அர்த்தமில்லாலும் பின்விளைவு அறியாமலும் பேசிக் கொண்டிருப்பதை விடுங்கள்.
எந்த விஷயத்தையும், பிரச்சினையும் நாசுக்காக கையாளுங்கள், விட்டுக் கொடுங்கள்
சில நேரங்களில் சில சங்கடங்களை சகித்து தான் ஆக வேண்டும் என்பதை உணருங்கள்
எல்லோரிடத்திலும் எல்லா விஷயங்களையும், அவர்களுக்கு சம்பந்தம் உண்டோ? இல்லையோ சொல்லிக் கொண்டிருக்காதீர்கள்
உங்கள் கருத்துக்களில் உடும்பு பிடியாய் இல்லாமல் கொஞ்சம் தளர்த்திக் கொள்ளுங்கள்.
மற்றவர்களுக்குறிய மரியாதை காட்டவும், இனிய இதமான சொற்களை பயன்படுத்தவும் தவறாதீர்கள்.
புன்புறுவல் காட்டவும், சிற்சில அன்புச் சொற்களை சொல்லவும் கூட நேரமில்லாதது போல் நடந்துக் கொள்ளாதீர்கள்.
பிரச்சினை ஏற்படும் போது அடுத்தவர் முதலில் இறங்கி வர வேண்டும் என்று காத்திருக்காமல் நீங்களே பேச்சைத் துவங்க முன் வாருங்கள்.
நன்றி
(உள் மன ஆற்றல்கள்)