இறைநிலை விளக்கத்தை எளிதாக புரிந்து கொள்ளமுடிகிறது. ஆனால் பிற ஆன்மீக நூல்களைப் படித்து எளிதாக விளங்கிக் கொள்ள முடியவில்லை

பக்தி கதைகள், புராணங்கள், மகான்கள், இறைவழிபாடு மற்றும் ஆன்மிக சிந்தனைகளை கலந்துரையாடும் களம்.
Post Reply
User avatar
marmayogi
Posts: 1814
Joined: Sun Jul 06, 2014 9:40 pm
Cash on hand: Locked

இறைநிலை விளக்கத்தை எளிதாக புரிந்து கொள்ளமுடிகிறது. ஆனால் பிற ஆன்மீக நூல்களைப் படித்து எளிதாக விளங்கிக் கொள்ள முடியவில்லை

Post by marmayogi » Wed Aug 10, 2016 9:09 am

கேள்வி: தாங்கள் விளக்கும் போது இறைநிலை விளக்கத்தை எளிதாக புரிந்து கொள்ளமுடிகிறது. ஆனால் பிற ஆன்மீக நூல்களைப் படித்து எளிதாக விளங்கிக் கொள்ள முடியவில்லையே ஏன்?

பதில்: இறைநிலை பற்றிய விளக்கம் மிகவும் எளிதானதே. எல்லோராலும் சுலபமாக விளங்கிக் கொள்ள முடியும். இவ்வளவு எளிதாக உள்ளதை ஏன் இவ்வளவு சிக்கலாக்கினார்கள் என்று எண்ணிய போது என் உள்ளத்தில் எழுந்த ஒரு காட்சி இது. ஒரு நூல் கண்டை குழந்தையிடம் கொடுத்து விட்டு தாய் சென்று விடுகிறார். குழந்தை அதை எடுத்து கலைத்துப் போட்டு சிக்கலாக்கி விடுகிறது. பிறகு தாய்க்கு எது ஆரம்பம் என்று தெரியாமல் வெட்டி வெட்டி போட்டு விடுகிறாள். அதே போன்று தான் இறைநிலை விளக்கம் எல்லாம் துண்டு துண்டாகப் போய்விட்டது. பின்னால் வந்தவர்கள் அதை ஒன்றுபடுத்திப் பார்க்க இயலாமையே இறைநிலை பற்றிய விளக்கம் சிக்கலாகக் காரணமாகிறது.

வாழ்க வளமுடன்!!
அருள்தந்தை வேதாத்திரி மகரிஷி
Post Reply

Return to “ஆன்மிகப் படுகை”