முன் செய்த வல்வினையால்..... முந்தி வந்த விந்துத்துளி.! அடைத்து வைத்த தோல் பைக்குள் அடங்கிப்போய் சூல் கொள்ள...

பக்தி கதைகள், புராணங்கள், மகான்கள், இறைவழிபாடு மற்றும் ஆன்மிக சிந்தனைகளை கலந்துரையாடும் களம்.
Post Reply
User avatar
marmayogi
Posts: 1814
Joined: Sun Jul 06, 2014 9:40 pm
Cash on hand: Locked

முன் செய்த வல்வினையால்..... முந்தி வந்த விந்துத்துளி.! அடைத்து வைத்த தோல் பைக்குள் அடங்கிப்போய் சூல் கொள்ள...

Post by marmayogi » Mon Sep 04, 2017 10:26 am

முன் செய்த வல்வினையால்.....
முந்தி வந்த விந்துத்துளி.!
அடைத்து வைத்த தோல் பைக்குள்
அடங்கிப்போய் சூல் கொள்ள...

வெள்ளை இரத்தம் சிவப்பாகி
நாடி, நரம்பு சதை பிடித்து...
அவனவளாய் இனம் பிரித்து
பிண்டம் என உருவெடுத்து.....
ஐயிரண்டு மாதத்தில் அன்னையவள் உந்தி தள்ள.....

நச்சுப்பையுடன் ஒட்டி பிறந்து
அண்டமதில் அலைந்து திரிந்து...
அங்கும், இங்கும் கூத்தாடி
பொய்யை மெய்யாய் தினம் நாடி..
அகமதன் அர்த்தநிலை????

ஐய்யோ..............
ஒன்றும் புரியவில்லை.......!!!
சொந்த பந்த காட்டுக்குள்ளே
இன்பத் துன்பக் கூடு கட்டி......
இன்னொரு சதை பிண்டம் தேடி...
சேர்த்து வைத்த விந்தை கொட்டி ....

மீண்டும், மீண்டும்
பிறப்பெடுத்து பிறப்பெடுத்து......
பிறவியதன் கட்டறுக்க
இருக்கும் வழி காணாது.....
அப்பப்பா போதுமப்பா
கண்டுகொள்வோம் முலமதை.......!!!
உயிர்கொடுத்து உருட்டியவன்
உலகமதை திரட்டியவன்......!!!

பிறப்பு எனும் வட்டத்துக்கு செக்குமாடாய் நம்மை சுழற்றியவன்.......!!!

அவனை இனம் காண தேடி
நித்தம் தேடி ஓடி, ஓடி.......!!!
வெளியெங்கும் காணாது
வேறு வழி தெரியாது.......!!!
சுழல்கின்ற பூமியின் மேல்
சுற்றி, சுற்றி பிறந்து வந்து.....!!!

சூட்சுமத்தை உணராது
சுடுகாட்டில் பிணமாகி......!!!
மற்றுமொரு தோல்பைக்குள்
மாற்றமில்லா விந்தாகி......!!!

உள்ளுக்குள் உள் நுழைந்து....
உற்றவனை கண்டுகொண்டு.....!!!
அவனே நானாகி.....

நானே அனைத்துமாகி......!!!!
ஆதி அந்தம் தெளிந்து
உண்மையதை உணர்ந்து......!!!

அம்மாம்மா இறுதியில்
அண்டசராசரம் எங்கும்.....!!!
எல்லையற்று கலந்திருக்கும்
அது .......
என ஆனதப்பா முடிவினிலே
இது ............!!!

- அகத்தியர்
Post Reply

Return to “ஆன்மிகப் படுகை”