விண்துகள்களின் சுழற்சியால் ஒரு விரிவலை தோன்றுகிறது என்கிறீர்கள்.அவ்வலைகள் எங்கே எவ்வாறு முடிகின்றன என்பதை விளக்கமுடியுமா

பக்தி கதைகள், புராணங்கள், மகான்கள், இறைவழிபாடு மற்றும் ஆன்மிக சிந்தனைகளை கலந்துரையாடும் களம்.
Post Reply
User avatar
marmayogi
Posts: 1814
Joined: Sun Jul 06, 2014 9:40 pm
Cash on hand: Locked

விண்துகள்களின் சுழற்சியால் ஒரு விரிவலை தோன்றுகிறது என்கிறீர்கள்.அவ்வலைகள் எங்கே எவ்வாறு முடிகின்றன என்பதை விளக்கமுடியுமா

Post by marmayogi » Sat Jul 16, 2016 10:35 am

கேள்வி: ஐயா, விண்துகள்களின் சுழற்சியால் ஒரு விரிவலை தோன்றுகிறது என்கிறீர்கள். அவ்வலைகள் எங்கே எவ்வாறு முடிகின்றன என்பதை விளக்கமுடியுமா?

பதில்: விண்துகள்கள் (Infinitesimal Primaray Energy Particlae) என்று சொல்லக்கூடிய சுழல் அலை சுத்தவெளியில் உரசும் பொழுது தோன்றுவது (Secondarary Particle) விரிவலை. அதைச் சுற்றி அழுத்துகின்ற சுத்தவெளியால் கோள்வடிவம் பெற்று பின் சுத்த வெளியில் கரைகிறது. அவ்வாறு கரையும் இடத்தை அது காந்த வெளியாக்குகிறது. தண்ணீரில் ஐஸ் கட்டியைக் கரைத்தால் அதன் தன்மையாக குளிர்ச்சி நீரில் பரவுவதைப்போன்று, பிரபஞ்சம் முழுவதும் விண்துகள்களிலிருந்து விரிவலைகள் வெளிவந்து கொண்டேயிருக்கின்றன. ஒவ்வொரு விரிவலையிலும் அதன் மூலமான நுண்ணிய விண்துகளின் தன்மைகள் பதிந்து இருக்கும். விண்துகள்களிலிருந்து வருகிற விரிவலைகள் பிரபஞ்சம் முழுவதும் “காந்தக் களமாகவே” இருக்கிறது. இதை வான்காந்தம் என்கிறோம்.
வாழ்க வளமுடன்!!

அருள்தந்தை வேதாத்திரி மகரிஷி
Post Reply

Return to “ஆன்மிகப் படுகை”