1. வேங்கட மலை: ‘வேம்’ என்றால் பாவம், ‘கட’ என்றால் ‘நாசமடைதல்’. பாவங்களைப் போக்கும் மலை என்பதால் இதற்கு ‘வேங்கட மலை’ என்று பெயர். இம்மலையில் வெங்கடாசலபதியாக (ஸ்ரீனிவாசன்) மகாவிஷ்ணு காட்சி தருகிறார்.
2. சேஷ மலை: பெருமாளின் அவதாரத்திற்காக ஆதிசேஷன் மலையாக வந்தார். இது ஆதிசேஷன் பெயரால் ‘சேஷமலை’ என்று அழைக்கப்படுகிறது.
3. வேதமலை: வேதங்கள் இங்கு மலை வடிவில் தங்கி எம்பெருமானை பூஜித்தன. எனவே இது ‘வேத மலை’ எனப்பட்டது.
4. கருட மலை: இங்கு சுவாமியை வணங்க வந்த கருடாழ்வார் வைகுண்டத்திலிருந்து ஏழுமலையை எடுத்து வந்தார். அதனால் இது ‘கருட மலை’ எனப் பெயர் பெற்றது.
5. விருஷப மலை: விருஷபன் என்ற அசுரன், இங்கு சுவாமியை வணங்கி மோட்சம் பெற்றான். அவனது பெயரில் இது ‘விருஷப மலை’ எனப் பெயர் பெற்றது.
6. அஞ்சன மலை: ஆஞ்சநேயரின் தாய் அஞ்சனை. தனக்கு குழந்தை பாக்கியம் கிடைக்க ஆதிவராகரை வேண்டி தவமிருந்தாள். அதன் பயனாக ஆஞ்சநேயரைப் பெற்றாள். இவளது பெயரில் ஏற்பட்ட மலை ‘அஞ்சன மலை’ எனப்படுகிறது.
7. ஆனந்த மலை: ஆதிசேஷன், வாயு பகவானுக்கிடையே போட்டி ஏற்பட்டபோது, மகாவிஷ்ணு நடுவராக இருந்தார். இருவரும் பலத்தில் சமமானவர்கள் என்று தீர்ப்பளித்தார். இதனால் வாயுவும் ஆதிசேஷனும் ஆனந்தம் அடைந்தனர். இதன் காரணமாக இது ‘ஆனந்த மலை’ என்று பெயர் பெற்றது.
திருப்பதி ஏழு மலைகளின் பெயர்கள்... காரணங்கள்...
-
- Posts: 727
- Joined: Sat Dec 08, 2012 8:31 am
- Cash on hand: Locked
-
- Posts: 217
- Joined: Tue Mar 06, 2012 7:42 pm
- Cash on hand: Locked
Re: திருப்பதி ஏழு மலைகளின் பெயர்கள்... காரணங்கள்...
திருப்பதி மலைகளை பற்றிய விளக்கம் அறிய தந்தமைக்கு நன்றி ....
-
- Posts: 727
- Joined: Sat Dec 08, 2012 8:31 am
- Cash on hand: Locked
Re: திருப்பதி ஏழு மலைகளின் பெயர்கள்... காரணங்கள்...
நன்றி.....மாலை வணக்கம்....
தெரிந்த நல்ல விசயங்களை படித்த நல்ல விசயங்களை ..கேட்ட நல்ல விசயங்களை ...
மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வதில் ஒரு சந்தோசமே..
தெரிந்த நல்ல விசயங்களை படித்த நல்ல விசயங்களை ..கேட்ட நல்ல விசயங்களை ...
மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வதில் ஒரு சந்தோசமே..