்டு முயற்சித்தால் கூட எத்தனை பெரிய அசாத்திய செயல்களையும் பஞ்ச பூதங்களின் உதவியோடு இலக்கினை சரியாக அடைந்துவிட முடியும் என்பதுதான் உண்மை.

ஒர் குழந்தையை பெற்றெடுக்க நமக்கு 10 மாதங்கள் ஆவது போல, ஒவ்வொரு இலக்கையும் அடையவும் காலம் என்ற ஒர் நியதி உள்ளது. நான் பணக்காரன், நான் அதி புத்திசாலி என்பதற்கெல்லாம் கட்டுப்பட்டது அல்ல கர்ப்ப காலம். கர்ப்பத்தில் குழந்தை தானே வளர்வது போல, நமக்கான எவ்வளவு பெரிய இருப்பின் ஆசையும் சர்வ சாதரணமாக நம் மனதில் வளர்ந்து உண்மையாகிவிடும். இதற்கான கால அவகாசத்தினை முழு நம்பிக்கையோடு கொடுக்க வேண்டியது என்பதுதான் மிக முக்கியம்.

இல்லா இருப்பின் ஆசையை பிறப்பின் நோக்கம் என்று கூட சொல்வார்கள். எவரும் செய்ய முடியாத காரியத்தினை தன்னால் மட்டுமே செய்யப்பட வேண்டும் என்பதற்காக பிறப்பெடுத்தோம் என்பதுதான் பிறப்பின் நோக்கம், அதனை அடைந்துவிட்டால் முக்தி. ஆண்டவன் திருவடி அடைவது மட்டும்தான் முக்தி என்பது கிடையாது, இல்லா இருப்பின் ஆசையை அடைந்துவிட்டாலே பிறப்பு முக்தியடைந்துவிடும். ஆனால், பலரும் சூழலால் நம்பிக்கை இழந்து இயங்கு விசையான இல்லா மனதிற்கான தன்னம்பிக்கையை ஊட்டுவதில்லை என்பது மட்டுமில்லாமல், இல்லா இருப்பின் தனித்துவமான அசாத்திய ஆசைகளை நம்புவதே கிடையாது. மனிதர்களாகிய நாம் பிறந்ததே அசாத்திய ஆசையால் தான்.

ஆகையால் உங்களிடம் கேட்டுக் கொள்வதெல்லாம் ஏதெனில், அசாத்திய சாதனைகள் எல்லாம் பஞ்சபூதங்களால் நிறைவேற்றப்படுகின்றன என்ற உண்மையை புரிந்து கொள்ளுதல் வேண்டும். இதற்காக நாம் எதனையும் செய்ய வேண்டிய அவசியமில்லை. இல்லா இருப்பிற்கு இருப்பாக நாம் உறுதியான நம்பிக்கையோடும் தன்னம்பிக்கையோடும் மனதினை இருத்தி திட்டத்தில் பயணிப்பது மட்டுமே. மற்றப்படி பூதங்கள் தங்களது காய் நகர்த்தல்களை செய்து, ஆக்கங்களை பூர்த்தி செய்து நிஜமாக நம்மிடையே கொடுத்துவிடும்.

பெரும்பான்மையானவர்களின் மனம் என்பது இருப்பதனைத்தான் ஆசைப்படும். அவ்வாறு இவ்வுலகில் இருக்கும் அனைத்தையும் அடைய நமக்கு தேவையாக இருப்பது பணம். கோடி கோடியாக பணமிருந்தால் அதனை அடைந்துவிடலாம் என்ற நிலையில் தான் இங்கே நீங்கள் பணம் சம்பாதிக்கலாம் என்று வந்திருக்கிறீர்கள். உங்களிடம் புரிதல் என்பது தற்பொழுது முழுமையாக வந்திருக்கும். அடுத்து நம்பிக்கை என்பதனைத்தான் பார்க்க இருக்கிறோம்.

சாதித்துக்காட்டியவர்களின் வரலாறுகள் பல நீங்கள் படித்திருப்பீர்கள், அவர்களது விடாமுயற்சியில் இருந்த கஷ்டங்களையும் அறிந்திருப்பீர்கள், அப்படி இருக்கையில் எளிது எளிது என்று எதனை நாம் தேடுகிறோம். நிதானமாக யோசித்திப் பார்த்தால் எளிதானது என்பது எதுவுமே கிடையாதுங்க... நம்முடைய மன ஆசைதான் அதனை எளிதாக்கியிருக்கிறதே தவிர, எளிதானது என்பது எதுவும் கிடையாது.

உங்களுடைய ஆசை என்ன, நிறைய பணம் வேண்டும் என்பதுதானே. அப்படியிருக்க அதனை சம்பாதிக்க நாம் செய்ய இருக்கும் செயல் எப்படி கஷ்டமாகிவிடும்?

எப்படி எளிதானது கஷ்டமானது என்று சொந்தத் தொழிலைப் போன்ற இந்த ஆன்லைன் வேலையில் உங்களை நிர்பந்தப்படுத்துகிறீர்கள் என்பது எனக்கு புரியவில்லை. மாதம் பத்தாயிரம் மட்டும் போதுமா? ஐம்பதாயிரம் கொடுத்தா வேண்டாம் என்று சொல்லிவிடுவீர்களா?

மாதம் ஐம்பாதாயிரம் சம்பாதிப்பதற்கும் பத்தாயிரம் சம்பாதிப்பதற்கும் ஆயிரம் சம்பாதிப்பதற்கும் ஒரே வேலைதான். மற்றவர்கள் போல் பிரித்து பிரித்து பயிற்சிக் கொடுப்பது அல்ல படுகை.காம். இணையம் இருந்தால் செய்யும் வேலைகள் அனைத்தையும் ஒருங்கே இணைத்து ஆன்லைன் வேலை என்று பயிற்சிக்கிறது படுகை.காம். அந்த ஒரே ஆன்வேலையில்தான், கஷ்டம் என்று சொல்லுவார் ஆயிரம் சம்பாதிப்பார், எளிது என்று சொல்வார் பத்தாயிரம் சம்பாதிப்பார், இதுவே என் விருப்பப்பணி என்றுச் செய்வார் ஐம்பதாயிரம் சம்பாதிப்பார், அதற்கும் மேலும் சம்பாதிப்பார், அவ்ளதான்.

ஆரம்பக்கட்டத்தில் நூறு இருநூறு கூட சம்பாதிக்க முடியாத ஆன்லைன் வேலையில் தான் விடாமுயற்சில் தன்னம்பிக்கையோடு கடந்த 7 வருடங்களாக செய்து வருவதன் மூலம் தற்பொழுது மாதம் குறைந்தப் பற்றம் ரூ.30000 முதல் 1 இலட்சம் வரை சம்பாதிக்கிறேன். இதற்கான ஆதாரங்கள் அனைத்தும் உடனுக்கூடன் உண்மையாக உங்களோடு என்றப் பகுதியில் தினம் தினம் பதிந்து வருகிறேன். பிற உறுப்பினர்களும் தாங்கள் பெறும் ஆன்லைன் வருவாய் பண ஆதாரங்களையும் இங்கு பதிந்து வருகிறார்கள்.

பதியப்பட்ட பணம் ஆதாரம் அனைத்தும் உண்மை. இங்கு இருக்கும் நபர்கள் அனைவரும் உண்மையானவர்கள். உண்மையான எங்களை நம்பிக்கை கொள்ள எவரும் தயங்க வேண்டிய அவசியமே இல்லை. நிதானமாக ஒர் பத்து நாட்கள் எங்களோடு நட்பாக உறவாடி இத்தனையையும் உறுதி கொள்ளலாம். பத்து நாட்கள் போதவில்லை என்றுச் சொன்னால் 30 நாட்கள் பின்தொடர்ந்து கூட உங்களது நம்பிக்கையை கூட்டிக் கொள்ளலாம், தவறே இல்லை.

நம்பிக்கை என்பது இல்லாமல் தன்னம்பிக்கை வரவே வராது. தன்னம்பிக்கை இல்லாமல் எதுவும் நம்மிடம் வராது.

கோடிகள் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசையினை நிறைவேற்றுவதற்கு நம்மிடம் தன்னம்பிக்கை என்பது மிக அதிகமாக இருக்க வேண்டும். தன்னம்பிக்கையுடன் திட்டமிட்டு விடாமுயற்சியாக உழைப்பதற்கு புரிதலும் நம்பிக்கையும் கண்டிப்பாக வேண்டும் என்பதற்காகவே இந்த நீண்ட பதிவினைக் கொடுத்துள்ளேன்.

நான் ஆன்லைன் வேலையில் கடந்த 8 வருடமாக இருக்கிறேன் என்றுச் சொன்னால் அதற்கு காரணம் ஆன்லைன் உலகம் என்பது உண்மை என்பதனை நம்பியதுதான். ஆன்லைன் தொழில் மூலமே கூகுள் போன்ற பெரிய கம்பெனிகள் அன்றைய 2007-ஆம் ஆண்டில் முழுமையாக சம்பாதித்துக் கொண்டிருந்தன. இன்று நமது நம்பிக்கையை மேலும் உறுதிப்படுத்தும் விதமாக ஆப்-லைன் வழியாகவும் நம் அருகே கடைவிரித்து மேலும் மேலும் பெரிய ஜாம்பவான் ஆகிவிட்டார்கள்.

ஆன்லைன் வேலை என்பது உண்மை என்பதனை முதலில் நம்ப வேண்டும். கம்ப்யூட்டர் கோர்ஸ் என்று HTML படிக்கிறீர்கள், அதன் மூலம் வலைத்தளம் வடிவமைக்கலாம் என்பதும் உங்களுக்கு உண்மையாகத் தெரியும். அவ்வாறு வலைத்தளம் வடிவமைத்துக் கொடுப்பவர்கள் பணம் வாங்குகிறார்கள் என்பதும் உங்களுக்குத் தெரியும். கூடுதல் வாசகர்களைப் பிடிப்பதற்காக விளம்பரச் செலவாக, அவர்கள் பிறர்க்கு பணம் கொடுக்கிறார்கள் என்பதும் உங்களுக்குத் தெரியும். இதற்கு நடுவே கூகுள் போன்ற தரகர்களும் செயல்பட்டு கம்பெனிகளிடமிருந்து பணம் வாங்கி, ஆன்லைன் சுயதொழில் பணியாட்களுக்கு வழங்குகின்றன என்பதும் தெரியும், ஆன்லைனில் விற்பனைகள் பல நடக்கின்றன என்பது கூட உங்களுக்கு இப்பொழுது தெரியும்... இரண்டு கிளிக்கில் எந்தவொரு பொருளையும் ஆன்லைனில் புக் செய்தால், வீட்டுக்கே வந்து கொடுத்துவிட்டு பணம் வாங்கிக் கொள்கிறார்கள் என்பதும் உங்களுக்குத் தெரியும்... அந்த பணத்தினை வலைத்தளம் மற்றும் பொருள் உற்பத்தியாளர்கள் என அங்கே ஆன்லைனில் வேலை செய்பவர்கள் வருவாயாக பெருகிறார்கள் என்பதும் தெரியும், இப்படி ஒர் கம்பெனியா? ஊருக்குள்ளேயே பத்து இருக்கும் பொழுது, உலக அளவிலான ஆன்லைனில் இலட்சக்கணக்கான கம்பெனிகள் ஆன்லைனில் பணம் சம்பாதிக்க நமக்கு வாய்ப்புகள் வழங்குகின்றன.

ஆன்லைனில் இருக்கும் எல்லாம், ஆப்-லைனில் இருப்பவர்களால் தான் இயக்கப்படுகின்றன. அனைவரும் பணம் வருவாய் என்பது இல்லாமல் வாழ்வியலை நடத்த முடியாது என்ற உண்மை நமக்கு தெரியாமல் இல்லை. அப்படியிருக்க ஒருவர் பணம் கொடுப்பவராகவும் இருக்க வேண்டும், பணம் வாங்குபவராகவும் இருக்க வேண்டும் என்பது இயல்பு என்பதனை நம்மையே எடுத்துக் கொண்டாலும் உண்மைகள் தெரியும். காலையிலிருந்து இரவுக்குள் செலவாக மற்றவரிடம் பணத்தினைக் கொடுத்திருப்பீர்கள், இப்பொழுது அதே பணத்தினை மற்றொருவரிடமிருந்து பெற வேண்டும் என்பதற்காக வேலை என்று தேடி வந்திருக்கிறீர்கள். அதைப்போல் காலையிலிருந்து மாலை வரை வேலை என்று பணத்தினை சம்பாதித்தவர்கள் நேரே மற்றவரிடம் கொடுக்கத்தானே போகிறார், அது மொபைல் வாங்குவதாக இருந்தாலும் சரி, பைக் வாங்குவதாக இருந்தாலும், வீடு வாங்குவதாக, நகை வாங்குவதாக என எதுவாக இருந்தாலும் பணம் என்பது செலவு செய்யத்தானே. அவ்வாறு நாம் செலவு செய்வதன் மூலம் தானே பிறர் வருவாய் என்று எண்ணிக் கொண்டிருக்கிறார். நாமும் அப்படித்தானே வாங்கி எண்ணிக் கொண்டிருக்கிறோம்...

இல்லை...இல்லை... நான் புதுசு. இதுவரை நான் பணத்தினை செலவு மட்டுமே செய்து கொண்டிருந்தேன் என்றுச் சொன்னால்... எதற்கெல்லாம் நீங்கள் செலவு என்று கொடுத்தீர்களோ, அவை அனைத்துமே அவர்களுக்கு வருவாய்.

இப்பொழுது நீங்கள் கொஞ்சம் வளர்ந்து வந்துவிட்டீர்கள், உங்களது செலவுக்காக பணம் கொடுத்தவர்கள் என்ன செய்தார்கள் என்பது புரியும். என்ன செய்தார்கள் என்பது புரியாவிட்டாலும் ஒன்றினை மட்டும் நன்றாக புரிந்து கொள்ளுங்கள், காலத்தினை செலவிட்டார்கள். காலை வேலைக்குச் சென்றால் மாலைதான் வீடு திரும்பினார்கள்... அதுவரை பணம் சம்பாதிக்க வேலை செய்தார்கள். அதைப்போல் நீங்கள், தினம் ஆன்லைன் வேலை என்று செய்தால் கண்டிப்பாக உங்களுக்கும் வருவாய் பணம் கிடைக்கும்.

இப்பொழுது எல்லோர் வீடுகளிலும் கணினி என்ற ரீதியில் வளர்ந்து வருகிறது. எல்லோரும் கணிணியில் பணத்தினை செலவிடுகிறார்கள், எல்லோரும் பணத்தினை வருவாயாக பார்க்க முடியும்.. எல்லோரும் ஆன்லைனில் வேலை செய்யலாம் என்ற நம்பிக்கை பிறந்திருக்கும்.

என்ன சார் நீங்க, நம்பிக்கை இருக்கப்போய்தானே ஆன்லைன் வேலை என்று தேடி உங்களிடம் வந்திருக்கிறேன் அதுக்கப்புறமும் நம்பிக்கை இருக்கணும்னு இவ்வளவு கஷ்டப்பட்டு எழுதியிருக்கீங்களே.. எனக்கே படிக்க ரொம்ப கஷ்டமாப் போச்சு.. அப்படின்னா எழுதிய உங்களுக்கு எவ்வளவு கஷ்டமா இருந்திருக்கும்.... அப்படின்னு மனம் உங்களிடம் உணர்த்த ஆரம்பித்துவிட்டாலே, நீங்கள் ஆன்லைன் ஜாப் செய்ய தயார் ஆகிவிட்டீர்கள் என்று அர்த்தம்.

இலட்சங்களை சம்பாதிக்கும் நான் இதுகூடச் செய்யலைன்னா எப்படி கோடீஸ்வரன் ஆக முடியும்? ஆகையால் எனக்கு கஷ்டம் என்பதில்லை... கோடிகளை அடைய வேண்டும் என்ற இலக்கு மட்டுமே கண்களுக்குத் தெரிகிறது, அதற்காக நான் இப்பணியினை மிக மகிழ்வாகச் செய்து கொண்டிருக்கிறேன்.

ஆன்லைன் வேலை செய்ய வேண்டிய நமக்கு மிக முக்கியமானது தன்னம்பிக்கை. விடாமுயற்சி என்பது தன்னம்பிக்கை மூலம் தான் உறுதிப்படுத்தப்படுகிறது. நம்பிக்கை என்பது, இந்த வேலையை இவர் செய்கிறார், உண்மையாக பணம் வாங்கிக் கொண்டிருக்கிறார், இவரை நம்பி செய்யலாம் என்று ஆரம்பத்தில் பரிசோதிக்க வேண்டியது மட்டுமே. அவர் பல இலட்சம் சம்பாதித்தாலும் சரி, கோடிகள் சம்பாதித்தாலும் சரி, அவர் சம்பாதிக்கிறார் என்று நானும் சேர்ந்தேன், அவர் மீது மிகுந்த நம்பிக்கை கொண்டிருக்கிறேன் என்று உட்கார்ந்திருந்தோம் என்றால் ஒர் பைசாவும் நமக்கு வராது. அப்படிதான் இங்கே நிறையபேர் வேடிக்கைப் பார்த்துக் கொண்டே இருப்பார்கள், எனக்கு மிகுந்த நம்பிக்கை இருக்கு.. நானும் பணம் வாங்குவேன் என்று... ஆனால் உழைப்பினையும் தன்னம்பிக்கையும் கோட்டைவிட்ட காரணத்தினால் இலட்சியமாகவே நிற்கும்.

இலட்சியத்தினை இலட்சமாக மாற்ற வேண்டும் என்றுச் சொன்னால், அடுத்து நம் அளவில் நமது உழைப்பினைக் காட்ட வேண்டும், என்னாலும் முடியும் என்ற தன்னம்பிக்கை கொள்ள வேண்டும். தன்னம்பிக்கை உள்ள ஒருவர் விடாமுயற்சியாக செய்வது மட்டுமின்றி, ஒர் வருடம் இரண்டும் வருடம் ஆனாலும் தனது இலக்கினை அடையும் வரை தொடர்ந்து போராடிக் கொண்டே இருப்பார்கள், தோல்வி என்று பிறர் நினைப்பது எல்லாம் இவருக்கு படிக்கல்லாக தெரியும். தோல்விக்கான தவறுகளை எல்லாம் ஒருங்கே சேர்த்து படிக்கற்களை அமைத்து மேலெழும்பிச் செல்வதோடு, வெற்றிகளையும் அடைவார்கள்.

இப்படித்தாங்க உங்களைப்போல் ஆன்லைன் வேலை என்றுச் சொன்னால் என்ன என்றே தெரியாமல் உள்ளே புகுந்த நான், கொஞ்சம் கொஞ்சமாக படித்து நம்பிக்கை கொண்டதோடு, ஆப்-லைனில் கிடைக்கும் சம்பளத்தினைக் காட்டிலும் இதில் அதிக வருவாய் பார்க்க முடியும் என்ற நம்பிக்கையும் இருந்தது, நானும் வீட்டிலிருந்தபடியே ஆன்லைன் ஜாப்பில் சம்பாதிப்பேன் என்ற தன்னம்பிக்கை வந்தது.

எதுவும் தெரியாத ஒன்றில் முதலீடு செய்ய பணம் ஏதும் என்னிடத்தில் இல்லை. ஆனால் தெரியாததை கற்றுச் செய்வேன் என்ற தன்னம்பிக்கை இருந்தது, அந்த தன்னம்பிக்கையின் மூலம் பல மாதத் தேடல் மற்றும் சரியாக பயனளிக்கும் வழிமுறைகளைக் கற்றுக் கொள்ள இரண்டு வருட கடும் உழைப்பு எனக் கொடுத்தப் பின்னரே, எனது உழைப்பிற்கான வருவாய்களைப் பெற ஆரம்பித்தேன்.

சில வருடங்களுக்குப் பின் எனது மொத்த வருவாயினைக் கொண்டு சாராசரியாக மாதம் எவ்வளவு சம்பாதித்திருக்கிறேன் என்றுப் பார்த்தால் ரூ.21,000/மாதம். இதில் ஆரம்பக் கட்டத்தில் எனக்கு வருவாய் என்பதே கிடையாது... தற்போது சம்பாதித்து வரும் மாதம் ஒர் இலட்சம் என்பதன் சராசரிதான் அன்றைய பூஜ்ஜிய வருவாயினையும் 21000 என பூர்த்தி செய்கிறது.

அன்று பூஜ்ஜியம் தான் கிடைத்தது என்று என் மீது தன்னம்பிக்கை இல்லாமல் போயிருந்தால்... என் படிப்பிற்கு எங்கோ ஒர் கம்பெனியில் 7000 ஆயிரம் என்ற நிலையிலிருந்து இன்று அதிகப்பட்சம் ரூ.15000/- சம்பளத்தில் வேலை செய்து கொண்டிருப்பேன்.. அவ்ளதான். இப்படி ஒர் தனித்தலைவனாக சுயமாக என் வருவாயினை நிர்ணயிக்கும் திறமையும் இலட்சமும் சம்பாதிக்கும் வாய்ப்பும் கிடைக்காமல் போயிருக்கும்.

தன்னம்பிக்கையுடன் விடாமுயற்சியாக செய்தமையால் இன்று இலட்சம் கூட ஒரே மாதத்தில் சம்பாதித்துவிடுகிறேன். அத்தனையும் எனக்கு நான் கொடுத்த சுதந்திரமும், தன்னம்பிக்கையும், திட்டமிடுதலும், விடாமுயற்சியுமே தவிர... கடின உழைப்பு என்பது கிடையவே கிடையாது.

கஷ்டம் என்றுப் பார்த்தால் வருவாய் வராதது மட்டுமே ஆரம்பக்கட்டத்தில் கஷ்டமாக தெரிந்ததே தவிர வேறு எந்தவொரு கஷ்டமும் நான் சந்திக்கவில்லை, பணிகள் அனைத்தும் என் விருப்பம் என்பதும், செய்யும் கால நேரமும் என் விருப்பம் என்பதால் எல்லாமே எளிதாகவே இருந்தது.

அதாவது சுருங்கச் சொல்லப்போனால்... இதுதான் என் விருப்பப் பணி இவ்வளவு எளிதாகத்தான் வேலை செய்வேன்.. ஆனால் இந்த பணி மூலமே எனக்கு இலட்சங்கள் வேண்டும், கோடீஸ்வரன் ஆக வேண்டும் என்று என் மனதினை நான் உருப்படுத்திக் கொண்டதன் விளைவாக... பூதங்களால் கருவுற்று காலத்தில் பிறப்பெடுத்திருக்கிறது, அவ்ளதான்.

தற்பொழுது எனக்கு வந்து கொண்டிருக்கும் வருவாய் தொகைக்கும் எனது உழைப்பினையும் பார்க்கும் பொழுது நான் உணர்ந்த உண்மையின் விளைவாகத்தான், ஆரம்பித்திலேயே உங்களிடம் புரிதல் வேண்டும் என்று சொன்னதோடு, இல்லா இருப்பின் சக்தியையும் அதனை கையாளும் மனதின் வல்லமையும் தெளிவுறக் கூறினேன்.

தன்னம்பிக்கை என்பதே, தன்னுள்ளே இருக்கும் இல்லா இருப்பின் மீது நாம் கொள்ளும் தும்பிக்கைதான். தும்பிக்கை நாதனான தன்னம்பிக்கையை வணங்கி, அவனை ஆதாரமாகக் கொண்டு தொடங்கும் எதுவும் வெற்றியே!!!

நமது GBDgift ஆன்லைன் வேலையையும் தும்பிக்கையை மனதில் நிறுத்தியே இலட்சங்களை முதல்கட்ட இலக்காகக் கொண்டு காலத்தோடு சரியான பணியில் பயணிப்பதோடு, கோடிகளையும் விரைவாக சம்பாதிக்க இருக்கிறோம் என்பதனை உறுதி கொள்ளுங்கள்.

இரண்டாவது பயிற்சியில் உங்களிடம் விதைக்க நினைத்தது, புரிதல், நம்பிக்கை மற்றும் தன்னம்பிக்கை. இப்பதிவினை புரிந்து கொண்டவர்கள் அடுத்தக்கட்டமாக பணியில் களம் இறங்க தயாராகலாம்.

GBDgift.com பணியில் சேர வேண்டும் என்றுச் சொன்னால் ரூ.815 உறுப்பினர் கட்டணம் கொடுத்து, அக்கவுண்டினை அக்டிவேட் செய்ய வேண்டும். அதனை செய்துவிட்டால், அடுத்தடுத்து பயிற்சி என்று மட்டுமில்லாமல் GBDgift தளத்திற்கான பணியினையும் செய்து ரூ.10,00,000 (பத்து இலட்சம்) சம்பாதிப்பதற்கான அடித்தளத்தினை அமைப்பதோடு, கையிலும் பணத்தினை பார்க்க ஆரம்பித்துவிடலாம்.

எனக்கு யாரும் பயிற்சி கொடுக்காத காரணத்தினால் நானே தேடித்தேடி படிப்பதற்கு பல மாதங்கள், தவறான தளங்களில் வேலை செய்கிறேன் என்று கிடைத்த ஏமாற்றத்தால் காலம் கடந்து, படித்தவற்றில் இவற்றினை செய்தால் எளிதாக நிறைய பணம் சம்பாதிக்க முடியும் என்று செய்ய ஆரம்பத்ததில் எவ்வாறு சரியாக செய்வது என்பது தெரியாததால்..மீண்டும் மீண்டும் முயற்சி செய்ததில் தவறுகளை கண்டுபிடித்து களைந்து, சரியான பணித்திட்டத்தினை அமைத்து செய்ய இரண்டு வருடம் என்று நான் சரியானபடி பணிக்குள் வரவே காலம் நகர்ந்துவிட்டது. மற்றப்படி, இவை அனைத்தையும் கற்க தேவையான காலம் என்பது 90 நாட்கள் தான். அந்த 90 நாட்களிலேயே பணத்தினையும் சம்பாதிக்க ஆரம்பித்துவிடலாம்.

ஆரம்பத்தில் 90 நாட்கள் போதும் என்றுச் சொல்லாமல் கடைசியில் சொல்லக் காரணம், இரண்டு வருடம் என்றுச் சொன்னால் கூட உறுதியான தன்னம்பிக்கை பிறந்து தொடர்ந்து மனதளவில் ஆன்லைன் வேலை செய்யத் தயார் ஆகிவிட்டீர்களா என்பதற்காகத்தான். ஏனெனில் பலர், உடனே பணம் சம்பாதிக்கலாம் என்ற ஆசையில் இறங்கிவிட்டு, ஒரே மாதத்தில் பணம் கிடைக்கவில்லை என்று தொடர்ந்து செய்யாமல் திரும்பி விடுவதனை பார்ப்பதால், இந்த மனப்பயிற்சிப் பதிவில் உங்களுக்குத் தெளிவாக போதுமான அனைத்து விவரங்களையும் கொடுத்துள்ளேன்.

நீங்கள் வெற்றி பெற்றால் மட்டுமே எனது பயிற்சியின் நோக்கம் மகிழ்வடையும். ஆகையால் நீங்கள் தன்னம்பிக்கையுடன் விடாது முயற்சி செய்து சொல்வதனைச் செய்வதாக இருந்தால், உங்களை வெற்றியடையச் செய்யும் வரை ஒயாது உங்களுக்காக நான் உழைத்துக் கொண்டே இருப்பேன்.

மனதளவில் ஆன்லைன் வேலையில் சம்பாதித்து கோடீஸ்வரர் ஆகப்போகிறோம் என்ற தன்னம்பிக்கை உள்ளவர்கள் அடுத்தக்கட்டமாக GBDgift.com தளத்தில் ஒர் அக்கவுண்டினை ரிஜிஸ்டர் செய்து கட்டணம் செலுத்தி அக்டிவேட் செய்ய தேவையான உதவிக்கு இங்கு பின்னூட்டம் கொடுத்து பெற்றுக் கொள்ளலாம்.

எப்பொழுதும் மனதினில் நினைவில் கொள்ள,

Image

ஆதி தாயே
இல்லா இருப்பே
அருள்வாய்
இல்லா இருப்பே
ஆதி தாயே

இல்லா நீயிருக்க
இருக்க நானிருக்க
இல்லாதது உண்டோ
இவ்வுலகில்
இல்லாதது உண்டோ
இருக்க நானிருக்க
இல்லா நீயிருக்க

அத்தனையும்
அருளப்பெற்றேன்
ஆதி
அருளப்பெற்றேன்
அத்தனையும்
Image
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: எளிதாக கோடி சம்பாதிக்க வைக்கும் ஆதி மந்திரம்

Post by ஆதித்தன் » Mon Oct 19, 2015 6:55 pm

அசாத்தியங்கள் அனைத்தும் பஞ்ச பூதங்களால் நடப்பது, அதற்காக நாம் எதவும் அத்தனை கஷ்டப்பட வேண்டிய அவசியமில்லை... வாய்ப்புக் கதவினை திறந்து வைந்திருந்தால் போதும் என்று கூறினேன்.. அதுபடி நான் பல வெற்றியாளர்கள் கட்டுரைகளில் அதனை படித்துள்ளேன்...

தற்செயலாக சற்று நேரத்திற்கு முன் நான் தமிழ் எழுத பயன்படுத்தும், பிறரை தமிழ் எழுத பயன்படுத்த உபயோகப்படுத்தக்கூறும் அழகி சாப்ட்வேரின் டவுன்லோடு லிங்கினை ஒர் கோல்டு உறுப்பினர்க்கு கொடுப்பதற்காக எடுக்க அத்தளத்திற்குள் சென்ற பொழுது, அழகி சாப்ட்வேரினை உருவாக்கியவரின் சுயவிவரம் படிக்க வாய்ப்பு கிடைத்தது... அதிலும் அவர் சொல்லியிருப்பதனைப் பாருங்கள்...

மேலும் அவர் கொடுத்துள்ள ஒவ்வொரிகளும் நமக்கு மேலும் உற்சாகம் ஊட்டும் உண்மையான வரிகள்... அதனை முழுமையாக நீங்கள் படிக்க வேண்டும்... நான் இன்று படிக்க நேர்ந்தது கூட ஒர் அருமையான தருணமாக மகிழ்றேன். நான் சொன்னதில் பல அவரும் எழுதியிருக்கிறார்...

முழுமையாகப் படிக்க > http://azhagi.com/viewstam.html

அதிலிருந்து எடுத்த சில மட்டும்

1. தன்னம்பிக்கை (self-confidence).
கடின உழைப்பிற்கு (hard work) உதவுவது இது ஒன்றே.

2. இறை நம்பிக்கை (faith in god).
விடாமுயற்சிக்கு தூணாக இருப்பது இது ஒன்றே. 'Hard work ever pays' என்று ஆங்கிலத்தில் சொல்வார்கள். 'கடின உழைப்பு' எப்பொழுதும் பலன் அளிக்குமா என்பது ஐயமே. என் அனுபவத்தில் நான் கற்றது : 'Hard work with perseverance ever pays'. 'விடா முயற்சியுடன் கூடிய கடின உழைப்பு என்றும் பலன் தரும்'.

Q. கணினித்துறையில் இருந்த திறமையைப் பயன்படுத்த தமிழ் மென்பொருளாய்வு செய்தீர்களா? அன்றி தமிழின் மீதுள்ள ஆர்வத்தால் அதன் முன்னேற்றத்திற்கான ஓர் படி என்பதாலா?

இரண்டும் சேர்ந்த ஒரு கலவைதான் என்று சொல்ல வேண்டும். ஆனால், அதற்குரிய வாய்ப்பு அமைந்தது. ஏனென்றால், உண்மையில், நானாகவே ஒரு மென்பொருள் செய்வேன், அதுவும் தமிழின் முன்னேற்றத்திற்காகச் செய்வேன் என்று நான் ஒருபோதும் நினைத்துப் பார்த்ததில்லை. 'Blessing in Disguise' என்று ஆங்கிலத்தில் சொல்வார்களே - அது போல நானே மென்பொருள் செய்ய ஒரு வாய்ப்பு வந்தது. அந்த வாய்ப்பை தமிழ் மொழியின் முன்னேற்றத்திற்காகப் பயன்படுத்த வேண்டும் என்று இறைவன் நிர்ணயித்ததில் மகிழ்ச்சி.

ஒரு கொடிய வியாதியைத் தந்து, அதையே ஒரு தூண்டுகோலாக / பாலமாக / வரமாக ('அழகி' தமிழ் மென்பொருள் செய்ய) அமைத்த இறைவனுக்கு நன்றி. இல்லையென்றால், 'Also went to USA. Also settled in USA' என்றே என் வாழ்க்கை அமைந்திருக்கும். ஒரு மென்பொருள் சிற்பியாக இன்று பரிணமித்து, நானே தனிமனிதனாய்க் கண்டுபிடித்து உருவாக்கிய ஒன்று மற்றவருக்கு மிகுந்த பயனை அளிக்கும்பொழுது, அதற்காக அவர் நம்மை மனமாரப் பாராட்டி உள்ளத்து பேரன்பைத் தெரிவிக்கும்பொழுது ஏற்படும் 'ஓர் உணர்வு' (a special feeling), அது படைப்பாளிகளுக்கு மட்டுமே தெரியும். வார்த்தைகளால் என்றுமே விவாதிக்க முடியாது. எப்படி ஞானிகளால் தங்கள் நிலையை முழுமையாக எடுத்துச் சொல்ல முடியாதோ, அது போல..

பணம் தேவை. ஆனால், அதுவே வாழ்க்கை அல்ல. பல தலைமுறைகளுக்கு சம்பாதித்து வைத்தாலும், இறுதியில் அந்த பணம் கூட வரப் போவதில்லை. ஆனால், ஒன்று நிச்சயம் கூட வரும். நீங்கள் சம்பாதித்து வைக்கும் 'அன்பு'. எனவே அதை நிறைய சம்பாதியுங்கள். பாரதி சொல்கிறார் :

" ஊனுடலை வருத்தாதீர்; உணவியற்கை கொடுக்கும்;
உங்களுக்குத் தொழிலிங்கே அன்புசெய்தல் கண்டீர்! "
muthurajan
Posts: 21
Joined: Thu Jan 21, 2016 10:57 am
Cash on hand: Locked

Re: எளிதாக கோடி சம்பாதிக்க வைக்கும் ஆதி மந்திரம்

Post by muthurajan » Sun Feb 21, 2016 1:37 pm

Dear sir I want to send you 850 to join Gbdgiftcom immediately help me sir.
PH:8015916929.
Post Reply

Return to “இலட்சமே இலட்சியம்”