ஒன்பது மைய தவத்தில் எல்லா மையங்களிலும் உயிர்ச் சுழற்சியை உணர முடியுமா?

பக்தி கதைகள், புராணங்கள், மகான்கள், இறைவழிபாடு மற்றும் ஆன்மிக சிந்தனைகளை கலந்துரையாடும் களம்.
Post Reply
User avatar
marmayogi
Posts: 1814
Joined: Sun Jul 06, 2014 9:40 pm
Cash on hand: Locked

ஒன்பது மைய தவத்தில் எல்லா மையங்களிலும் உயிர்ச் சுழற்சியை உணர முடியுமா?

Post by marmayogi » Thu Jun 23, 2016 9:19 am

கேள்வி: மகரிஷி, ஒன்பது மைய தவத்தில் எல்லா மையங்களிலும் உயிர்ச் சுழற்சியை உணர முடியுமா?

பதில்: நிச்சயமாக உணரலாம். ஒவ்வொரு மையத்திலும் மனம் நின்று பழக வேண்டும். மூலாதாரம், சுவாதிஸ்டானம், மணிப்பூரகம், அனாகதம், விசுத்தி போன்ற மையங்களில் தவம் செய்யும் பொழுது, அகத்தாய்வுப் பயிற்சிகளில் மனவளக்கலை பேராசிரியர்களின் வழிகாட்டுதலின்படி செய்து பழக வேண்டும். அம்மையங்களிலேயே மனதை வைத்துப் பழகுங்கள்.
முதலில் ஆக்கினை மற்றும் துரிய தவத்தில் தேர்ச்சி பெற்றால் மனம் நுண்மை நிலைக்கு வந்து விடும்! பிறகு ஒன்பது மைய தவம் எடுத்து செய்யும் பொழுது எல்லா மையங்களிலும் உயிர் சுழற்சியின் அழுத்தத்தை நன்றாக உணரலாம்.
வாழ்க வளமுடன்!!
அருள்தந்தை தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி
Post Reply

Return to “ஆன்மிகப் படுகை”