குங்கும தோஷத்திற்கு பரிகாரம்

பக்தி கதைகள், புராணங்கள், மகான்கள், இறைவழிபாடு மற்றும் ஆன்மிக சிந்தனைகளை கலந்துரையாடும் களம்.
Post Reply
cm nair
Posts: 1139
Joined: Tue May 21, 2013 12:59 pm
Cash on hand: Locked

குங்கும தோஷத்திற்கு பரிகாரம்

Post by cm nair » Fri Oct 11, 2013 9:09 am

சில இடங்களில் வைணவ, சைவ பேதங்கள் இன்னமும் இருந்து வருகிறது. ஆனால் விண்ணுலகிலோ, சித்தர்கள் மகரிஷிகளுடன், முப்பத்து முக்கோடி தேவர்களுடன் வைகுண்ட ஏகாதசியன்று சிவபெருமான் வைகுண்டத்திற்கு சென்று பெருமாளைப் பூஜித்திட, மகாசிவராத்திரி அன்று மகாவிஷ்ணுவே திருக்கயிலாயத்திற்கு சென்று சிவனைப் பூஜிப்பதும் நிகழ்கின்றது.

உடல் முழுவதும் விபூதி அல்லது திருச்சூர்ணம் தரித்து,ஸ்ரீ கோமதி சமேத ஸ்ரீசங்கர நாராயண ஆலயத்தை, பசு கன்றுடன் வலம் வந்து வழிபடுவது மிகச் சிறப்பான பிரார்த்தனையாகும். பெண்கள் குங்குமத்தை முன் வகிடு, நெற்றி மாங்கல்யம் ஆகிய மூன்று இடங்களிலும் நன்கு தரித்து வழிபட வேண்டும்.

குங்குமம் இடாது, ஓட்டுப் பிளாஸ்டிக் பொட்டு இடுவது பலத்த குங்கும தோஷத்திற்கு ஆளாக்கிவிடும். இதுகணவனின் ஆயுளைப் பாதிக்கும். இதுவரை அறிந்தோ, அறியாமலோ ஒட்டுப் பிளாஸ்டிக் பொட்டு இட்டு குங்கும தோஷத்திற்கு ஆளானோர் ஆடித்தபசு அன்று நிறைய ஏழைச் சுமங்கலிகளுக்கு குங்கும தானம் தந்து தக்க பரிகாரத்தை நாடிட வேண்டும்.
Post Reply

Return to “ஆன்மிகப் படுகை”