Page 1 of 1

விடாமுயற்சிக்கு செவ்வாய் துணை

Posted: Tue Sep 11, 2018 7:57 am
by ஆதித்தன்
எந்தவொர் சரியான செயலை எடுத்துச் செய்தாலும் விடாமுயற்சியுடன் செயல்பட்டால் வெற்றி நிச்சயம் என்றுச் சொல்வார்கள்.

பலரும் நம்மை கடைபிடிக்கச் சொல்லும் விடாமுயற்சிக்கு அதிபதியாக இருப்பவர் செய்வாய் கிரகம். இயல்பாகவே சிலர்க்கு செவ்வாய் கிரகத்தின் மின் காந்த சக்தி அதிகமாக இருப்பதால் அவர்கள் விடாமுயற்சியினை தான் எந்தவொரு சிரமும் இல்லாமல் எடுத்துக் கொள்வர்.

ஆனால், செவ்வாய் கிரகத்தின் மின் காந்த சக்தி குறைவாக உள்ள நபர்களால், விடாமுயற்சியாக போராட வேண்டும் என்று நினைத்துக் கொண்டு நாலு நாள் செயல்படுவார்கள் பின்னர் விட்டுவிடுவார்கள். அவர்கள் தங்கள் குறைகளை நிவர்த்தி செய்ய செவ்வாய் கிரக மின் காந்த சக்தி துணைபுரியும்.

சுக்கிரன் மின் காந்த சக்தியினை உட்கிரகித்துக் கொண்டால், செல்வம் நம்மிடம் குவியும் என்று ஒவ்வொரு வெள்ளிக் கிழமையும் நாம் விடாமுயற்சியுடன் சுக்கிரன் மின் காந்த சக்தியினை மூச்சின் வழியாக உள் இழுக்கவும், நம்மிடம் ஒர் பிடிவாதமும் விடாமுயற்சியும் இருக்க வேண்டும்.

ஆகையால், நமது போராட்டக் குணத்தினையும் விடாமுயற்சியினையும் அதிகரிக்க செவ்வாய் கிழமை சூரியன் உதய நேரத்தில் 12 நிமிடம் மூச்சினை உள்வாங்கும் பொழுது செய்வாயின் மின் காந்த சக்தி தன் உடலில் ஏறுகிறது என திடமுடன் உறுதியாக மனதால் ஏற்றுக் கொள்ளுங்கள்.

கிரகங்களின் துணைகொண்டு செயல்படும் பொழுது நம் எண்ணங்கள் யாவும் வெற்றியடையும்.

ஒவ்வொரு நாளும் அதிகாலை சூரிய உதயத்தின் பொழுது எழுந்து, நம் ஒர் விருப்பத்தினை அந்தந்த கிரகத்தின் காரகத்தோடு ஒன்றிணைத்து மனதினை வலுப்படுத்துவோர்க்கு விரைவில் நினைப்பது நடக்கும்.