கேள்வி: ஐயா, நாம் படும் துன்பத்திற்கு எல்லாம் மனம் தான் காரணமா?
பதில் மனம் ஒன்றும் கெடுதல் செய்யவில்லை. மனதை நீங்கள் எப்படி பழக்கி வைத்திருக்கிறீர்களோ அவ்வழியே நீங்கள் தான் நின்று, சுருங்கி, விரிந்து, மலருகிறீர்கள். மனதை ஆட்டி வைப்பதற்கு யாரும் கிடையாது. மனதைக்கொண்டே நாம் யார் என்று பார்த்தோமானால், மனமே தான் நாமாக இருக்கிறது என வரும். நாம் என்ன செய்தாலும் எல்லாம் மனதின் அடித்தளமான ஜீவ காந்தத்தில் பதிகிறது. இது இறைவனின் ஆற்றல். இதைக் கொண்டு, மனம் நம்மை உயர்த்தும், தாழ்த்தும் எனத் தெரிய வரும். நாமும் மனதை உயர்த்தலாம், தாழ்த்தலாம்.
வாழ்க வளமுடன்!!
அருள்தந்தை வேதாத்திரி மகரிஷி
நாம் படும் துன்பத்திற்கு எல்லாம் மனம் தான் காரணமா?
- marmayogi
- Posts: 1814
- Joined: Sun Jul 06, 2014 9:40 pm
- Cash on hand: Locked