கேள்வி: இரவு 12.00 மணியிலிருந்து 3.௦௦ மணி வரை தவம் செய்யக்கூடாது என்று கூறுகிறார்களே!
அதன் காரணம் என்ன? அருட்க்காப்பு போட்டுக்கொண்டு அந்த நேரத்தில் தவம் செய்யலாமா?
மகரிஷி: அந்த நேரங்களில் மந்திரங்கள் தான் செய்யக்கூடாது.
சில மந்திரங்களுக்கு அதன் தன்மைக்கு தகுந்தாற்போல, சில இறந்த ஆன்மாக்களை இழுக்கக்கூடிய ஆற்றல் உண்டு.
எனவே அந்த நேரங்களில் மந்திரங்களைச் செய்தால் சில தீய விளைவுகள் ஏற்படலாம்.
தவம் செய்வதற்கு அவ்வாறு ஒன்றும் இல்லை.
எந்த நேரமும் தவம் செய்யலாம்.
கேள்வி: எந்த எந்த தவங்களை எந்த எந்த வேளைகளில் செய்யவேண்டும் என்பதை தெளிவு படுத்த வேண்டுகிறேன்.
காலையில் நேரம் அதிகம் இருந்தால் ஒன்பது மைய தவம் செய்யுங்கள். நேரம் குறைவாக இருந்தால் அதற்க்கு தகுந்தாற்போல் ஆக்கினையும் துரியமும் மட்டும் செய்யுங்கள்.
மாலை வேளையில் துரியாதீத தவம் செய்யலாம். அல்லது எந்த தவம் நீங்கள் செய்யவேண்டும் என்று விரும்புகிறீர்களோ அந்தத் தவத்தை செய்யலாம்.
முக்கியமாக ஒன்பது மைய தவம் செய்தால் எல்ல மையங்களும் இயக்கம் பெறும்.
வாழ்க வளமுடன்
;-வேதாத்திரி மகரிஷி
இரவு 12.00 மணியிலிருந்து 3.௦௦ மணி வரை தவம் செய்யக்கூடாது என்று கூறுகிறார்களே! அதன் காரணம் என்ன?
- marmayogi
- Posts: 1814
- Joined: Sun Jul 06, 2014 9:40 pm
- Cash on hand: Locked