துன்பமான சூழ்நிலையிலும்
-
- Posts: 727
- Joined: Sat Dec 08, 2012 8:31 am
- Cash on hand: Locked
துன்பமான சூழ்நிலையிலும்
அன்பு, அறிவு, பணம், இன்பம் என மனிதர்கள் தங்களது தேவைகளை நோக்கி ஓடிக்கொண்டிருக்கிறார்கள். இவற்றை பூர்த்தி செய்து கொள்வதன் மூலம் அவர்கள் மகிழ்ச்சி காண்கிறார்கள். ஆக, மகிழ்ச்சியை ஏற்படுத்திக் கொள்வதற்காகவே தேவைகளை நிறைவேற்றிக் கொள்கிறார்கள். இந்த மகிழ்ச்சியை, தேவைகளை அடைந்துதான் பெற வேண்டும் என்பதில்லை. மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்று மனதில் பரிபூரணமாக நினைத்தாலே போதும். அந்த மகிழ்ச்சி தானாகவே கிடைத்துவிடும். எந்தவொரு துன்பமான சூழ்நிலையிலும் மகிழ்ச்சியுடன்தான் இருக்க வேண்டும் என வரையறுத்துக் கொள்ளுங்கள். அதன்படியே வாழ்ந்தால், எல்லா தேவைகளும் உங்களது திறமைக்கு ஏற்ப தாமாகவே கிடைத்துவிடும்.