கேள்வி:
மனித வாழ்வின் நோக்கம் இயற்கை இன்பங்களை அனுபவித்து மனநிறைவு பெறுவதா?
இறைநிலையை அடைவதா?
பதில்:
சிற்றின்பமும் பேரின்பமும் இயற்கை இன்பங்கள்!
ஐயறிவால் அழுத்தம், ஒலி, ஒளி, சுவை, வாசனையை உணர்ந்து அனுபவிப்பது சிற்றின்பம்.இதை "இகஇன்பம்" என்கிறோம்.துன்பம் என்பதும் இதுதான்.சிற்றின்பம்தான் துன்பமாகவும் மாறுகிறது.
ஆறாவது அறிவால் சுவை, ஒளி, ஊறு,ஓசை, நாற்றம் என்பது என்ன?
இவற்றை அனுபவிக்கும் நான் யார்? அல்லது
மனம் என்பது என்ன? என்று ஐம்புலன்களையும் கடந்து சிந்தித்து விடை கண்டுகொண்ட மனித மனதின் நிலையே பேரின்பம்.இதை "பரஇன்பம் " என்கிறோம். ஆனந்தம் என்பதும் இதுவே.
இவ்விரு இன்பங்களையும் துய்த்து நிறைவு பெற்ற, ஆசையற்ற மனதின் நிலையே இறைநிலையை அடைந்த நிலை.
"ஆசையுள்ள ஐயறிவு -மனம்"
" ஆசையற்ற ஆறாவது அறிவு -தெய்வம்"
:- வேதாத்திரி மகரிஷி
மனித வாழ்வின் நோக்கம் இயற்கை இன்பங்களை அனுபவித்து மனநிறைவு பெறுவதா? இறைநிலையை அடைவதா?
- marmayogi
- Posts: 1814
- Joined: Sun Jul 06, 2014 9:40 pm
- Cash on hand: Locked