போகத்தையே யோகமாக்கும் வழியை சொல்கிறேன் கேளுங்கள்

பக்தி கதைகள், புராணங்கள், மகான்கள், இறைவழிபாடு மற்றும் ஆன்மிக சிந்தனைகளை கலந்துரையாடும் களம்.
Post Reply
User avatar
marmayogi
Posts: 1814
Joined: Sun Jul 06, 2014 9:40 pm
Cash on hand: Locked

போகத்தையே யோகமாக்கும் வழியை சொல்கிறேன் கேளுங்கள்

Post by marmayogi » Fri Oct 28, 2016 11:00 am

போகத்தில் இந்திரியம் பொங்காதுய்ய புத்தியுடன் புகன்றிடுவேன் அறிந்து கொள்வீர் பாகமுடன் பரி என்ற வாசி பூட்டி பக்குவமாய் ஓம்சிவாயவசி என்றே ஏகமணம் பேசாது நூறு செப்பி எகராமல் கும்பித்து புனர்வாயானால் தாகமுறும் மாமயில் ஆசை நீங்கும் தங்கிடும் உன் விந்திந்த விதமுமாமே


போகத்தையே யோகமாக்கும் வழியை சொல்கிறேன் கேளுங்கள் சிற்றின்ப போகத்தில் இந்திரியம் பொங்கிபெருகாது இருப்பதற்கு புத்தியுடன் உய்யும் வழியை சொல்கிறேன் அறிந்து கொள்வீர் வண்டியில் குதிரையை பூட்டி ஒழுங்கு தவறாமல் ஓட்டுவது போலபரி என்ற வாசியை முறையாக நடத்தி பக்குவமாய் ஓம்சிவாயவசி என்று ஒருமனதாய் இருந்து வாய் பேசாது மௌனத்தில் ஊன்றி நூறுமுறை செபியுங்கள்.

வாசியை வெளிவிடாமல் மெய்பொருளில் நிறுத்தி கும்பகம் செய்து புனர்வாயனால் மோககாமுரும் பெண்மயிலின்காம ஆசை தீர்ந்துவிடும் .இந்த முறையில் செய்யும் போகத்தில் விந்து சக்தியானது உன் இந்திரியத்தில் வெளியேறாது உடம்பின் உள்ளேயே தங்கிவிடும், இந்த இரகசிய யோகத்தை அனுபவத்தில் அறிந்து கொள்ளுங்கள்.

- பாட்டு சித்தர் ஓம் சக்தி நாராயணசாமி அவர்களின் ஸ்ரீ கோரக்கசித்தர் சந்திரரேகை 200 மூலமும் உரையும் = பாடல்57.பக்கம் 121
Post Reply

Return to “ஆன்மிகப் படுகை”