கேள்வி: அருட்தந்தை அவர்களே, எலெக்ட்ரோன், புரோட்டான் நியூட்ரான் இந்த மூன்றில் எதை “வேதான்” என்று அழைக்கிறோம்?
பதில்: எலெக்ட்ரான், புரோட்டான், நியூட்ரான் மூன்றும் “வேதான்” தான். அதன் சுழற்சி வேகத்திற்குத் தகுந்தவாறு அது சுழலும் இடத்தைப் பொறுத்து பெயர் வைத்துள்ளார்கள். உதாரணமாக ஒரு குடும்பத்தில் தாத்தா, அப்பா, பேரன் என மூன்று பேர் இருந்தால் முதியவர் ஒரு காலத்தில் குழந்தையாயிருந்து அப்பாவாகி பிறகு தாத்தாவாகியுள்ளார். அதே போல பேரன் இன்னும் கொஞ்ச காலத்தில் அப்பாவாகி பிறகு தாத்தா ஆவார், மூவரும் மனிதர்கள் தான். இந்த மாதிரி இடத்திற்குத் தகுந்தவாறு பெயரே வித்தியாசப்படுகிறது.
எலக்ட்ரானே சுழல் வேகம் குறையும் பொழுது புரோட்டானாகி, பின் மையம் சென்று நியூட்ரானகி பிறகு சுழற்சி நிற்கும் பொழுது சுத்தவெளியாகிறது.
வாழ்க வளமுடன்!!
அருள்தந்தை வேதாத்திரி மகரிஷி
எலெக்ட்ரோன், புரோட்டான் நியூட்ரான் இந்த மூன்றில் எதை “வேதான்” என்று அழைக்கிறோம்?
- marmayogi
- Posts: 1814
- Joined: Sun Jul 06, 2014 9:40 pm
- Cash on hand: Locked