பூரண சரணாகதி

பக்தி கதைகள், புராணங்கள், மகான்கள், இறைவழிபாடு மற்றும் ஆன்மிக சிந்தனைகளை கலந்துரையாடும் களம்.
Post Reply
User avatar
srinath
Posts: 33
Joined: Fri Dec 14, 2012 3:57 pm
Cash on hand: Locked

பூரண சரணாகதி

Post by srinath » Fri Dec 14, 2012 7:03 pm

கலப்பட நெய் விற்றதாக ஒரு வியாபாரிக்கு நீதிபதி தண்டனை விதித்தார்.
தீர்ப்பு:
அந்த நெய் முழுவதையும் அவனே குடிக்க வேண்டும். இல்லையேல் 100 கசையடி அல்லது 100 வராகன் அபராதம்.
மூன்றினுள் நெய் குடிக்கவே அவன் விரும்பினான். மூட்டை நாற்றம் வீசும் நெய்யைக் குடிக்க முடியவில்லை. கசையடியே பரவாயில்லை என்றான். ஒரு டஜன் கசையடிக்கு மேல் தாங்க முடியவில்லை. அபராதத்துடன் விட்டுவிடக் கோரினான்.
இதை அவன் முதலிலேயே வேண்டியிருந்தால் நாற்றம் பிடித்த நெய்யைக் குடிப்பதையும், பொறுக்க முடியாத வலியையும் தவிர்த்திருக்கலாம்.
இதுபோல் தான் துன்பம் வாட்டும்போது முதலிலேயே கடவுளை அணுகி பலன் பெறாமல் வேறு பல யுக்திகளைக் கடைப்பிடித்து, தோற்று, இறுதியில் இறைவனிடம் சரணாகதி அடைகிறார்கள்.
Post Reply

Return to “ஆன்மிகப் படுகை”