கேள்வி: உயிராற்றலின் செலவே இன்பம் அல்லது துன்பம் என்று உங்கள் நூலில் வருகிறது. அப்படியாயின் உயிராற்றலின் செலவு இல்லாமல் வாழமுடியாதா? இந்த விஷயத்தில் இயற்கை செய்து வைத்திருக்கும் ஏற்பாடு என்ன?
உயிர் தான் இன்பத்தை உணர்கிறது. அதற்குப் புலன்கள் உதவியாக இருக்கின்றன. புலன்களின் வழியாக ஏற்படும் உயிரின் தன்மாற்றமே இன்பத்துக்கும் துன்பத்துக்கும் காரணமாக அமைகின்றன. எல்லா உயிரினங்களிலுமே பெருக்கம் இருப்பு மற்றும் செலவு என்ற வகையிலே உயிர்ச் சக்தி இயங்குகிறது.
உடலிலே இருக்கக் கூடிய உயிரின் இருப்பு அதிகமாகி, அந்தக் கூடுதலான இருப்பு புலன் வழியாகச் செலவாகும். அந்தச் செலவு, உடலுக்கும் உயிருக்கும் பொருத்தமான நிகழ்ச்சியாக அமைந்தால் இன்பமாக உணரப்படுகிறது. உயிர்ச் சக்தியின் குறைந்தபட்ச இருப்பை அச்செலவு தாண்டும் போது துன்பம் தோன்றுகிறது. உடலைக் கருவியாகக் கொண்டு புலன் வழியே தன் அலைகளால் உயிரே செலவாகி இன்ப, துன்பத்தை உணர்கிறது.
வாழ்க வளமுடன்!!
அருள்தந்தை வேதாத்திரி மகரிஷி
உயிராற்றலின் செலவே இன்பம் அல்லது துன்பம் என்று உங்கள் நூலில் வருகிறது.உயிராற்றலின் செலவு இல்லாமல் வாழமுடியாதா ?
- marmayogi
- Posts: 1814
- Joined: Sun Jul 06, 2014 9:40 pm
- Cash on hand: Locked